04-21-2004, 01:50 AM
<b>சபாநாயகர் தெரிவின் நடுநிலை- ஜாதிக ஹெல உறுமய</b>
சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவின் போது தமது கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்கப் போவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று ஐhதிக ஹெல உறுமயவின் அரசியல் உயர்பீடக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர், இரண்டு பிரதான கட்சிகளும் கூட்டாக இணைந்து சபாநாயகரைத் தெரிவு செய்யவேண்டும் எனத் தமது கட்சி வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகளுமே சபா நாயகர் தெரிவில் தமது கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு தம்மிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இருகட்சிகளும் ஒற்றுமையாக சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டும் என்றே தமது கட்சி எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டு சபாநாயகர் தெரிவுக்கு வாக்களிப்பொன்றை நடாத்துமாக இருந்தால் தமது கட்சி அந்த வாக்களிப்பில் கலந்து கொள் ளாது ஒதுங்கியிருக்கத் தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐhதிக ஹெல உறுமய சபாநாயகர் தெரிவு வாக்களிப்பில் கலந்து கொள்ளா விட்டால், ஐக்கிய தேசியக் கட்சிக்கே இந்தப் போட்டியில் வெற்றி கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, தமது கட்சி சார்பாக சபாநாயகர் தெரிவில் போட்டியிடவுள்ள முன்னாள் நீதிய மைச்சர் டபிள்யூ,Nஐ.எம். லொக்கு பண்டார எதிர்வரும் 21ஆ ம் திகதி சபாநாயகராக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவின் போது தமது கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்கப் போவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று ஐhதிக ஹெல உறுமயவின் அரசியல் உயர்பீடக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர், இரண்டு பிரதான கட்சிகளும் கூட்டாக இணைந்து சபாநாயகரைத் தெரிவு செய்யவேண்டும் எனத் தமது கட்சி வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகளுமே சபா நாயகர் தெரிவில் தமது கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு தம்மிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இருகட்சிகளும் ஒற்றுமையாக சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டும் என்றே தமது கட்சி எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டு சபாநாயகர் தெரிவுக்கு வாக்களிப்பொன்றை நடாத்துமாக இருந்தால் தமது கட்சி அந்த வாக்களிப்பில் கலந்து கொள் ளாது ஒதுங்கியிருக்கத் தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐhதிக ஹெல உறுமய சபாநாயகர் தெரிவு வாக்களிப்பில் கலந்து கொள்ளா விட்டால், ஐக்கிய தேசியக் கட்சிக்கே இந்தப் போட்டியில் வெற்றி கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, தமது கட்சி சார்பாக சபாநாயகர் தெரிவில் போட்டியிடவுள்ள முன்னாள் நீதிய மைச்சர் டபிள்யூ,Nஐ.எம். லொக்கு பண்டார எதிர்வரும் 21ஆ ம் திகதி சபாநாயகராக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

