04-12-2004, 02:25 AM
மோதல் சம்பவங்களினால் இடம்பெயர்ந்தவர்களில் 90 வீதமானோர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்
ஜ மட்டக்களப்பிலிருந்து தேனுராள் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 8:48 ஈழம் ஸ
மட்டக்களப்பு இராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களினால் இடம்பெயர்ந்தவர்களில் 90 வீதமானோர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி சென்றிருப்பதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எஞ்சியோர், இன்றைய தினம் சொந்த இடங்களுக்கு செல்வார்கள் என்று அவர் கூறினார். சொந்த இடங்களுக்கு திரும்புபவர்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மோதல் காரணமாக சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்து மாங்கேணி மற்றும் ஈச்சிலம்பத்தை பிரதேசங்களில் தஞ்சமடைந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளும், சோதனைகளும் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்
Thanx: Puthinam
ஜ மட்டக்களப்பிலிருந்து தேனுராள் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 8:48 ஈழம் ஸ
மட்டக்களப்பு இராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களினால் இடம்பெயர்ந்தவர்களில் 90 வீதமானோர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி சென்றிருப்பதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எஞ்சியோர், இன்றைய தினம் சொந்த இடங்களுக்கு செல்வார்கள் என்று அவர் கூறினார். சொந்த இடங்களுக்கு திரும்புபவர்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மோதல் காரணமாக சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்து மாங்கேணி மற்றும் ஈச்சிலம்பத்தை பிரதேசங்களில் தஞ்சமடைந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளும், சோதனைகளும் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்
Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

