04-16-2004, 10:28 AM
இந்தியா இன்னிஸ் வெற்றி! தொடரை வென்று புதிய வரலாறு!!
வெள்ளி, 16 ஏப்ரல் 2004
லக்ஷ்மிபதி பாலாஜி, அனில் கும்ளே ஆகியோரின் அபார பந்து வீச்சின் உதவியால் பாகிஸ்தான் அணியை ஒரு இன்னிங்ஸ் 131 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொரையும் வென்று புதிய வரலாறு படைத்துவிட்டது!
ராவல்பிண்டியில் நடைபெற்ற 3வது இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளான இன்று இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 376 ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
2 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி, இன்று காலை தமிழக வீரர் லக்ஷ்மிபதி பாலாஜியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் துவக்க முதலே திணறியது.
பாகிஸ்தான் அணியின் 3வது விக்கெட்டை வீழ்த்துவதற்குள் பாலாஜியின் பந்து வீச்சில் கிடைத்த 5 கேட்ச் வாய்ப்புக்களை இந்திய வீரர்கள் நழுவவிட்டனர். அதன் பிறகு ஒரு அருமையான பந்தொன்றை வீசி காம்ரான் அக்மாலை க்ளீன் போல்ட் செய்தார் பாலாஜி.
அடுத்து பந்து வீச வந்த நெஹ்ரா, தனது முதல் ஓவரிலேயே யாசிர் ஹமீதை வீழ்த்தினார். லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி மேலெழும்பிய பந்தை கிளான்ஸ் செய்ய முயன்றார் யாசிர் ஹமீத். பந்து அவருடைய மட்டையைத் தொட்டுக் கொண்டு பின்னால் சென்றது. அதனை பார்த்தீவ் பட்டேல் அபாரமாக பாய்ந்து பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.
பாகிஸ்தான் அணியை தோல்வியிலிருந்து மீட்கும் சுமை இன்சமாம், யூசஃப் யுஹானா ஆகியோர் தோள்களில் வீழ்ந்தது. அதே நேரத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் இவர்களை வீழ்த்த வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு எழுந்தது. அதனை பாலாஜி சாதித்தார்.
ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி லேசாக ஸ்விங் ஆகி சென்ற பந்தை முன்னால் சென்று இன்சமாம் தடுத்தாட, பந்து அவருடைய மட்டையின் விளிம்பை உரசிக்கொண்டு பார்த்தீவ் பட்டேலின் கைக்குள் அடைக்கலமானது.
94 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் விழுந்த பாகிஸ்தான் அணியை காப்பாற்ற ஆசிம் கமால் களமிறங்கினார். கங்குலி பந்தை அடித்த போது முழங்கையில் பட்டு சிகிக்சை எடுத்துக் கொண்டிருந்த ஆசிம் கமால், தோல்வியைத் தவிர்க்க ஒவ்வொரு பந்தையும் பெருமுயற்சி செய்து தடுத்தாடுவதும், பிறகு வலியால் துடிப்பதும் பார்ப்பதற்கு மிக வருத்தமாக இருந்தது. தோல்வியைத் தவிர்க்க முடியாது என்பது நிச்சயமாக தெரிந்த பின்னரும், சிகிச்சை பெற்றுவரும் ஒரு வீரரை இப்படி இறக்கி துன்பப்படுத்த வேண்டுமா என்கின்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடைசி வரை வலியை பொறுத்துக் கொண்டு 90 பந்துகளை எதிர்கொண்டு 13 பௌண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கமால் திரும்பியது பாரட்டிற்குரியதுதான்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய யூசஃப் யுஹானா, கும்ளேயின் பந்துகளை தொடர்ந்து அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். ஆனால் கும்ளே வீசிய பந்தொன்றை நேராக அடிக்க முயன்று அவரிடம் கேட்ச் கொடுத்து 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்திலேயே மொஹம்மது சமியை வீழ்த்தினார் கும்ளே. அடுத்து ஆடவந்த ஷோயப் அக்தர் 14 பந்துகளில் 4 பௌண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் 28 ரன்கள் எடுத்து கும்ளேயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அக்பரும் 12 ரன்கள் எடுத்து கும்ளேயின் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்தும் பொறுப்பை டெண்டுல்கருக்கு வழங்கினார் கங்குலி.
அவருடைய பந்தை நேராக தூக்கி அடிக்க முயன்றார் டேனிஷ் கனேரியா. பந்து அவருடைய மட்டையின் விளிம்பில் பட்டு பாய்ண்ட்டின் மீது மேலெழும்பிச் செல்ல அதனை கங்குலி பிடித்துவிட, பாகிஸ்தான் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஒரு அணியாக எல்லா விதத்திலும் சிறப்பாக ஆடிய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 131 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3வது டெஸ்ட்டையும், முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் தொடரையும் வென்றது.
தமிழக வீரர் பாலாஜி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த டெஸ்ட்டில் மட்டும் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறியபோது பந்து வீச அழைக்கப்பட்ட கும்ளே 8 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் கதையை முடித்தார்.
இந்த டெஸ்ட் போட்டியின் நாயகனாக ராகுல் திராவிடும், தொடர் நாயகனாக வீரேந்திர ஷேவக்கும், சிறந்த பந்து வீச்சாளராக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ளேயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Source: Webulagam
வெள்ளி, 16 ஏப்ரல் 2004
லக்ஷ்மிபதி பாலாஜி, அனில் கும்ளே ஆகியோரின் அபார பந்து வீச்சின் உதவியால் பாகிஸ்தான் அணியை ஒரு இன்னிங்ஸ் 131 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொரையும் வென்று புதிய வரலாறு படைத்துவிட்டது!
ராவல்பிண்டியில் நடைபெற்ற 3வது இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளான இன்று இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 376 ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
2 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி, இன்று காலை தமிழக வீரர் லக்ஷ்மிபதி பாலாஜியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் துவக்க முதலே திணறியது.
பாகிஸ்தான் அணியின் 3வது விக்கெட்டை வீழ்த்துவதற்குள் பாலாஜியின் பந்து வீச்சில் கிடைத்த 5 கேட்ச் வாய்ப்புக்களை இந்திய வீரர்கள் நழுவவிட்டனர். அதன் பிறகு ஒரு அருமையான பந்தொன்றை வீசி காம்ரான் அக்மாலை க்ளீன் போல்ட் செய்தார் பாலாஜி.
அடுத்து பந்து வீச வந்த நெஹ்ரா, தனது முதல் ஓவரிலேயே யாசிர் ஹமீதை வீழ்த்தினார். லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி மேலெழும்பிய பந்தை கிளான்ஸ் செய்ய முயன்றார் யாசிர் ஹமீத். பந்து அவருடைய மட்டையைத் தொட்டுக் கொண்டு பின்னால் சென்றது. அதனை பார்த்தீவ் பட்டேல் அபாரமாக பாய்ந்து பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.
பாகிஸ்தான் அணியை தோல்வியிலிருந்து மீட்கும் சுமை இன்சமாம், யூசஃப் யுஹானா ஆகியோர் தோள்களில் வீழ்ந்தது. அதே நேரத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் இவர்களை வீழ்த்த வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு எழுந்தது. அதனை பாலாஜி சாதித்தார்.
ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி லேசாக ஸ்விங் ஆகி சென்ற பந்தை முன்னால் சென்று இன்சமாம் தடுத்தாட, பந்து அவருடைய மட்டையின் விளிம்பை உரசிக்கொண்டு பார்த்தீவ் பட்டேலின் கைக்குள் அடைக்கலமானது.
94 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் விழுந்த பாகிஸ்தான் அணியை காப்பாற்ற ஆசிம் கமால் களமிறங்கினார். கங்குலி பந்தை அடித்த போது முழங்கையில் பட்டு சிகிக்சை எடுத்துக் கொண்டிருந்த ஆசிம் கமால், தோல்வியைத் தவிர்க்க ஒவ்வொரு பந்தையும் பெருமுயற்சி செய்து தடுத்தாடுவதும், பிறகு வலியால் துடிப்பதும் பார்ப்பதற்கு மிக வருத்தமாக இருந்தது. தோல்வியைத் தவிர்க்க முடியாது என்பது நிச்சயமாக தெரிந்த பின்னரும், சிகிச்சை பெற்றுவரும் ஒரு வீரரை இப்படி இறக்கி துன்பப்படுத்த வேண்டுமா என்கின்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடைசி வரை வலியை பொறுத்துக் கொண்டு 90 பந்துகளை எதிர்கொண்டு 13 பௌண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கமால் திரும்பியது பாரட்டிற்குரியதுதான்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய யூசஃப் யுஹானா, கும்ளேயின் பந்துகளை தொடர்ந்து அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். ஆனால் கும்ளே வீசிய பந்தொன்றை நேராக அடிக்க முயன்று அவரிடம் கேட்ச் கொடுத்து 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்திலேயே மொஹம்மது சமியை வீழ்த்தினார் கும்ளே. அடுத்து ஆடவந்த ஷோயப் அக்தர் 14 பந்துகளில் 4 பௌண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் 28 ரன்கள் எடுத்து கும்ளேயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அக்பரும் 12 ரன்கள் எடுத்து கும்ளேயின் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்தும் பொறுப்பை டெண்டுல்கருக்கு வழங்கினார் கங்குலி.
அவருடைய பந்தை நேராக தூக்கி அடிக்க முயன்றார் டேனிஷ் கனேரியா. பந்து அவருடைய மட்டையின் விளிம்பில் பட்டு பாய்ண்ட்டின் மீது மேலெழும்பிச் செல்ல அதனை கங்குலி பிடித்துவிட, பாகிஸ்தான் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஒரு அணியாக எல்லா விதத்திலும் சிறப்பாக ஆடிய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 131 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3வது டெஸ்ட்டையும், முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் தொடரையும் வென்றது.
தமிழக வீரர் பாலாஜி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த டெஸ்ட்டில் மட்டும் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறியபோது பந்து வீச அழைக்கப்பட்ட கும்ளே 8 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் கதையை முடித்தார்.
இந்த டெஸ்ட் போட்டியின் நாயகனாக ராகுல் திராவிடும், தொடர் நாயகனாக வீரேந்திர ஷேவக்கும், சிறந்த பந்து வீச்சாளராக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ளேயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Source: Webulagam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

