04-10-2004, 03:49 PM
கருணாவுக்கு எதிரான தாக்குதலில் மாங்கேணி நோக்கி முன்னேறும் புலிகள்
விலகிவரும் போராளிகளுடன் பெற்றோர் சந்திக்க ஏற்பாடு
<img src='http://www.thinakkural.com/2004/April/10/map.jpg' border='0' alt='user posted image'>
மட்டக்களப்பு, திருகோணமலை எல்லைக்குச் சமீபமாக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, கருணா குழுவினருக்கெதிரான தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் மாங்கேணி நோக்கி முன்னேறிக் கொண்டிýருப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கும் வெருகல் பகுதியில், மிகக் குறுகிய தரை வழிப் பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டிýல் வைத்திருந்த கருணா குழுவினர் இரு மாவட்டங்களையும் பிரிக்கும் ஆற்றுக்குத் தெற்கே நிலை கொண்டிýருந்தனர்.
இதேவேளை, அந்தக் குறுகிய பிரதேசத்தின் ஆற்றுக்கு வடக்கே விடுதலைப் புலிகள் நிலை கொண்டிýருந்தனர்.
விடுதலைப் புலிகள் தங்கள் மீது எவ்வேளையிலும் பாரிய தாக்குதலைத் தொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆயத்தங்களுடன் கருணா குழுவினர் இந்தப் பகுதியில் நிலை கொண்டிýருந்தனர். வாழைச்சேனைக்கு வடக்கே மாங்கேணி முதல் வெருகல் வரையிலான பகுதிகளுக்கான கட்டளைத் தளபதியாக கருணாவின் சகோதரர் ரெஜி (விநாயகமூýர்த்தி சிவநேசத்துரை) நியமிக்கப்பட்டிýருந்தார்.
நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கதிரவெளிக்கும் வாகரைக்கும் இடையேயுள்ள கடலோரப் பகுதியான பால்ச்சேனைப் பகுதியில் பல படகுகள் மூýலம் திடPரெனத் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் பாதுகாப்பாக நிலை கொண்டதுடன், கருணா அணியினருக்கெதிராக வடபகுதி நோக்கியும், தென்பகுதி நோக்கியும் பாரிய தாக்குதலை ஆரம்பித்தன.
வெருகல் ஆற்றுப் பகுதியை மையமாக வைத்து வடபகுதியை நோக்கி பால்ச்சேனையிலிருந்து புலிகளின் படையணியொன்று பாரிய நகர்வொன்றை ஆரம்பித்த அதேநேரம், பால்ச்சேனையில் தரையிறங்கிய புலிகளின் மற்றொரு படையணியொன்று கண்டலடிýப் பகுதியை மையமாக வைத்து தென்பகுதியை நோக்கி பால்ச்சேனைப் பகுதியிலிருந்து முன்னேறத் தொடங்கியது.
விடுதலைப் புலிகள் பாரிய அளவில் படகுகள் மூýலம் பால்ச்சேனைப் பகுதியில் தரையிறங்கி திடPர்த் தாக்குதலை ஆரம்பித்த பின்பே, தங்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் ஆரம்பமானது கருணா குழுவினருக்குத் தெரிய வந்தது.
பால்ச்சேனைப் பகுதியிலிருந்து வெருகல் ஆற்றுப் பகுதியையே முக்கிய மையமாக இலக்குவைத்து மோட்டார்கள் மற்றும் கனரக ஆயுதங்களின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் அணிகள் முன்னேறத் தொடங்கிய அதேநேரம், வெருகல் ஆற்றுக்கு வடக்கே தங்கள் நிலைகளிலிருந்து விடுதலைப் புலிகள் ஆட்லறிகள் மற்றும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு வெருகல் ஆற்றுப் பகுதியை நோக்கி முன்னேறி வரும் படையணிக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிýருந்தனர்.
பால்ச்சேனைப் பகுதியிலிருந்து வெருகல் ஆற்றுப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிýருந்த விடுதலைப் புலிகளின் படையணிக்கும், கருணா தரப்பினருக்குமிடையே அதிகாலை ஒரு மணியளவில் கடும் சமர் வெடிýத்த அதேநேரம், பால்ச்சேனைக்குத் தெற்கே கண்டலடிýயை நோக்கி முன்னேறிய புலிகளின் படையணிக்குப் பாரிய எதிர்ப்பு எதுவும் ஏற்படவில்லை.
அதிகாலை ஒரு மணிமுதல் 3 மணிவரை கடும் மோதல் நடைபெற்ற அதேவேளை, புலிகளின் படையணி கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெருகல் ஆற்றங்கரையை அண்மித்தது.
இதேவேளை, பால்ச்சேனையிலிருந்து கண்டலடிý ஊடாக தெற்கு நோக்கி நகரத் தொடங்கிய புலிகளின் படையணி பாரிய எதிர்ப்புகளின்றி அதிகாலை நான்கு மணியளவில் வாகரைக்குச் சமீபமாகச் சென்றடைந்தது.
வெருகல் ஆற்றுப் பகுதியில் கருணா குழுவினர் சற்று எதிர்ப்புக் காட்டிýயதால், அதிகாலை 3 மணியின் பின்னர் தங்கள் தாக்குதலின் வேகத்தைச் சற்றுத் தளர்த்திய புலிகள், ஏனைய பகுதிகளில் இருந்து கருணா குழுவினரை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டிýனர்.
<b>ஜெயம் படுகாயம்</b>
ஆட்லறிகள் மற்றும் மோட்டார்களின் உதவியுடன் முன்னேறிய புலிகள் கனரக ஆயுதங்கள் மூýலம் இந்தத் தாக்குதலை நடத்தியதில் வாகரைப் பகுதிக்கான கருணா குழுவின் முக்கிய தளபதி ஜெயம் படுகாயமடைந்தார்.
இதேவேளை, வெருகல் ஆற்றுப் பகுதியில் நிலை கொண்டிýருந்த கருணா குழுவினரின் படையணிக்குப் பொறுப்பாக இருந்த, 'கருணாவின் சகோதரரான ரெஜி" அங்கிருந்து தப்பிச் சென்று வாகரையை வந்தடைந்ததாக நேற்றுக் காலை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, புலிகளின் பாரிய தரையிறக்கம் மற்றும் தாக்குதலை அடுத்து கருணா குழுவினரில் பலர் அவ்விடங்களை விட்டு தப்பிச் சென்றதாகவும் இதேவேளை, 400க்கும் மேற்பட்ட போராளிகள் ஆயுதங்களுடன் வந்து விடுதலைப் புலிகளின் படையணிகளுடன் இணைந்து கொண்டதாகவும், இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் புலிகளின் தளபதி ஒருவர் தெரிவித்தார்.
<b>கதிரவெளி கட்டுப்பாட்டிýல்</b>
இதேவேளை, வாகரையிலிருந்து வடக்குப் புறமாக சுமார் 12 கி.மீ.தூரத்தில் இருக்கும் கதிரவெளிப் பகுதியிலுள்ள கருணா குழுவின் முகாம் பகுதியை சுற்றி வளைத்த கடற்புலிகள், அப்பகுதியில் கடும் தாக்குதலை நடத்தியபோது கருணா குழுவினர் கடும் எதிர்ப்புக் காட்டாது அங்கிருந்து விலகிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், கதிரவெளியிலுள்ள கருணா குழுவின் முகாமிற்குப் பொறுப்பாக இருந்த மார்க்கானுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவரவில்லையென அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 3 மணிக்குப் பின்னர் பாரிய மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே இரு தரப்பிற்கும் இடையே சிறு சிறு மோதல்கள் நடைபெற்றதாகவும், விட்டுவிட்டு துப்பாக்கிச் சூýட்டுச் சத்தங்களும், மோட்டார் குண்டுச் சத்தங்களும் கேட்டுக் கொண்டிýருந்ததாகவும் சம்ப10ர்ப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கருணாவை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிýருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதேநேரம், குறிப்பாக ஆயுதங்களற்ற நிலையில் கருணா குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு போராளிகளை விடுவிக்கும் நோக்கிலும் இந்த நடவடிýக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்று அதிகாலைக்குப் பின்னர் பாரிய மோதல்கள் இடம்பெறாதபோதிலும், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ரோந்து நடவடிýக்கைகள் கிழக்குக் கடற்பரப்பில் பெருமளவில் இடம்பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகளின் நடவடிýக்கைகள் கடற்பரப்பினூடாகவே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பிற்குமிடையே கடும் சமர் ஆரம்பித்ததையடுத்து, தக்க சமயத்தில் கருணா குழுவிலிருந்து விலகிச் செல்ல தருணம் பார்த்திருந்த பொறுப்பாளர் சிலர் உட்பட பெருமளவு போராளிகள் எதுவித எதிர்ப்பும் காட்டாது புலிகளின் அணிகளுடன் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, பால்ச்சேனைக்கு வடக்கேயும், தெற்கேயும் முன்னேறிச் சென்ற விடுதலைப் புலிகள், ஆங்காங்கே கருணா குழுவினரின் முகாம்களை பெட்டிý வடிýவில் சுற்றி வளைத்துள்ளதாகவும் வெருகலில் பெரும் பகுதியும், கதிரவெளிப் பகுதியும் புலிகளின் ப10ரண கட்டுப்பாட்டிýற்குள் வந்துவிட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவித்தன.
பால்ச்சேனைக்குத் தெற்கே முன்னேறிச் சென்ற புலிகளின் அணிகள், பாரிய எதிர்ப்புகள் எதுவுமின்றி வாகரைப் பகுதியையும் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிýருப்பதாகவும், வாகரைப் பகுதியின் காட்டுப் பகுதிகளை அண்டிýய பனிச்சங்கேணி மற்றும் கட்டுமுறிவுப் பகுதிகளில் ஆங்காங்கே மோதல்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கருணாவின் முக்கிய தாக்குதல் பிரிவின் பொறுப்பாளரான ஜிம்கலித் தாத்தாவின் அணியை நோக்கி நேற்று மாலை தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
தற்போது விடுதலைப் புலிகள் வாழைச்சேனையிலிருந்து சுமார் 25 கி.மீ.தூரத்தில் நிலை கொண்டிýருப்பதாகவும், இவர்கள் மேலும் முன்னேறுவதற்கான அறிகுறி இருக்கும் அதேநேரம், மட்டக்களப்பு - கொழும்பு வீதியைத் தாண்டிýச் சென்றால் மட்டுமே, தற்போது கருணா இருக்கும் தொப்பிக்கல பகுதிக்குச் செல்ல முடிýயும் என்பதால் புலிகளின் அணி முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் இராணுவத்தினர் முழுமையாக ஈடுபடக் கூýடும் எனவும் இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
<b>மட்டக்களப்பில் இராணுவத் தளபதி</b>
நேற்றுப் பிற்பகல் விசேட ஹெலிகொப்டர் மூýலம் மட்டக்களப்பிற்குச் சென்ற கூýட்டுப்படைகளின் தளபதியும், இராணுவத் தளபதியுமான லெப்.ஜெனரல் லயனல் பலகல மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி ஆகியோர் மட்டக்களப்பு நகரில் கிழக்கு மாகாணத் தளபதிகளுடன் நீண்டநேரச் சந்திப்புகளை நடத்தியதாகவும் தெரிய வருகிறது.
விடுதலைப் புலிகள், கருணா இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி முன்னேறுவதானால் மட்டக்களப்பு - கொழும்பு வீதியை கடந்தே செல்ல வேண்டிýயிருக்கும். தற்போது இந்த வீதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிýலேயே இருக்கின்றது. விடுதலைப் புலிகள் இந்த வீதியை கடந்து செல்லாதவாறு தடுப்பதில் படையினர் பெரும் முனைப்புக் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிýருந்தபோது, வாழைச்சேனையிலிருந்து வாகரை நோக்கி வாகனமொன்றில் சென்று கொண்டிýருந்த, கருணாவின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான முக்கிய பொறுப்பாளராகக் கருதப்படும் பிள்ளையான் என்பவர் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பிலிருந்து வெளி மாவட்ட மக்களை துரத்தும் நடவடிýக்கையில் மிக மும்முரமாக பிள்ளையான் இருந்தவர் எனவும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூýட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றபோது அவர்களுக்கு கருணா அணியினரைக் காவலுக்கு அனுப்பியதுடன், அவர்களை அங்கிருந்து மீண்டும் பலவந்தமாக மட்டக்களப்பிற்கு கொண்டு வந்ததில் பிள்ளையானுக்கே முக்கிய பங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் நேற்றைய மோதல்களின்போது கருணா குழுவிலிருந்து விலகி வந்து தங்களுடன் இணைந்த நூற்றுக் கணக்கான போராளிகளை அவர்களது பெற்றோர் சந்திக்க உடனடிýயாக ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அமைப்பிலிருந்து விலகிச் செல்ல விரும்பும் போராளிகளுக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Thanx: Thinakkural
விலகிவரும் போராளிகளுடன் பெற்றோர் சந்திக்க ஏற்பாடு
<img src='http://www.thinakkural.com/2004/April/10/map.jpg' border='0' alt='user posted image'>
மட்டக்களப்பு, திருகோணமலை எல்லைக்குச் சமீபமாக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, கருணா குழுவினருக்கெதிரான தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் மாங்கேணி நோக்கி முன்னேறிக் கொண்டிýருப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கும் வெருகல் பகுதியில், மிகக் குறுகிய தரை வழிப் பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டிýல் வைத்திருந்த கருணா குழுவினர் இரு மாவட்டங்களையும் பிரிக்கும் ஆற்றுக்குத் தெற்கே நிலை கொண்டிýருந்தனர்.
இதேவேளை, அந்தக் குறுகிய பிரதேசத்தின் ஆற்றுக்கு வடக்கே விடுதலைப் புலிகள் நிலை கொண்டிýருந்தனர்.
விடுதலைப் புலிகள் தங்கள் மீது எவ்வேளையிலும் பாரிய தாக்குதலைத் தொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆயத்தங்களுடன் கருணா குழுவினர் இந்தப் பகுதியில் நிலை கொண்டிýருந்தனர். வாழைச்சேனைக்கு வடக்கே மாங்கேணி முதல் வெருகல் வரையிலான பகுதிகளுக்கான கட்டளைத் தளபதியாக கருணாவின் சகோதரர் ரெஜி (விநாயகமூýர்த்தி சிவநேசத்துரை) நியமிக்கப்பட்டிýருந்தார்.
நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கதிரவெளிக்கும் வாகரைக்கும் இடையேயுள்ள கடலோரப் பகுதியான பால்ச்சேனைப் பகுதியில் பல படகுகள் மூýலம் திடPரெனத் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் பாதுகாப்பாக நிலை கொண்டதுடன், கருணா அணியினருக்கெதிராக வடபகுதி நோக்கியும், தென்பகுதி நோக்கியும் பாரிய தாக்குதலை ஆரம்பித்தன.
வெருகல் ஆற்றுப் பகுதியை மையமாக வைத்து வடபகுதியை நோக்கி பால்ச்சேனையிலிருந்து புலிகளின் படையணியொன்று பாரிய நகர்வொன்றை ஆரம்பித்த அதேநேரம், பால்ச்சேனையில் தரையிறங்கிய புலிகளின் மற்றொரு படையணியொன்று கண்டலடிýப் பகுதியை மையமாக வைத்து தென்பகுதியை நோக்கி பால்ச்சேனைப் பகுதியிலிருந்து முன்னேறத் தொடங்கியது.
விடுதலைப் புலிகள் பாரிய அளவில் படகுகள் மூýலம் பால்ச்சேனைப் பகுதியில் தரையிறங்கி திடPர்த் தாக்குதலை ஆரம்பித்த பின்பே, தங்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் ஆரம்பமானது கருணா குழுவினருக்குத் தெரிய வந்தது.
பால்ச்சேனைப் பகுதியிலிருந்து வெருகல் ஆற்றுப் பகுதியையே முக்கிய மையமாக இலக்குவைத்து மோட்டார்கள் மற்றும் கனரக ஆயுதங்களின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் அணிகள் முன்னேறத் தொடங்கிய அதேநேரம், வெருகல் ஆற்றுக்கு வடக்கே தங்கள் நிலைகளிலிருந்து விடுதலைப் புலிகள் ஆட்லறிகள் மற்றும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு வெருகல் ஆற்றுப் பகுதியை நோக்கி முன்னேறி வரும் படையணிக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிýருந்தனர்.
பால்ச்சேனைப் பகுதியிலிருந்து வெருகல் ஆற்றுப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிýருந்த விடுதலைப் புலிகளின் படையணிக்கும், கருணா தரப்பினருக்குமிடையே அதிகாலை ஒரு மணியளவில் கடும் சமர் வெடிýத்த அதேநேரம், பால்ச்சேனைக்குத் தெற்கே கண்டலடிýயை நோக்கி முன்னேறிய புலிகளின் படையணிக்குப் பாரிய எதிர்ப்பு எதுவும் ஏற்படவில்லை.
அதிகாலை ஒரு மணிமுதல் 3 மணிவரை கடும் மோதல் நடைபெற்ற அதேவேளை, புலிகளின் படையணி கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெருகல் ஆற்றங்கரையை அண்மித்தது.
இதேவேளை, பால்ச்சேனையிலிருந்து கண்டலடிý ஊடாக தெற்கு நோக்கி நகரத் தொடங்கிய புலிகளின் படையணி பாரிய எதிர்ப்புகளின்றி அதிகாலை நான்கு மணியளவில் வாகரைக்குச் சமீபமாகச் சென்றடைந்தது.
வெருகல் ஆற்றுப் பகுதியில் கருணா குழுவினர் சற்று எதிர்ப்புக் காட்டிýயதால், அதிகாலை 3 மணியின் பின்னர் தங்கள் தாக்குதலின் வேகத்தைச் சற்றுத் தளர்த்திய புலிகள், ஏனைய பகுதிகளில் இருந்து கருணா குழுவினரை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டிýனர்.
<b>ஜெயம் படுகாயம்</b>
ஆட்லறிகள் மற்றும் மோட்டார்களின் உதவியுடன் முன்னேறிய புலிகள் கனரக ஆயுதங்கள் மூýலம் இந்தத் தாக்குதலை நடத்தியதில் வாகரைப் பகுதிக்கான கருணா குழுவின் முக்கிய தளபதி ஜெயம் படுகாயமடைந்தார்.
இதேவேளை, வெருகல் ஆற்றுப் பகுதியில் நிலை கொண்டிýருந்த கருணா குழுவினரின் படையணிக்குப் பொறுப்பாக இருந்த, 'கருணாவின் சகோதரரான ரெஜி" அங்கிருந்து தப்பிச் சென்று வாகரையை வந்தடைந்ததாக நேற்றுக் காலை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, புலிகளின் பாரிய தரையிறக்கம் மற்றும் தாக்குதலை அடுத்து கருணா குழுவினரில் பலர் அவ்விடங்களை விட்டு தப்பிச் சென்றதாகவும் இதேவேளை, 400க்கும் மேற்பட்ட போராளிகள் ஆயுதங்களுடன் வந்து விடுதலைப் புலிகளின் படையணிகளுடன் இணைந்து கொண்டதாகவும், இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் புலிகளின் தளபதி ஒருவர் தெரிவித்தார்.
<b>கதிரவெளி கட்டுப்பாட்டிýல்</b>
இதேவேளை, வாகரையிலிருந்து வடக்குப் புறமாக சுமார் 12 கி.மீ.தூரத்தில் இருக்கும் கதிரவெளிப் பகுதியிலுள்ள கருணா குழுவின் முகாம் பகுதியை சுற்றி வளைத்த கடற்புலிகள், அப்பகுதியில் கடும் தாக்குதலை நடத்தியபோது கருணா குழுவினர் கடும் எதிர்ப்புக் காட்டாது அங்கிருந்து விலகிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், கதிரவெளியிலுள்ள கருணா குழுவின் முகாமிற்குப் பொறுப்பாக இருந்த மார்க்கானுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவரவில்லையென அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 3 மணிக்குப் பின்னர் பாரிய மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே இரு தரப்பிற்கும் இடையே சிறு சிறு மோதல்கள் நடைபெற்றதாகவும், விட்டுவிட்டு துப்பாக்கிச் சூýட்டுச் சத்தங்களும், மோட்டார் குண்டுச் சத்தங்களும் கேட்டுக் கொண்டிýருந்ததாகவும் சம்ப10ர்ப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கருணாவை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிýருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதேநேரம், குறிப்பாக ஆயுதங்களற்ற நிலையில் கருணா குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு போராளிகளை விடுவிக்கும் நோக்கிலும் இந்த நடவடிýக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்று அதிகாலைக்குப் பின்னர் பாரிய மோதல்கள் இடம்பெறாதபோதிலும், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ரோந்து நடவடிýக்கைகள் கிழக்குக் கடற்பரப்பில் பெருமளவில் இடம்பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகளின் நடவடிýக்கைகள் கடற்பரப்பினூடாகவே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பிற்குமிடையே கடும் சமர் ஆரம்பித்ததையடுத்து, தக்க சமயத்தில் கருணா குழுவிலிருந்து விலகிச் செல்ல தருணம் பார்த்திருந்த பொறுப்பாளர் சிலர் உட்பட பெருமளவு போராளிகள் எதுவித எதிர்ப்பும் காட்டாது புலிகளின் அணிகளுடன் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, பால்ச்சேனைக்கு வடக்கேயும், தெற்கேயும் முன்னேறிச் சென்ற விடுதலைப் புலிகள், ஆங்காங்கே கருணா குழுவினரின் முகாம்களை பெட்டிý வடிýவில் சுற்றி வளைத்துள்ளதாகவும் வெருகலில் பெரும் பகுதியும், கதிரவெளிப் பகுதியும் புலிகளின் ப10ரண கட்டுப்பாட்டிýற்குள் வந்துவிட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவித்தன.
பால்ச்சேனைக்குத் தெற்கே முன்னேறிச் சென்ற புலிகளின் அணிகள், பாரிய எதிர்ப்புகள் எதுவுமின்றி வாகரைப் பகுதியையும் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிýருப்பதாகவும், வாகரைப் பகுதியின் காட்டுப் பகுதிகளை அண்டிýய பனிச்சங்கேணி மற்றும் கட்டுமுறிவுப் பகுதிகளில் ஆங்காங்கே மோதல்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கருணாவின் முக்கிய தாக்குதல் பிரிவின் பொறுப்பாளரான ஜிம்கலித் தாத்தாவின் அணியை நோக்கி நேற்று மாலை தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
தற்போது விடுதலைப் புலிகள் வாழைச்சேனையிலிருந்து சுமார் 25 கி.மீ.தூரத்தில் நிலை கொண்டிýருப்பதாகவும், இவர்கள் மேலும் முன்னேறுவதற்கான அறிகுறி இருக்கும் அதேநேரம், மட்டக்களப்பு - கொழும்பு வீதியைத் தாண்டிýச் சென்றால் மட்டுமே, தற்போது கருணா இருக்கும் தொப்பிக்கல பகுதிக்குச் செல்ல முடிýயும் என்பதால் புலிகளின் அணி முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் இராணுவத்தினர் முழுமையாக ஈடுபடக் கூýடும் எனவும் இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
<b>மட்டக்களப்பில் இராணுவத் தளபதி</b>
நேற்றுப் பிற்பகல் விசேட ஹெலிகொப்டர் மூýலம் மட்டக்களப்பிற்குச் சென்ற கூýட்டுப்படைகளின் தளபதியும், இராணுவத் தளபதியுமான லெப்.ஜெனரல் லயனல் பலகல மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி ஆகியோர் மட்டக்களப்பு நகரில் கிழக்கு மாகாணத் தளபதிகளுடன் நீண்டநேரச் சந்திப்புகளை நடத்தியதாகவும் தெரிய வருகிறது.
விடுதலைப் புலிகள், கருணா இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி முன்னேறுவதானால் மட்டக்களப்பு - கொழும்பு வீதியை கடந்தே செல்ல வேண்டிýயிருக்கும். தற்போது இந்த வீதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிýலேயே இருக்கின்றது. விடுதலைப் புலிகள் இந்த வீதியை கடந்து செல்லாதவாறு தடுப்பதில் படையினர் பெரும் முனைப்புக் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிýருந்தபோது, வாழைச்சேனையிலிருந்து வாகரை நோக்கி வாகனமொன்றில் சென்று கொண்டிýருந்த, கருணாவின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான முக்கிய பொறுப்பாளராகக் கருதப்படும் பிள்ளையான் என்பவர் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பிலிருந்து வெளி மாவட்ட மக்களை துரத்தும் நடவடிýக்கையில் மிக மும்முரமாக பிள்ளையான் இருந்தவர் எனவும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூýட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றபோது அவர்களுக்கு கருணா அணியினரைக் காவலுக்கு அனுப்பியதுடன், அவர்களை அங்கிருந்து மீண்டும் பலவந்தமாக மட்டக்களப்பிற்கு கொண்டு வந்ததில் பிள்ளையானுக்கே முக்கிய பங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் நேற்றைய மோதல்களின்போது கருணா குழுவிலிருந்து விலகி வந்து தங்களுடன் இணைந்த நூற்றுக் கணக்கான போராளிகளை அவர்களது பெற்றோர் சந்திக்க உடனடிýயாக ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அமைப்பிலிருந்து விலகிச் செல்ல விரும்பும் போராளிகளுக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Thanx: Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

