04-11-2004, 03:43 PM
அம்பாறையில் 200 போராளிகள் மீட்பு,வாகரையில் மேலும் 50 பேர் மீட்பு, அம்பாறை மாவட்டம் பூரண கட்டுப்பாட்டில்
11.04.2004
இன்று அதிகாலை அம்பாறைப் மாவட்டப் பகுதிகளில் ஆரம்பமான மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பெருமளவு மோதல்கள் எதுவும் இப்பகுதிகளில் இடம்பெறவில்லை. ஆதிசுவரன், வினோ ஆகியோர் தலைமையிலான 200 போராளிகள் கருணா குழுவை விட்டு விலகி மீட்புப் அணிகளிடம் வந்து சேர்ந்துள்ளனர்.
அதேநேரம் வாகரைப் பகுதிகளில் கருணா குழவைச் 400 பேர் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளனர். பிந்திக் கிடைத்த தகவல்களின்படி மேலும் 50 பேர் இன்று, ஞாயிறு மாலை கருணா குழுவைவிட்டு விலகி மீட்பு அணிகளில் வந்து சேர்ந்துள்ளனர்.
வாகரைப் பகுதிகள் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை பல போராளிகள் கருணா குழுவை விட்டு விலகி வருவதற்கு வாய்ப்பினை அளித்துள்ளது. அதே நேரம் கருணா குழுவைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பியோடும் நோக்கோடு கொழும்பிற்கு தப்பிச் செல்வதாக செய்திகள் கிடைத்துள்ளது.
வாகரைப் பிரதேசம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து காணப்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு சிறப்பான வரவேற்பை அளித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
11.04.2004
இன்று அதிகாலை அம்பாறைப் மாவட்டப் பகுதிகளில் ஆரம்பமான மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பெருமளவு மோதல்கள் எதுவும் இப்பகுதிகளில் இடம்பெறவில்லை. ஆதிசுவரன், வினோ ஆகியோர் தலைமையிலான 200 போராளிகள் கருணா குழுவை விட்டு விலகி மீட்புப் அணிகளிடம் வந்து சேர்ந்துள்ளனர்.
அதேநேரம் வாகரைப் பகுதிகளில் கருணா குழவைச் 400 பேர் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளனர். பிந்திக் கிடைத்த தகவல்களின்படி மேலும் 50 பேர் இன்று, ஞாயிறு மாலை கருணா குழுவைவிட்டு விலகி மீட்பு அணிகளில் வந்து சேர்ந்துள்ளனர்.
வாகரைப் பகுதிகள் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை பல போராளிகள் கருணா குழுவை விட்டு விலகி வருவதற்கு வாய்ப்பினை அளித்துள்ளது. அதே நேரம் கருணா குழுவைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பியோடும் நோக்கோடு கொழும்பிற்கு தப்பிச் செல்வதாக செய்திகள் கிடைத்துள்ளது.
வாகரைப் பிரதேசம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து காணப்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு சிறப்பான வரவேற்பை அளித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

