04-17-2004, 10:37 AM
கருணாவுடன் இணைந்து செயற்பட்ட பலர் மீண்டும் புலிகள் அமைப்பில் இணைய விருப்பம்
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களை விடுதலைப் புலிகள் மீண்டும் தமது ப10ரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையடுத்து கருணா மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அவருடன் இணைந்து செயற்பட்டுவந்த பல முக்கியஸ்தர்கள் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைய முன்வந்துள்ளனர்.
இது தொடர்பான தங்கள் விருப்பத்தை அவர்கள் உள்@ர் தலைவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
வினோதன் படையணித் தளபதி ஜிம்கெலி தாத்தா, கருணா அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் விசு, நிர்வாகப் பொறுப்பாளர் துரை, வாகனப் பிரிவுப் பொறுப்பாளர் திருமால் மற்றும் நிசாம், சர்மா உட்படப் பலர் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, கருணாவின் பிடியில் மட்டக்களப்பு இருந்த காலத்தில் அட்டகாசம் புரிந்தவர்களை மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், விடுதலைப் புலிகளின் வாகரை மீட்பு நடவடிக்கையின்போது காயமடைந்த தளபதி பாரதிராஜ் புலிகள் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நன்றி - தினக்குரல்
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களை விடுதலைப் புலிகள் மீண்டும் தமது ப10ரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையடுத்து கருணா மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அவருடன் இணைந்து செயற்பட்டுவந்த பல முக்கியஸ்தர்கள் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைய முன்வந்துள்ளனர்.
இது தொடர்பான தங்கள் விருப்பத்தை அவர்கள் உள்@ர் தலைவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
வினோதன் படையணித் தளபதி ஜிம்கெலி தாத்தா, கருணா அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் விசு, நிர்வாகப் பொறுப்பாளர் துரை, வாகனப் பிரிவுப் பொறுப்பாளர் திருமால் மற்றும் நிசாம், சர்மா உட்படப் பலர் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, கருணாவின் பிடியில் மட்டக்களப்பு இருந்த காலத்தில் அட்டகாசம் புரிந்தவர்களை மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், விடுதலைப் புலிகளின் வாகரை மீட்பு நடவடிக்கையின்போது காயமடைந்த தளபதி பாரதிராஜ் புலிகள் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

