04-10-2004, 03:52 PM
வன்னியிலுள்ள புலிகளின் தலைமையுடன் தொடர்பு கருணா தரப்புடன் தொடர்பெதுவுமில்லை
- கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர்
மட்டக்களப்பில் இடம்பெறுவது விடுதலைப் புலிகளின் உள் விவகாரப் பிரச்சினை என்பதால் அதில் தாம் தலையிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவர் ஹொக்லண்ட் தமக்குக் கருணா தரப்பினருடன் எந்தவித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர் இது குறித்து நேற்றுக் காலை 11 மணியளவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத்தை சந்தித்துப் பேசியுள்ளேன். இது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இச் சண்டையில் அரசாங்கப் படைகள் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனினும், இச் சண்டை சமாதான நடைமுறைகளுக்கு ஆபத்தானது.
இச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளிடமிருந்தோ, கருணா தரப்பினரிடமிருந்தோ, அரசாங்கப் படையினரிடமிருந்தோ புகார்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை.
எனினும், இப்போது நடைபெறுவது விடுதலைப் புலிகளின் உள் விவகாரப் பிரச்சினை. இதில் தலையிட வேண்டாம் என அவர்கள் சகல தரப்பினரையும் எச்சரித்துள்ளனர். இப் பிரச்சினையில் இராணுவம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனவே, மோதல் நடைபெறும் இடத்திற்கு நாங்கள் போக முடியாது. போகப் போவதுமில்லை.
எமக்கும் கருணா குழுவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், வன்னியில் உள்ள புலிகளின் தலைமைப் பீடத்துடன் தொடர்புகளை வைத்திருக்கிறோம்.
இப்போது நாங்கள் கிழக்கின் நிலைவரம் பற்றி விசாரணை செய்து வருகிறோம். ஆனால், அங்கு சண்டை தொடர்ந்தால் எம்மால் அங்கு செல்ல முடியாது. செல்லப் போவதுமில்லை.
நாம் இப்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் செயற்படுகிறோம். கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் செயற்படவில்லை. கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் செல்லவில்லை. செல்லவும் முடியாது. செல்லப் போவதுமில்லை.
தற்போதைய சண்டை கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறுவதால் நாங்கள் அங்கு செல்லப் போவதில்லை.
Thanx: Thinakkural
- கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர்
மட்டக்களப்பில் இடம்பெறுவது விடுதலைப் புலிகளின் உள் விவகாரப் பிரச்சினை என்பதால் அதில் தாம் தலையிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவர் ஹொக்லண்ட் தமக்குக் கருணா தரப்பினருடன் எந்தவித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர் இது குறித்து நேற்றுக் காலை 11 மணியளவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத்தை சந்தித்துப் பேசியுள்ளேன். இது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இச் சண்டையில் அரசாங்கப் படைகள் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனினும், இச் சண்டை சமாதான நடைமுறைகளுக்கு ஆபத்தானது.
இச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளிடமிருந்தோ, கருணா தரப்பினரிடமிருந்தோ, அரசாங்கப் படையினரிடமிருந்தோ புகார்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை.
எனினும், இப்போது நடைபெறுவது விடுதலைப் புலிகளின் உள் விவகாரப் பிரச்சினை. இதில் தலையிட வேண்டாம் என அவர்கள் சகல தரப்பினரையும் எச்சரித்துள்ளனர். இப் பிரச்சினையில் இராணுவம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனவே, மோதல் நடைபெறும் இடத்திற்கு நாங்கள் போக முடியாது. போகப் போவதுமில்லை.
எமக்கும் கருணா குழுவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், வன்னியில் உள்ள புலிகளின் தலைமைப் பீடத்துடன் தொடர்புகளை வைத்திருக்கிறோம்.
இப்போது நாங்கள் கிழக்கின் நிலைவரம் பற்றி விசாரணை செய்து வருகிறோம். ஆனால், அங்கு சண்டை தொடர்ந்தால் எம்மால் அங்கு செல்ல முடியாது. செல்லப் போவதுமில்லை.
நாம் இப்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் செயற்படுகிறோம். கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் செயற்படவில்லை. கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் செல்லவில்லை. செல்லவும் முடியாது. செல்லப் போவதுமில்லை.
தற்போதைய சண்டை கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறுவதால் நாங்கள் அங்கு செல்லப் போவதில்லை.
Thanx: Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

