04-14-2004, 05:18 PM
கருணாவினால் அரசியற் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விசு, மீண்டும் வி.பு.களுடன் இணைந்துள்ளார்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 14 ஏப்பிரல் 2004, 23:33 ஈழம் ஸ
மட்டக்களப்பு-அம்பாறை விடுதலைப் புலிகள் தனியாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த கருணா, அப்பகுதியின் அரசியற் பொறுப்பாளராக விசு என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி கோபாலனை நியமித்திருந்தார்.
மட்டக்களப்பை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த விசு, புதன்கிழமை மாலை விடுதலைப் புலிகளுடன் வந்து நேரடியாக இணைந்து கொண்டுள்ளார்.
கருணாவின் பிறப்பிடமான கிரானையே தனது பிறப்பிடமாகவும் கொண்ட விசு, விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு பகுதியின் உயர் பொறுப்பிலிருந்த ஒருவர் என்றும், தனக்கு விசுவாசமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் விசுவை அரசியற் பொறுப்பாளராக கருணா அறிவித்ததாகவும் தெரியவருகிறது.
இதற்கிடையில், கருணா குழுவின் முக்கிய படையணியொன்றின் பொறுப்பாளராக இருந்து காயமடைந்த ஒரு முக்கிய உறுப்பினரும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை உருவாக்கியிருப்பதாகவும், விரைவில் அவரும் நேரடியாக வந்து இணைந்து கொள்வார் என்றும் தெரியவருகிறது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அதை அண்டிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழமை நிலையை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு கிழக்கிலங்கை மக்களும் பூரண ஒத்துழைப்புத் தருகிறார்கள் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள்.
Source: Puthinam
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 14 ஏப்பிரல் 2004, 23:33 ஈழம் ஸ
மட்டக்களப்பு-அம்பாறை விடுதலைப் புலிகள் தனியாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த கருணா, அப்பகுதியின் அரசியற் பொறுப்பாளராக விசு என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி கோபாலனை நியமித்திருந்தார்.
மட்டக்களப்பை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த விசு, புதன்கிழமை மாலை விடுதலைப் புலிகளுடன் வந்து நேரடியாக இணைந்து கொண்டுள்ளார்.
கருணாவின் பிறப்பிடமான கிரானையே தனது பிறப்பிடமாகவும் கொண்ட விசு, விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு பகுதியின் உயர் பொறுப்பிலிருந்த ஒருவர் என்றும், தனக்கு விசுவாசமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் விசுவை அரசியற் பொறுப்பாளராக கருணா அறிவித்ததாகவும் தெரியவருகிறது.
இதற்கிடையில், கருணா குழுவின் முக்கிய படையணியொன்றின் பொறுப்பாளராக இருந்து காயமடைந்த ஒரு முக்கிய உறுப்பினரும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை உருவாக்கியிருப்பதாகவும், விரைவில் அவரும் நேரடியாக வந்து இணைந்து கொள்வார் என்றும் தெரியவருகிறது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அதை அண்டிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழமை நிலையை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு கிழக்கிலங்கை மக்களும் பூரண ஒத்துழைப்புத் தருகிறார்கள் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள்.
Source: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

