04-10-2004, 11:08 AM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40023000/jpg/_40023729_ferry220.jpg' border='0' alt='user posted image'>
(bbc.com)
<span style='color:red'>கருணாவின் அணி பின்வாங்கியது
சர்வதேச செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கருணா தமது அணியில் வைத்திருப்பவர்களை பின்வாங்கச் செய்து, தான் இருக்கும் தொப்பிக்கல காட்டுப் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதாகத் தெரியவருகிறது.
சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் இலங்கை நிருபராகப் பணியாற்றும் இந்தியர் ஒருவர் கஐவத்தை எனுமிடத்திலிருந்து மேற்படி செய்தி நிறுவனத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கிய செய்தியிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் மற்றும் நேரில் கண்டவர்களின் தகவல்களின் படியே இத் தகவலை வழங்கிய மேற்படி பத்திரிகையாளர், சுமார் 2,000 பேரை கருணா இவ்வாறு பின்வாங்கச் செய்து தனது தளத்தைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்தியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
வாகரைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற மோதலையடுத்து அங்கிருந்த சுமார் 500 கருணா அணியினர் அப்பிராந்தியத்தை விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ளதாக மேற்படி பத்திரிகையாளர் அக் குறிப்பில் எழுதியுள்ளதானது வாகரைப் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதையும், மேற்குறிப்பிட்ட 2,000 பேரில் ஏனையவர்கள் மட்டக்களப்பின் வேறு பகுதிகளிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
மட்டக்களப்பின் எந்தெந்தப் பகுதிகளிலிருந்து இந்த பின்வாங்கல் இடம்பெற்றது என்ற விபரமேதும் தெரியாத போதும், தான் தற்போது பலாத்காரமாக இணைத்து வைத்திருக்கும் போராளிகள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து தமக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபடும் சம்பவங்கள் வாகரையில் இடம்பெற்றதையடுத்தே இவ்வாறான நடவடிக்கையில் கருணா அணியினர் ஈடுபட்டிருக்கலாம் என பிறிதொரு செய்தி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இவர்களை வைத்திருந்தால் தமது பாதுகாப்பை மேலும் உறுதியாக்குவதுடன், இவ்வாறான சரணடையும் சம்பவங்கள் மற்றும் தமக்கெதிராகப் போரிடும் சம்பவங்களைத் தவிர்க்கலாம் என அவர்கள் கருதியிருக்கலாம் எனவும், அத்தோடு தலைமைப்பீடத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்கான திராணியற்ற நிலையைச் சமாளிப்பதற்காகவும் இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் இச் செய்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த செய்தி ஆய்வாளர் கூறியுள்ளார். இதேவேளை கருணா அணியினர் தமது பின்வாங்கலின் போது இராணுவ ட்றக் வண்டியைப் பயன்படுத்துவதை காட்டும் புகைப்படம் ஒன்றை பிறிதொரு செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.
வாகரையில் இருந்து வெளியேறிய பொதுமகன் ஒருவர் சண்டை பற்றி ஒரு பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த போது, 'கட்டுடல் கொண்ட - வளர்ந்த - புலிகளின் போராளிகள் அலை அலையாக வெருகல் பக்கத்திலிருந்து திரண்டு வந்துகொண்டிருந்தனர். கருணா பக்கத்தில் உள்ள சிறு பொடியன்கள் அவர்களுக்குத் தாக்குப் பிடிப்பார்களா என்று நான் நம்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார். இது கருணா போர்நிறுத்த காலத்தில் இணைந்த, புதிதாகப் பயிற்சி பெற்ற, சண்டைக்கள அனுபவமற்ற பல போராளிகளையே தன்வசம் வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இதற்கான காரணம் யாதெனில், ஏற்கனவே இணைந்த போராளிகள் தலைமைப்பீடத்தின் மீதான விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதோடு, தலைமைப்பீடத்தின் தொடர்பு ஏற்படும் பட்சத்தில் மீண்டும் அவர்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதே. ஏனினும் புதிய போராளிகளும் அவ்வாறான அணுகுமுறைகளையே மேற்கொள்வதால் தற்போது கருணா அணி குழப்பமானதொரு நிலையிலுள்ளது.
எனவே தனது அணியினர் மத்தியில் இருக்கும் போராளிகளின் தலைமைப்பீடத்தின் விசுவாசம் குறித்த அச்சத்தைக் கொண்டுள்ள கருணா யாரை நம்புவது, யாரை நம்பாமல் விடுவது என்ற இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதேவேளை தொப்பிக்கல மீது தாக்குதல் இடம்பெற்றால் கருணாவின் அணியின் முன்னணிப் போராளிகளே தலைமைப்பீடத்திற்கு உதவுவார்கள் என்பதையுமே களநிலமை குறித்து ஊகிக்கக் கூடியதாகவுள்ளது என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார். </span>
நன்றி...புதினம் டொட் கொம்
(bbc.com)
<span style='color:red'>கருணாவின் அணி பின்வாங்கியது
சர்வதேச செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கருணா தமது அணியில் வைத்திருப்பவர்களை பின்வாங்கச் செய்து, தான் இருக்கும் தொப்பிக்கல காட்டுப் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதாகத் தெரியவருகிறது.
சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் இலங்கை நிருபராகப் பணியாற்றும் இந்தியர் ஒருவர் கஐவத்தை எனுமிடத்திலிருந்து மேற்படி செய்தி நிறுவனத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கிய செய்தியிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் மற்றும் நேரில் கண்டவர்களின் தகவல்களின் படியே இத் தகவலை வழங்கிய மேற்படி பத்திரிகையாளர், சுமார் 2,000 பேரை கருணா இவ்வாறு பின்வாங்கச் செய்து தனது தளத்தைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்தியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
வாகரைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற மோதலையடுத்து அங்கிருந்த சுமார் 500 கருணா அணியினர் அப்பிராந்தியத்தை விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ளதாக மேற்படி பத்திரிகையாளர் அக் குறிப்பில் எழுதியுள்ளதானது வாகரைப் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதையும், மேற்குறிப்பிட்ட 2,000 பேரில் ஏனையவர்கள் மட்டக்களப்பின் வேறு பகுதிகளிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
மட்டக்களப்பின் எந்தெந்தப் பகுதிகளிலிருந்து இந்த பின்வாங்கல் இடம்பெற்றது என்ற விபரமேதும் தெரியாத போதும், தான் தற்போது பலாத்காரமாக இணைத்து வைத்திருக்கும் போராளிகள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து தமக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபடும் சம்பவங்கள் வாகரையில் இடம்பெற்றதையடுத்தே இவ்வாறான நடவடிக்கையில் கருணா அணியினர் ஈடுபட்டிருக்கலாம் என பிறிதொரு செய்தி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இவர்களை வைத்திருந்தால் தமது பாதுகாப்பை மேலும் உறுதியாக்குவதுடன், இவ்வாறான சரணடையும் சம்பவங்கள் மற்றும் தமக்கெதிராகப் போரிடும் சம்பவங்களைத் தவிர்க்கலாம் என அவர்கள் கருதியிருக்கலாம் எனவும், அத்தோடு தலைமைப்பீடத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்கான திராணியற்ற நிலையைச் சமாளிப்பதற்காகவும் இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் இச் செய்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த செய்தி ஆய்வாளர் கூறியுள்ளார். இதேவேளை கருணா அணியினர் தமது பின்வாங்கலின் போது இராணுவ ட்றக் வண்டியைப் பயன்படுத்துவதை காட்டும் புகைப்படம் ஒன்றை பிறிதொரு செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.
வாகரையில் இருந்து வெளியேறிய பொதுமகன் ஒருவர் சண்டை பற்றி ஒரு பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த போது, 'கட்டுடல் கொண்ட - வளர்ந்த - புலிகளின் போராளிகள் அலை அலையாக வெருகல் பக்கத்திலிருந்து திரண்டு வந்துகொண்டிருந்தனர். கருணா பக்கத்தில் உள்ள சிறு பொடியன்கள் அவர்களுக்குத் தாக்குப் பிடிப்பார்களா என்று நான் நம்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார். இது கருணா போர்நிறுத்த காலத்தில் இணைந்த, புதிதாகப் பயிற்சி பெற்ற, சண்டைக்கள அனுபவமற்ற பல போராளிகளையே தன்வசம் வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இதற்கான காரணம் யாதெனில், ஏற்கனவே இணைந்த போராளிகள் தலைமைப்பீடத்தின் மீதான விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதோடு, தலைமைப்பீடத்தின் தொடர்பு ஏற்படும் பட்சத்தில் மீண்டும் அவர்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதே. ஏனினும் புதிய போராளிகளும் அவ்வாறான அணுகுமுறைகளையே மேற்கொள்வதால் தற்போது கருணா அணி குழப்பமானதொரு நிலையிலுள்ளது.
எனவே தனது அணியினர் மத்தியில் இருக்கும் போராளிகளின் தலைமைப்பீடத்தின் விசுவாசம் குறித்த அச்சத்தைக் கொண்டுள்ள கருணா யாரை நம்புவது, யாரை நம்பாமல் விடுவது என்ற இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதேவேளை தொப்பிக்கல மீது தாக்குதல் இடம்பெற்றால் கருணாவின் அணியின் முன்னணிப் போராளிகளே தலைமைப்பீடத்திற்கு உதவுவார்கள் என்பதையுமே களநிலமை குறித்து ஊகிக்கக் கூடியதாகவுள்ளது என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார். </span>
நன்றி...புதினம் டொட் கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

