04-17-2004, 11:34 AM
<img src='http://thatstamil.com/images21/cinema/soundarya-375.jpg' border='0' alt='user posted image'>
விமான விபத்தில் நடிகை சௌந்தர்யா சாவு
பா.ஜ.கவுக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் பலியானார். உடன் சென்ற அவரது சகோதரர் அமர்நாத் உள்பட மேலும் இருவரும் பலியாயினர்.
கர்நாடகத்தைச் சேர்ந்த சௌந்தர்யாவுக்கு சமீபத்தில் தான் பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியருடன் திருமணம் நடந்தது.
32 வயதான சௌந்தர்யா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் மதுமதி உள்ளிட்ட தமிழ், கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகை, நடிகையர்கள் களமிறங்கியுள்ள நிலையில் சௌந்தர்யாவும் சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். அக் கட்சிக்காக கர்நாடகத்தில் தீவிரப் பிரச்சாரம் செய்து வந்தார். நேற்று பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
இந் நிலையில் ஆந்திர மாநிலம் கரீம்நகரில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காக இன்று காலை பெங்களூரில் இருந்து 4 பேர் அமர்ந்து செல்லக்கூடிய செஸ்னா 180 ரக சிறிய விமானத்தில் கிளம்பினார். உடன் அவரது சகோதரர் அமர்நாத் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரும் சென்றனர்.
<img src='http://thatstamil.com/images21/cinema/flight-225.jpg' border='0' alt='user posted image'>
சுக்குநூறாய் சிதறிக் கிடக்கும் செஸ்னா விமானம்
அக்னி ஏவியேசன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானத்தை பா.ஜ.க. வாடகைக்கு எடுத்திருந்தது.
காலை பெங்களூர் புறநகரில் உள்ள ஜக்கூர் ராணுவ விமான தளத்தில் இருந்து அந்த விமானம் ஆந்திராவுக்குப் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அதில் தீப் பிடித்துக் கொண்டது.
இதையடுத்து மிக வேகமாகத் தரையில் மோதி விமானம் வெடித்துச் சிதறியது. விமான தளத்துக்குள்ளேயே அந்த விபத்து நடந்தது. இதில் சௌந்தர்யா, அமர்நாத், விமானி ஜாய் பிலிப்ஸ், ரமேஷ் சதன் என்ற பா.ஜ.க பிரமுகர் ஆகிய நால்வரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
நான்கு பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து, சிதைந்து போய்விட்டதாக கர்நாடக காவல்துறை டிஜிபி மடியாள் தெரிவித்துள்ளர்.
விமானமும் சுக்குநூறாகிப் போனது. தரையில் மோதிய வேகத்தின் அதன் கதவு 15 அடி தூரத்தில் பிய்ந்து போய் விழுந்தது.
ரஜினியுடன் படையப்பாவில் நடித்து தமிழில் பிரபலமான சௌந்தர்யா, தனது சொந்த மொழியான கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். கார்த்திக்குடன் பொன்னுமணி, விஜய்காந்துடன் தவசி, சொக்கத்தங்கம், ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, கமலுடன் காதலா.. காதலா.., பார்த்திபனுடன் இவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மதுமதி என்ற மாயாஜால படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
மொத்தம் நான்கு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தயாரித்த 'துவீபா' என்ற கன்னட படம் கடந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து அறிந்தவுடன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அனந்த்குமார் ஆகியோர் பிரச்சாரப் பணிகளை நிறுத்திவிட்டு சம்பவம் நடந்த விமான தளத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
<img src='http://thatstamil.com/images21/cinema/cessna-325.jpg' border='0' alt='user posted image'>
Cessna-180 single engine aircraft
thatstamil.com
விமான விபத்தில் நடிகை சௌந்தர்யா சாவு
பா.ஜ.கவுக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் பலியானார். உடன் சென்ற அவரது சகோதரர் அமர்நாத் உள்பட மேலும் இருவரும் பலியாயினர்.
கர்நாடகத்தைச் சேர்ந்த சௌந்தர்யாவுக்கு சமீபத்தில் தான் பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியருடன் திருமணம் நடந்தது.
32 வயதான சௌந்தர்யா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் மதுமதி உள்ளிட்ட தமிழ், கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகை, நடிகையர்கள் களமிறங்கியுள்ள நிலையில் சௌந்தர்யாவும் சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். அக் கட்சிக்காக கர்நாடகத்தில் தீவிரப் பிரச்சாரம் செய்து வந்தார். நேற்று பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
இந் நிலையில் ஆந்திர மாநிலம் கரீம்நகரில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காக இன்று காலை பெங்களூரில் இருந்து 4 பேர் அமர்ந்து செல்லக்கூடிய செஸ்னா 180 ரக சிறிய விமானத்தில் கிளம்பினார். உடன் அவரது சகோதரர் அமர்நாத் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரும் சென்றனர்.
<img src='http://thatstamil.com/images21/cinema/flight-225.jpg' border='0' alt='user posted image'>
சுக்குநூறாய் சிதறிக் கிடக்கும் செஸ்னா விமானம்
அக்னி ஏவியேசன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானத்தை பா.ஜ.க. வாடகைக்கு எடுத்திருந்தது.
காலை பெங்களூர் புறநகரில் உள்ள ஜக்கூர் ராணுவ விமான தளத்தில் இருந்து அந்த விமானம் ஆந்திராவுக்குப் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அதில் தீப் பிடித்துக் கொண்டது.
இதையடுத்து மிக வேகமாகத் தரையில் மோதி விமானம் வெடித்துச் சிதறியது. விமான தளத்துக்குள்ளேயே அந்த விபத்து நடந்தது. இதில் சௌந்தர்யா, அமர்நாத், விமானி ஜாய் பிலிப்ஸ், ரமேஷ் சதன் என்ற பா.ஜ.க பிரமுகர் ஆகிய நால்வரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
நான்கு பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து, சிதைந்து போய்விட்டதாக கர்நாடக காவல்துறை டிஜிபி மடியாள் தெரிவித்துள்ளர்.
விமானமும் சுக்குநூறாகிப் போனது. தரையில் மோதிய வேகத்தின் அதன் கதவு 15 அடி தூரத்தில் பிய்ந்து போய் விழுந்தது.
ரஜினியுடன் படையப்பாவில் நடித்து தமிழில் பிரபலமான சௌந்தர்யா, தனது சொந்த மொழியான கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். கார்த்திக்குடன் பொன்னுமணி, விஜய்காந்துடன் தவசி, சொக்கத்தங்கம், ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, கமலுடன் காதலா.. காதலா.., பார்த்திபனுடன் இவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மதுமதி என்ற மாயாஜால படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
மொத்தம் நான்கு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தயாரித்த 'துவீபா' என்ற கன்னட படம் கடந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து அறிந்தவுடன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அனந்த்குமார் ஆகியோர் பிரச்சாரப் பணிகளை நிறுத்திவிட்டு சம்பவம் நடந்த விமான தளத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
<img src='http://thatstamil.com/images21/cinema/cessna-325.jpg' border='0' alt='user posted image'>
Cessna-180 single engine aircraft
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

