04-12-2004, 11:12 AM
40 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனக்குத்தானே சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொண்டு, பிள்ளையைப் பெற்று எடுத்துள்ளார் என்பது நம்மைத் திடுக்கிட வைக்கும் செய்திதான். மெக்ஸிக்கோவில்தான் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கிராமப்புறத்தில் வாழந்துவந்த இப்பெண்ணின் வசிப்பிடத்தில், மின்சார வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. தனது பிரசவ நேரம் நெருங்கியபோது, இயற்கையாகப் பிள்ளையைப் பெற முடியாது இவர் வேதனையில் துடித்திருக்கின்றார்.
இவர் வீட்டிலிருந்து மருத்துவ மனைக்குப் பயணிக்க 8 மணி நேரம் தேவை.பிள்ளையை எப்படியாவது பெற்றாக வேண்டும் என்ற வேகத்தில் செயற்பட்டு இருக்கின்றார். மடக்கு மடக்கு என்று மதுவை அருந்திய இவர், சமையலறைக் கத்தியைக் கொண்டு, அடிவயிற்றை வெட்டிப்பிளக்க முயற்சி செய்து, தனது மூன்றாவது முயற்சியில் வெற்றியும் ஈட்டியிருக்கின்றார். பிள்ளை உயிரோடு வெளியே வந்துவிட்டது. இப்பொழுது மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வரும் இந்தப் பெண் நலமாக இருக்கின்றார். பிள்ளையும் நலமாக இருக்கின்றது. முறத்தால் புலியை விரட்டிய அன்றைய வீரப் பெண்ணை, இந்த நவீன பெண்மணி இன்று ஓரங்கட்டி இருக்கின்றார்.
நன்றி - சூரியன் வெப்தளம்
இவர் வீட்டிலிருந்து மருத்துவ மனைக்குப் பயணிக்க 8 மணி நேரம் தேவை.பிள்ளையை எப்படியாவது பெற்றாக வேண்டும் என்ற வேகத்தில் செயற்பட்டு இருக்கின்றார். மடக்கு மடக்கு என்று மதுவை அருந்திய இவர், சமையலறைக் கத்தியைக் கொண்டு, அடிவயிற்றை வெட்டிப்பிளக்க முயற்சி செய்து, தனது மூன்றாவது முயற்சியில் வெற்றியும் ஈட்டியிருக்கின்றார். பிள்ளை உயிரோடு வெளியே வந்துவிட்டது. இப்பொழுது மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வரும் இந்தப் பெண் நலமாக இருக்கின்றார். பிள்ளையும் நலமாக இருக்கின்றது. முறத்தால் புலியை விரட்டிய அன்றைய வீரப் பெண்ணை, இந்த நவீன பெண்மணி இன்று ஓரங்கட்டி இருக்கின்றார்.
நன்றி - சூரியன் வெப்தளம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

