04-10-2004, 03:41 PM
புலிகள் தாக்குதல்: தனது பகுதியைக் காக்க கருணா பகீரத முயற்சி
இலங்கை: நேற்றிரவு கருணாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பேர் இறந்தனர். சுமார் 300 கருணா ஆதரவாளர்கள் பிரபாகரன் படையினரிடம் சரணடைந்தனர்.
இதனால் சில கிலோ மீட்டர் பகுதி புலிகள் வசமானது.
2002 ஆம் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு புலிகள் தரப்பில் நடக்கும் பெரிய சண்டை இதுவே என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
புலிகளின் இந்தத்தாக்குதலை அடுத்து தோப்பிகலா பகுதியைப் பாதுகாக்க சுமார் 2000 பேரை கருணா அனுப்பியுள்ளதாக இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
இப்பகுதி கொழும்பிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இப்பகுதிக்குச் செல்லவேண்டுமெனில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியைக் கடந்து சென்றாக வேண்டும். பிரபாகரன் தரப்பினர் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்குள் நுழைந்தால் அது அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயலாகக் கருதப்படும்.
ஒருவேளை பிரபாகரன் தரப்பினர் இப்பகுதியில் ஊடுருவ முயன்றால் அரசுத்தரப்பினருடன் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காட்டுப்பகுதி தொப்பிகலாவிலிருந்து 6 மைல் தொலைவியே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் நேற்றைய சண்டைக்குப் பிறகு அங்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
நேற்றைய தாக்குதலில் நிலைகுலைந்த கருணா படையைச் சேர்ந்த 500 பேர் வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர்.
கருணா படையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடைசி வரை போராடுவோம் என்று கூறினார்.
இலங்கை ராணுவம் இப்பிரச்சினையில் தலையிடாமல், இருதரப்பிலும் உயிரிழந்தவர்களை மீட்க உதவுமாறு தன் ராணுவத்திற்கு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
Thanx: Dinamani
இலங்கை: நேற்றிரவு கருணாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பேர் இறந்தனர். சுமார் 300 கருணா ஆதரவாளர்கள் பிரபாகரன் படையினரிடம் சரணடைந்தனர்.
இதனால் சில கிலோ மீட்டர் பகுதி புலிகள் வசமானது.
2002 ஆம் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு புலிகள் தரப்பில் நடக்கும் பெரிய சண்டை இதுவே என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
புலிகளின் இந்தத்தாக்குதலை அடுத்து தோப்பிகலா பகுதியைப் பாதுகாக்க சுமார் 2000 பேரை கருணா அனுப்பியுள்ளதாக இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
இப்பகுதி கொழும்பிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இப்பகுதிக்குச் செல்லவேண்டுமெனில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியைக் கடந்து சென்றாக வேண்டும். பிரபாகரன் தரப்பினர் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்குள் நுழைந்தால் அது அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயலாகக் கருதப்படும்.
ஒருவேளை பிரபாகரன் தரப்பினர் இப்பகுதியில் ஊடுருவ முயன்றால் அரசுத்தரப்பினருடன் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காட்டுப்பகுதி தொப்பிகலாவிலிருந்து 6 மைல் தொலைவியே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் நேற்றைய சண்டைக்குப் பிறகு அங்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
நேற்றைய தாக்குதலில் நிலைகுலைந்த கருணா படையைச் சேர்ந்த 500 பேர் வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர்.
கருணா படையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடைசி வரை போராடுவோம் என்று கூறினார்.
இலங்கை ராணுவம் இப்பிரச்சினையில் தலையிடாமல், இருதரப்பிலும் உயிரிழந்தவர்களை மீட்க உதவுமாறு தன் ராணுவத்திற்கு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
Thanx: Dinamani
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

