04-13-2004, 03:11 PM
அபார பந்து வீச்சு! பாகிஸ்தானை முடக்கியது இந்தியா!
செவ்வாய், 13 ஏப்ரல் 2004
பாலாஜி, பத்தான், நெஹ்ரா ஆகியோரின் அபார பந்து வீச்சு பாகிஸ்தான் அணியை 224 ரன்களுக்கு முடக்கியது!
ராவல்பிண்டியில் இன்று துவங்கிய 3வது இறுதி டெஸ்ட் போட்டியில் பூவா - தலையா வென்ற அணித் தலைவர் சௌரவ் கங்குலி, வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆட்டக்களத்தின் தன்மையை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியை முதலில் களமிறக்கினார்.
லேசாக புற்கள் முளைத்திருந்த ஆட்டக்களமும், அதிலிருந்து ஈரப்பதமும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவியது. முதல் 10 ஓவர்களை தாக்குப் பிடித்த பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தோஃபிக் உமரையும், இம்ரான் ஃபராத்தையும் எல்.பி.டபிள்யூ ஆக்கி பாலாஜியும், நெஹ்ராவும் பெவிலியனுக்கு அனுப்பினர். பாகிஸ்தான் 34/2.
சரிவை தடுத்து நிறுத்த வந்த யாசிர் ஹமிதும், இன்சமாம் உல் ஹக்கும் 3வது விக்கெட்டிற்கு 33 ரன்களைச் சேர்த்தனர். துவக்கத்தில் இருந்தே மிகச் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்த இர்ஃபான் பத்தான் வீசிய பந்தை முன்னால் சென்று ஹமீத் அடித்தாட, அவருடைய மட்டையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு ஸ்லிப்பிற்குச் சென்ற பந்தை வெங்கட்சாய் லக்ஷ்மண் அபாரமாக பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.
அடுத்த ஓவரை வீசிய ஆஷிஷ் நெஹ்ரா, இன்சமாமை திணறடித்து இறுதியில் அருமையாக பந்து ஒன்றை வீசி ஆட்டமிழக்கச் செய்தார்.
77 ரன்களுக்கே 4 விக்கெட்டுகள் இழந்து நெருக்கடியில் வீழ்ந்த பாகிஸ்தான் அணியை தூக்கி நிறுத்த போராடிய யூசஃப் யுஹானாவும், அசீம் கமாலும் உணவு இடைவேளைக்குப் பிறகு பத்தான், பாலாஜி பந்து வீச்சிற்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அருமையான இன் ஸ்விங்கரை கமாலை எல்.பி.டபிள்யூ. ஆக்கிய பாலாஜி, காம்ரான் அக்மாலையும், ஷோயப் அக்தரையும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் அணியை சரிவில் தள்ளினார்.
137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணியை மொஹம்மது சமியும், ஃபசால் அக்பரும் காப்பாற்றினர். இவர்கள் என்னதான் ஆடுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கு புரியவில்லை என்றாலும், அவர்களின் விக்bக்டடுகளை வீழ்த்த முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள் என்பது உண்மையே.
இவர்கள் இவருவரும் இணைந்து அடுத்த 23 ஓவர்களில் 9வது விக்கெட்டிற்கு குவித்த 70 ரன்களின் உதவியால் பாகிஸ்தான் அணி 200 ரன்களைக் கடந்தது.
மொஹம்மது சமி அணியின் எண்ணிக்கையை 224 ரன்களுக்கு உயர்த்தி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராவல்பிண்டி ஆட்டக்களத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆட்டமிழக்கும் "சாதனையின்" விளிம்பில் இருந்த பாகிஸ்தானை சமி காப்பாற்றி கரையேற்றினார் என்றுதான் கூறவேண்டும்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி 19 ஓவர்கள் வீசி 4 மெய்டன்களுடன் 63 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இர்ஃபான் பத்தான் 22 ஓவர்கள் வீசி 7 மெய்டன்களுடன் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஆஷிஷ் நெஹ்ரா 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அனில் கும்ளே 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி முதல் பந்திலேயே வீரேந்திர சேவாக்கை இழந்தது. லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்தை சரியாக கணிக்காமல் தடுத்தாட, பந்து அவருடைய மட்டையின் விளிம்பில் பட்டு கல்லிக்குச் சென்றது. அதனை மூன்றாவது முயற்சியில் அழகாக பிடித்தார் யாசிர் ஹமீத்.
அதன் பிறகு சரிவேதும் ஏற்படாமல் காத்த துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பட்டேலும், ராகுல் திராவிடும் அணியின் எண்ணிக்கையை 23 ரன்களுக்கு உயர்த்தினர்.
Source: webulagam
செவ்வாய், 13 ஏப்ரல் 2004
பாலாஜி, பத்தான், நெஹ்ரா ஆகியோரின் அபார பந்து வீச்சு பாகிஸ்தான் அணியை 224 ரன்களுக்கு முடக்கியது!
ராவல்பிண்டியில் இன்று துவங்கிய 3வது இறுதி டெஸ்ட் போட்டியில் பூவா - தலையா வென்ற அணித் தலைவர் சௌரவ் கங்குலி, வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆட்டக்களத்தின் தன்மையை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியை முதலில் களமிறக்கினார்.
லேசாக புற்கள் முளைத்திருந்த ஆட்டக்களமும், அதிலிருந்து ஈரப்பதமும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவியது. முதல் 10 ஓவர்களை தாக்குப் பிடித்த பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தோஃபிக் உமரையும், இம்ரான் ஃபராத்தையும் எல்.பி.டபிள்யூ ஆக்கி பாலாஜியும், நெஹ்ராவும் பெவிலியனுக்கு அனுப்பினர். பாகிஸ்தான் 34/2.
சரிவை தடுத்து நிறுத்த வந்த யாசிர் ஹமிதும், இன்சமாம் உல் ஹக்கும் 3வது விக்கெட்டிற்கு 33 ரன்களைச் சேர்த்தனர். துவக்கத்தில் இருந்தே மிகச் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்த இர்ஃபான் பத்தான் வீசிய பந்தை முன்னால் சென்று ஹமீத் அடித்தாட, அவருடைய மட்டையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு ஸ்லிப்பிற்குச் சென்ற பந்தை வெங்கட்சாய் லக்ஷ்மண் அபாரமாக பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.
அடுத்த ஓவரை வீசிய ஆஷிஷ் நெஹ்ரா, இன்சமாமை திணறடித்து இறுதியில் அருமையாக பந்து ஒன்றை வீசி ஆட்டமிழக்கச் செய்தார்.
77 ரன்களுக்கே 4 விக்கெட்டுகள் இழந்து நெருக்கடியில் வீழ்ந்த பாகிஸ்தான் அணியை தூக்கி நிறுத்த போராடிய யூசஃப் யுஹானாவும், அசீம் கமாலும் உணவு இடைவேளைக்குப் பிறகு பத்தான், பாலாஜி பந்து வீச்சிற்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அருமையான இன் ஸ்விங்கரை கமாலை எல்.பி.டபிள்யூ. ஆக்கிய பாலாஜி, காம்ரான் அக்மாலையும், ஷோயப் அக்தரையும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் அணியை சரிவில் தள்ளினார்.
137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணியை மொஹம்மது சமியும், ஃபசால் அக்பரும் காப்பாற்றினர். இவர்கள் என்னதான் ஆடுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கு புரியவில்லை என்றாலும், அவர்களின் விக்bக்டடுகளை வீழ்த்த முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள் என்பது உண்மையே.
இவர்கள் இவருவரும் இணைந்து அடுத்த 23 ஓவர்களில் 9வது விக்கெட்டிற்கு குவித்த 70 ரன்களின் உதவியால் பாகிஸ்தான் அணி 200 ரன்களைக் கடந்தது.
மொஹம்மது சமி அணியின் எண்ணிக்கையை 224 ரன்களுக்கு உயர்த்தி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராவல்பிண்டி ஆட்டக்களத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆட்டமிழக்கும் "சாதனையின்" விளிம்பில் இருந்த பாகிஸ்தானை சமி காப்பாற்றி கரையேற்றினார் என்றுதான் கூறவேண்டும்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி 19 ஓவர்கள் வீசி 4 மெய்டன்களுடன் 63 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இர்ஃபான் பத்தான் 22 ஓவர்கள் வீசி 7 மெய்டன்களுடன் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஆஷிஷ் நெஹ்ரா 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அனில் கும்ளே 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி முதல் பந்திலேயே வீரேந்திர சேவாக்கை இழந்தது. லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்தை சரியாக கணிக்காமல் தடுத்தாட, பந்து அவருடைய மட்டையின் விளிம்பில் பட்டு கல்லிக்குச் சென்றது. அதனை மூன்றாவது முயற்சியில் அழகாக பிடித்தார் யாசிர் ஹமீத்.
அதன் பிறகு சரிவேதும் ஏற்படாமல் காத்த துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பட்டேலும், ராகுல் திராவிடும் அணியின் எண்ணிக்கையை 23 ரன்களுக்கு உயர்த்தினர்.
Source: webulagam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

