04-19-2004, 08:55 AM
கருணாவை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டோர்பிரபாகரனிடம் நேரடியாக பயிற்சி பெற்ற படையணியினர்
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கருணாவை வெளியேற்றும் தாக்குதல் நடவடிக்கையில், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் நேரடி ப் பயிற்சியில் உருவாக்கப்பட்ட புதிய தாக்குதல் படையணி மிக முக்கிய பங்காற்றியதாகத் தற்போது தகவல்கள் கூறுகின்றன.
இது பற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில்:
புலிகளின் தலைவரால் மிக இரகசியமாகத் தெரிவு செய்யப்பட்டு அவராலேயே பயிற்சியளிக்கப்பட்ட இந்த விNர்ட படையணியின் மிக நுட்பமான தந்திரோபாயச் செயற்பாடுகளுக்கு வசதியாக எதிரியின் இலக்குகளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்குதல்களை நடத்தும் விதத்தில் மிக நவீன தொழில்நுட்ப ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த விNர்ட படையணிக்கு நீண்ட தூரம் ஊடுருவிச் சென்று தாக்குதல்களை நடத்தும் வகையில் சிறப்புப் பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் படையணியின் தாக்குதல் திறனும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதத் திறனும் எந்தப் பெரிய எதிரிக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் அவர்களை முற்றுமுழுதாக நிலை குலையச் செய்யும் விதத்திலும் அமையுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் வெருகலுக்குத் தெற்கே கேணல் சொர்ணம் தலைமையிலான திருகோணமலைப் படையணியும், ரமேர்; தலைமையிலான படையணியும் மேற்கொண்ட தாக்குதலின் போது இந்தப் படையணிகளின் உதவியுடன் மேற்படி விNர்ட படையணியும் களமிறங்கியிருந்தது.
மட்டக்களப்பிலிருந்து கருணா துரத்தியடி க்கப்பட்டதும், இந்தப் படையணியும் அங்கிருந்து உடனடியாகவே முற்றாக வாபஸ்பெற்றுவிட்டது.
பெருமளவில் தருவிக்கப்பட்ட மிக நவீன ஆயுதங்களை இலகுவாகக் கையாளும் விதத்தில் இந்தப் படையணிக்கு மிக நவீன பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்குரல்
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கருணாவை வெளியேற்றும் தாக்குதல் நடவடிக்கையில், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் நேரடி ப் பயிற்சியில் உருவாக்கப்பட்ட புதிய தாக்குதல் படையணி மிக முக்கிய பங்காற்றியதாகத் தற்போது தகவல்கள் கூறுகின்றன.
இது பற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில்:
புலிகளின் தலைவரால் மிக இரகசியமாகத் தெரிவு செய்யப்பட்டு அவராலேயே பயிற்சியளிக்கப்பட்ட இந்த விNர்ட படையணியின் மிக நுட்பமான தந்திரோபாயச் செயற்பாடுகளுக்கு வசதியாக எதிரியின் இலக்குகளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்குதல்களை நடத்தும் விதத்தில் மிக நவீன தொழில்நுட்ப ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த விNர்ட படையணிக்கு நீண்ட தூரம் ஊடுருவிச் சென்று தாக்குதல்களை நடத்தும் வகையில் சிறப்புப் பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் படையணியின் தாக்குதல் திறனும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதத் திறனும் எந்தப் பெரிய எதிரிக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் அவர்களை முற்றுமுழுதாக நிலை குலையச் செய்யும் விதத்திலும் அமையுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் வெருகலுக்குத் தெற்கே கேணல் சொர்ணம் தலைமையிலான திருகோணமலைப் படையணியும், ரமேர்; தலைமையிலான படையணியும் மேற்கொண்ட தாக்குதலின் போது இந்தப் படையணிகளின் உதவியுடன் மேற்படி விNர்ட படையணியும் களமிறங்கியிருந்தது.
மட்டக்களப்பிலிருந்து கருணா துரத்தியடி க்கப்பட்டதும், இந்தப் படையணியும் அங்கிருந்து உடனடியாகவே முற்றாக வாபஸ்பெற்றுவிட்டது.
பெருமளவில் தருவிக்கப்பட்ட மிக நவீன ஆயுதங்களை இலகுவாகக் கையாளும் விதத்தில் இந்தப் படையணிக்கு மிக நவீன பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

