04-10-2004, 09:38 AM
தேர்தல் முடிவுகள் தமிழினத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கின்றதா?
மிகப் பெரிய அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வெற்றியை, தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் உறுதி செய்துள்ளதால், தமிழினத்திற்கு இது ஒரு பாரிய வெற்றியாகக் கணிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தத் தேர்தல் முடிவுகளும் அதன்பின் உருவாகியுள்ள ஆட்சி நிலைப்பாடுகளும், தமிழினத்தின் வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளனவா என்று ஒருமுறை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
மஹிந்த ராஐபக்ஷ பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே லக்ஷ்மன் கதிர்காமர் தான் பிரதம மந்திரி என்று பரவலாக நம்பப்பட்டதுடன், ஐனாதிபதி கூட, அவரது பெயரையே முதலில் முன்மொழிந்தாலும், பின்னர் நீண்ட நேர ஆலோசனைகளை நடாத்தி, மஹிந்தவை பிரதமராக அறிவித்தார்.
<b>பிரதம மந்திரி பதவியின் பலம்</b>
உண்மையில், ஐனாதிபதியின் கட்சி தவிர்ந்த பிறிதொரு கட்சியின் தலைமையில் பாராளுமன்றம் இருந்த காரணத்தினாலேயே, பிரதம மந்திரி என்ற பதவி கடந்த இரண்டு ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்றது. அதற்கு முன்னர், ஆளும் கட்சியிடமே ஐனாதிபதி, பிரதம மந்திரி என்ற இரு பதவிகளும் இருந்த போது, பிரதம மந்திரியாக யார் இருந்தார் என்று கூட பலருக்குக் தெரியாது. உண்மையில், ஐனாதிபதி பதவியேற்றதும், பிரதம மந்திரியாக தனது தாயார் சிறீமாவோ பண்டாரநாயக்காவையே நியமித்திருந்தார். அவர் அந்தக் கதிரையில் ஒரு கௌரவ பொறுப்பாளராக உட்கார்ந்திருந்தாரோ ஒழிய, பாராளுமன்றத்தை ஆட்டிப்படைக்கும் பலம் உட்பட, நாட்டின் ஆட்சி சார்ந்த அத்தனை முடிவுகளையும் எடுக்கும் பலம் ஐனாதிபதிக்கே இருக்கிறது.
Nஐ.ஆர்.ஐயவர்த்தன ஐனாதிபதியாக இருந்த காலத்தில், உருவாக்கப்பட்ட பலம்பொருந்திய சர்வ அதிகாரங்களையும் உள்ளடக்கிய ஐனாதிபதிப் பதவிக்கு முன்னே, பிரதமர் பதவி ஒரு செல்லாக் காசுதான். திடிரென ஐனாதிபதியின் கட்சி தவிர்ந்த இன்னுமொரு கட்சி பாராளுமன்றத்தை அதிகாரம் செய்கின்ற நிலை வந்தபோதுதான், Nஐ.ஆர்.ஐயவர்த்தன அவரது காலத்தில் தனது கதிரையின் பலத்தை உறுதிசெய்ய என்னவெல்லாம் செய்திருந்தார் என்பது பலருக்குப் புரிய ஆரம்பித்தது.
எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.முன்னணி, பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றபோதும், ஆரம்பத்திலிருந்தே ஐனாதிபதியின் சர்வ அதிகாரத்திற்கு முன்னே, ஒவ்வொரு அசைவிற்கும் ஐனாதிபதியின் தலையசைப்பை எதிர்பார்த்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். ஒரு கட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் கேட்டபோதுகூட, ஐனாதிபதியின் பலத்திற்கு சார்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.
அமைச்சுக்களைப் பறித்தமை, தேசிய ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தியமை, பாராளுமன்றத்தைக் கலைத்தமை, முப்படைத் தளபதிகளை தனது நேரடித் தலைமையில் வைத்திருந்தமை உட்பட, ~நாட்டின் இறைமைக்குக் குந்தகம்| நிகழ்வதாகக் கூறி, எதைச் செய்வதற்கும் ஐனாதிபதி என்ற கதிரைக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், பிரதம மந்திரியாக யார் இருந்தாலும், அவர் எடுக்கும் எந்தவொரு முடிவையும் காரணம் கூறாது தடுத்து நிறுத்தும் உரிமை கூட ஐனாதிபதியிடமே இருந்தது.
இப்போது நிலமை வேறு. ஆட்சி மீண்டும் ஐனாதிபதியின் கட்சியிடமே வந்துவிட்டது. ஐனாதிபதியின் கட்சியிடம் பாராளுமன்றம் இருக்கும்வரை, பிரதம மந்திரியின் ஆசனம் ஒரு வெற்றுக்கதிரையே. கிட்டத்தட்ட இந்தியாவின் ஐனாதிபதி கதிரையும் சிறீலங்காவின் பிரதம மந்திரி கதிரையும் ஒரே தகுதியைக் கொண்டது தான். ஆக, பாராளுமன்றத்தை தலைமை தாங்கி நடத்துகின்ற வாய்ப்பு ஒன்று இருந்தாலும், அங்கே ஐனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே எந்த முடிவுகளும் எடுக்கப்படுவதோடு, கருத்துக்களும் முன்வைக்கப்படும். பாராளுமன்றத்தை அவசர அவசரமாகக் கலைத்து, பொதுத்தேர்தலொன்றை அறிவித்ததற்குக் கூட அதுவே முக்கிய காரணம்.
<b>பொதுத்தேர்தலுக்கான காரணம் </b>
ஐனாதிபதி சந்திரிகாவின் கட்சித் தலைமையில் பாராளுமன்றமும் இருந்தபோது, எதிர்க்கட்சியினர் மக்களின் எதிர்ப்பலையை எழுப்பியதன் மூலம், பாராளுமன்றத்தில் தொடர்ச்சியான குழப்பம் ஏற்பட்டபோதே, வேறுவழியின்றி ஐனாதிபதியாக இருந்த சந்திரிகா, பொதுத் தேர்தலை அறிவிக்க நேர்ந்தது. தேர்தலில் தோற்றதும், சரியான தருணத்திற்காகக் காத்திருந்து, எப்படியும் ஆட்சியைத் தனது கட்சியின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் மட்டுமே பொதுத் தேர்தலுக்காக வியூகமமைத்து Nஐ.வி.பி.யுடன் கூட்டணி அமைத்தார்.
இப்போது அவர் நினைத்தபடியே அவரது கட்சித் தலைமைக்குக் கீழே ஆட்சி முழுமையாக வந்துவிட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி, தனக்கு அமைச்சிலுள்ள ஒருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதன் மூலம், விரைவில் ஐனாதிபதி ஆட்சிக்கு முடிவுரை எழுதி, பிரதம மந்திரியின் கதிரைக்கு அதிக பலத்தைக் கொடுக்கும் அதே நேரத்தில், ஆளும் கட்சியின் தலைவர் என்ற வகையில், பிரதம மந்திரி ஆசனத்தில் தானே அமர்வதுதான் தற்போதைய நோக்கம். எள் என்றால் எண்ணையாக் காலடியில் வந்து நிற்கும் கதிர்காமரை பிரதமர் கதிரையில் இருத்தி விட்டால், வேலையை சுலபமாக முடிக்கலாம் என்று சந்திரிகா விரும்பினாலும், எதிர்ப்புக் கிழம்பியபோது, ஐனாதிபதி ஆட்சியை மாற்றியமைத்து பிரதம மந்திரி ஆட்சிக்கு குறிப்பிட்ட மாதத்திற்குள் ஆயத்தம் செய்வதற்கு இணங்கும் ஒருவரை மட்டுமே நியமிக்கும் நிலைப்பாடு சந்திரிகாவிடம் இருந்தது. அதை நிறைவேற்றக்கூடிய ~தாய் சொல்லைத் தட்டாத| அடுத்தவரான மஹிந்த அந்தக் கதிரைக்கு வழிமொழியப்பட்டார்.
அந்த விசுவாசமான குழந்தை, பதவிப் பிரமாணம் செய்த கையுடன், மறக்காது தனது விசுவாசத்தை வெளிக்காட்டியது. ஐனாதிபதி ஆட்சியை மாற்றியமைத்து, சந்திரிகாவை பாராளுமன்றத்தின் பிரதம மந்திரிக் கதிரையில் இருத்துவதே எனது முதல் கடன் என்று தெட்டத்தெளிவாக உள்ளதைச் சொல்லி விட்டது அந்த எஐமானனுக்கு விசுவாசமான ஊழியன்.
<b>தமிழ் கூட்டமைப்பின் வெற்றி மூலம் சாதிக்க விரும்பியதென்ன?</b>
சரி. விசயத்திற்கு வருவோம். எப்படியும் சந்திரிகா கூட்டணியைவிட, ரணில் கட்சி சற்று அதிகமான ஆசனங்களைப் பெறும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் கூட்டணி இணைந்து ஆட்சியமைக்க தமிழ்க் கூட்டமைப்புக்குப் பலம் சேர்ப்பதே எமது திட்டமாக இருந்தது. இறுதிவரை, ஐ.தே.முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து, பாராளுமன்றத்திற்கான பெரும்பான்மைப் பலத்தை இலகுவாக நிரூபிப்பார்கள் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஐ.தே.மு.வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து 113 ஆசனங்களுக்கு அதிகமாகப் பெறும் என்பதில் இருவேறு கருத்து யாருக்கும் ஆரம்பத்தில் இருந்ததில்லை. இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, வடக்கு, கிழக்கு, தெற்கில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், சில நிரந்தர மாற்றங்களை உருவாக்கி விட்டன.
கிழக்கின் குழப்பங்கள், முஸ்லிம் கட்சிகளுக்கு ஓரிரு ஆசனங்களை அதிகமாகக் கொடுக்க வழிசெய்தன. தெற்கில், ஹெல உருமயவின் திடிர் உதயம், ரணில் கனவில் மண்அள்ளிப் போட்டன. மலையகத்தின் உட்கட்சிப் பூசல்கள், சில ஆசனங்கள் கைதவறிப் போக வழிசமைத்தன. வடக்கில், ஆனந்தசங்கரியின் குழப்பத்தால், வெறும் இரண்டாயிரம் வாக்குகள் குறைந்ததால் ஒரு ஆசனம் ஈ.பி.டி.பி.யிடம் பறிபோனது. ஐக்கிய தேசிய முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து 104 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஒன்பது ஆசனங்கள் சிக்கலை உருவாக்கின.
முஸ்லிம் காங்கிரசின் 5 ஆசனங்களும், மலையகக்கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் இரு ஆசனங்களும் அடங்கலாக 111 ஆசனங்கள் தம்வசம் உள்ள நிலையில், வெறும் இரண்டே ஆசனங்கள் குறைவான நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் வாய்ப்பை முற்றாக இழந்தது. யாழ். தொகுதியில் ஒரு ஆசனம், அம்பாறையில் ஒரு ஆசனம் உட்பட, கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஒருவரை நியமித்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு ஆசனத்தையும் இழந்த நிலையில், தற்போது சர்வசங்கடமான பாராளுமன்றப் பிரவேசமே காத்திருக்கிறது.
தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன், முழு ஆசனங்களையும் பெற்று, ஆட்சியமைக்கும் கட்சியின் முடிவை நிர்ணயிக்கும் பலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வரவேண்டும் என்பதே உள்ளுர எமது திட்டமாக இருந்தபோது, கற்பனை பண்ணிக்கூடப் பார்க்காத சந்திரிகா வெற்றி, பொங்கி வரும்போது தாழி உடைந்த கதையாகிப் போனது.
<b>முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறுகட்சிகளின் விழுக்கு</b>
பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் வலிமையுள்ள கட்சியாக பாராளுமன்றம் நுழைந்தால் மட்டுமே, நாம் விரும்பும் அளவுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து, எமது இலக்கை நோக்கி நகர வாய்ப்பு உருவாகியிருக்கும்.
சந்திரிகா கட்சிக்குத் தாவவேண்டிய தேவையேற்படலாம் என்ற வியூகத்தில், இறுதி நேரத்தில் ரணில் கட்சிக்கெதிரான கருத்துக்களைப் பரவலாகத் தெரிவித்து வந்தவர் ரவூப் ஹக்கீம். முஸ்லிம் காங்கிரஸ் தற்செயலாக 8 ஆசனங்களைப் பெற்றிருந்தால், இம்முறை தேர்தலின் வெற்றி நாயகனாக ஹக்கீமே திகழ்ந்திருப்பார். அறுதிப் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியிருக்கும். 7 ஆசனங்கள் பெற்றிருந்தால் கூட, ஈ.பி.டி.பி. கைகொடுத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரிடம் உள்ளவை 5 மட்டுமே. அதனால், மனிதர் அடங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறார். (இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்தாக தயவுசெய்து எடுக்க வேண்டாம், ஹக்கீமின் தேர்தல் குறித்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வாதம்).
<b>பாராளுமன்றத்தில் தனிக்குரலாக ஒலிக்க முடியுமா?</b>
இப்போது நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல், முற்று முழுதாக ஈழத் தமிழினத்தின் அபிலாசைகளைத் தீர்த்து வைப்பதற்கு வாய்ப்பு வழங்கிய தேர்தலல்ல. மூன்றாவது பலமான கட்சியாக உருவெடுத்திக்கின்ற திருப்தியும், ஒரு தலைமையின் கீழ் ஒன்றாக நிற்கின்ற வெற்றியும் திருப்தியளித்தாலும், பாராளுமன்றத்தில் தனிக் குரலாக ஒலிப்பதற்கான பலத்தை நாம் நிஐமாகத் தவறவிட்டுள்ளோம் என்றே கருதவேண்டியுள்ளது.
இந்நிலையில், மகிழ்ச்சி தரும் விடயங்கள் சிலவும் உண்டு. குறைந்தது எட்டு ஆசனங்களையாவது தம்வசம் வைத்திருக்கும் ஹெல உருமய அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்க மறுக்கும் பட்சத்தில், மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாக, புதிய தேர்தலுக்கு நாள் பார்க்கும் நிலை வரும். ஹெல உருமய இணைந்து செயற்பட இணங்கும் பட்சத்தில் கூட, Nஐ.வி.பி.க்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்கனவே கருத்துமுரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்ட நிலையில், ஹெல உருமயவின் வருகை மேலதிக நெருக்கடிகளையே தோற்றுவிக்கும். தொழிலாளர் காங்கிரஸ் இணைவதற்கு இணங்குவதாக இருந்தால்கூட, அவர்கள் கேட்கப்போகும் முக்கிய இரு அமைச்சுக்களை ஏற்கனவே Nஐ.வி.பி. தனதாக்கிக் கொண்டுள்ள நிலையில், அதுவும் கல்லில் நாருரிக்கும் கதைதான்.
ஆக, இந்தத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர வெற்றி தரும் தேர்தலல்ல. இன்னுமொரு தேர்தல் வரலாம், அதுவும் மிக விரைவில் வரலாம் என்று பார்க்கும்போது, ஈழத்தமிழர்கள் இன்னும் செறிவாகத் தங்கள் ஆசனங்களை உறுதிசெய்து, மலையகக் கட்சிகளை முற்றாக ஒன்றிணைத்து, பாராளுமன்றத்தின் ஆட்சிப் பீடமேறும் கட்சியைத் தீர்மானிக்கின்ற பலத்தைப் பெறுவதே, எமது அபிலாசைகளை வென்றெடுக்கும் நிரந்தரப் பலத்தைத் தரும்.
நன்றி - காவலூர் கவிதன்/தமிழ்நாதம்
மிகப் பெரிய அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வெற்றியை, தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் உறுதி செய்துள்ளதால், தமிழினத்திற்கு இது ஒரு பாரிய வெற்றியாகக் கணிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தத் தேர்தல் முடிவுகளும் அதன்பின் உருவாகியுள்ள ஆட்சி நிலைப்பாடுகளும், தமிழினத்தின் வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளனவா என்று ஒருமுறை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
மஹிந்த ராஐபக்ஷ பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே லக்ஷ்மன் கதிர்காமர் தான் பிரதம மந்திரி என்று பரவலாக நம்பப்பட்டதுடன், ஐனாதிபதி கூட, அவரது பெயரையே முதலில் முன்மொழிந்தாலும், பின்னர் நீண்ட நேர ஆலோசனைகளை நடாத்தி, மஹிந்தவை பிரதமராக அறிவித்தார்.
<b>பிரதம மந்திரி பதவியின் பலம்</b>
உண்மையில், ஐனாதிபதியின் கட்சி தவிர்ந்த பிறிதொரு கட்சியின் தலைமையில் பாராளுமன்றம் இருந்த காரணத்தினாலேயே, பிரதம மந்திரி என்ற பதவி கடந்த இரண்டு ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்றது. அதற்கு முன்னர், ஆளும் கட்சியிடமே ஐனாதிபதி, பிரதம மந்திரி என்ற இரு பதவிகளும் இருந்த போது, பிரதம மந்திரியாக யார் இருந்தார் என்று கூட பலருக்குக் தெரியாது. உண்மையில், ஐனாதிபதி பதவியேற்றதும், பிரதம மந்திரியாக தனது தாயார் சிறீமாவோ பண்டாரநாயக்காவையே நியமித்திருந்தார். அவர் அந்தக் கதிரையில் ஒரு கௌரவ பொறுப்பாளராக உட்கார்ந்திருந்தாரோ ஒழிய, பாராளுமன்றத்தை ஆட்டிப்படைக்கும் பலம் உட்பட, நாட்டின் ஆட்சி சார்ந்த அத்தனை முடிவுகளையும் எடுக்கும் பலம் ஐனாதிபதிக்கே இருக்கிறது.
Nஐ.ஆர்.ஐயவர்த்தன ஐனாதிபதியாக இருந்த காலத்தில், உருவாக்கப்பட்ட பலம்பொருந்திய சர்வ அதிகாரங்களையும் உள்ளடக்கிய ஐனாதிபதிப் பதவிக்கு முன்னே, பிரதமர் பதவி ஒரு செல்லாக் காசுதான். திடிரென ஐனாதிபதியின் கட்சி தவிர்ந்த இன்னுமொரு கட்சி பாராளுமன்றத்தை அதிகாரம் செய்கின்ற நிலை வந்தபோதுதான், Nஐ.ஆர்.ஐயவர்த்தன அவரது காலத்தில் தனது கதிரையின் பலத்தை உறுதிசெய்ய என்னவெல்லாம் செய்திருந்தார் என்பது பலருக்குப் புரிய ஆரம்பித்தது.
எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.முன்னணி, பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றபோதும், ஆரம்பத்திலிருந்தே ஐனாதிபதியின் சர்வ அதிகாரத்திற்கு முன்னே, ஒவ்வொரு அசைவிற்கும் ஐனாதிபதியின் தலையசைப்பை எதிர்பார்த்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். ஒரு கட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் கேட்டபோதுகூட, ஐனாதிபதியின் பலத்திற்கு சார்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.
அமைச்சுக்களைப் பறித்தமை, தேசிய ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தியமை, பாராளுமன்றத்தைக் கலைத்தமை, முப்படைத் தளபதிகளை தனது நேரடித் தலைமையில் வைத்திருந்தமை உட்பட, ~நாட்டின் இறைமைக்குக் குந்தகம்| நிகழ்வதாகக் கூறி, எதைச் செய்வதற்கும் ஐனாதிபதி என்ற கதிரைக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், பிரதம மந்திரியாக யார் இருந்தாலும், அவர் எடுக்கும் எந்தவொரு முடிவையும் காரணம் கூறாது தடுத்து நிறுத்தும் உரிமை கூட ஐனாதிபதியிடமே இருந்தது.
இப்போது நிலமை வேறு. ஆட்சி மீண்டும் ஐனாதிபதியின் கட்சியிடமே வந்துவிட்டது. ஐனாதிபதியின் கட்சியிடம் பாராளுமன்றம் இருக்கும்வரை, பிரதம மந்திரியின் ஆசனம் ஒரு வெற்றுக்கதிரையே. கிட்டத்தட்ட இந்தியாவின் ஐனாதிபதி கதிரையும் சிறீலங்காவின் பிரதம மந்திரி கதிரையும் ஒரே தகுதியைக் கொண்டது தான். ஆக, பாராளுமன்றத்தை தலைமை தாங்கி நடத்துகின்ற வாய்ப்பு ஒன்று இருந்தாலும், அங்கே ஐனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே எந்த முடிவுகளும் எடுக்கப்படுவதோடு, கருத்துக்களும் முன்வைக்கப்படும். பாராளுமன்றத்தை அவசர அவசரமாகக் கலைத்து, பொதுத்தேர்தலொன்றை அறிவித்ததற்குக் கூட அதுவே முக்கிய காரணம்.
<b>பொதுத்தேர்தலுக்கான காரணம் </b>
ஐனாதிபதி சந்திரிகாவின் கட்சித் தலைமையில் பாராளுமன்றமும் இருந்தபோது, எதிர்க்கட்சியினர் மக்களின் எதிர்ப்பலையை எழுப்பியதன் மூலம், பாராளுமன்றத்தில் தொடர்ச்சியான குழப்பம் ஏற்பட்டபோதே, வேறுவழியின்றி ஐனாதிபதியாக இருந்த சந்திரிகா, பொதுத் தேர்தலை அறிவிக்க நேர்ந்தது. தேர்தலில் தோற்றதும், சரியான தருணத்திற்காகக் காத்திருந்து, எப்படியும் ஆட்சியைத் தனது கட்சியின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் மட்டுமே பொதுத் தேர்தலுக்காக வியூகமமைத்து Nஐ.வி.பி.யுடன் கூட்டணி அமைத்தார்.
இப்போது அவர் நினைத்தபடியே அவரது கட்சித் தலைமைக்குக் கீழே ஆட்சி முழுமையாக வந்துவிட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி, தனக்கு அமைச்சிலுள்ள ஒருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதன் மூலம், விரைவில் ஐனாதிபதி ஆட்சிக்கு முடிவுரை எழுதி, பிரதம மந்திரியின் கதிரைக்கு அதிக பலத்தைக் கொடுக்கும் அதே நேரத்தில், ஆளும் கட்சியின் தலைவர் என்ற வகையில், பிரதம மந்திரி ஆசனத்தில் தானே அமர்வதுதான் தற்போதைய நோக்கம். எள் என்றால் எண்ணையாக் காலடியில் வந்து நிற்கும் கதிர்காமரை பிரதமர் கதிரையில் இருத்தி விட்டால், வேலையை சுலபமாக முடிக்கலாம் என்று சந்திரிகா விரும்பினாலும், எதிர்ப்புக் கிழம்பியபோது, ஐனாதிபதி ஆட்சியை மாற்றியமைத்து பிரதம மந்திரி ஆட்சிக்கு குறிப்பிட்ட மாதத்திற்குள் ஆயத்தம் செய்வதற்கு இணங்கும் ஒருவரை மட்டுமே நியமிக்கும் நிலைப்பாடு சந்திரிகாவிடம் இருந்தது. அதை நிறைவேற்றக்கூடிய ~தாய் சொல்லைத் தட்டாத| அடுத்தவரான மஹிந்த அந்தக் கதிரைக்கு வழிமொழியப்பட்டார்.
அந்த விசுவாசமான குழந்தை, பதவிப் பிரமாணம் செய்த கையுடன், மறக்காது தனது விசுவாசத்தை வெளிக்காட்டியது. ஐனாதிபதி ஆட்சியை மாற்றியமைத்து, சந்திரிகாவை பாராளுமன்றத்தின் பிரதம மந்திரிக் கதிரையில் இருத்துவதே எனது முதல் கடன் என்று தெட்டத்தெளிவாக உள்ளதைச் சொல்லி விட்டது அந்த எஐமானனுக்கு விசுவாசமான ஊழியன்.
<b>தமிழ் கூட்டமைப்பின் வெற்றி மூலம் சாதிக்க விரும்பியதென்ன?</b>
சரி. விசயத்திற்கு வருவோம். எப்படியும் சந்திரிகா கூட்டணியைவிட, ரணில் கட்சி சற்று அதிகமான ஆசனங்களைப் பெறும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் கூட்டணி இணைந்து ஆட்சியமைக்க தமிழ்க் கூட்டமைப்புக்குப் பலம் சேர்ப்பதே எமது திட்டமாக இருந்தது. இறுதிவரை, ஐ.தே.முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து, பாராளுமன்றத்திற்கான பெரும்பான்மைப் பலத்தை இலகுவாக நிரூபிப்பார்கள் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஐ.தே.மு.வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து 113 ஆசனங்களுக்கு அதிகமாகப் பெறும் என்பதில் இருவேறு கருத்து யாருக்கும் ஆரம்பத்தில் இருந்ததில்லை. இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, வடக்கு, கிழக்கு, தெற்கில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், சில நிரந்தர மாற்றங்களை உருவாக்கி விட்டன.
கிழக்கின் குழப்பங்கள், முஸ்லிம் கட்சிகளுக்கு ஓரிரு ஆசனங்களை அதிகமாகக் கொடுக்க வழிசெய்தன. தெற்கில், ஹெல உருமயவின் திடிர் உதயம், ரணில் கனவில் மண்அள்ளிப் போட்டன. மலையகத்தின் உட்கட்சிப் பூசல்கள், சில ஆசனங்கள் கைதவறிப் போக வழிசமைத்தன. வடக்கில், ஆனந்தசங்கரியின் குழப்பத்தால், வெறும் இரண்டாயிரம் வாக்குகள் குறைந்ததால் ஒரு ஆசனம் ஈ.பி.டி.பி.யிடம் பறிபோனது. ஐக்கிய தேசிய முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து 104 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஒன்பது ஆசனங்கள் சிக்கலை உருவாக்கின.
முஸ்லிம் காங்கிரசின் 5 ஆசனங்களும், மலையகக்கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் இரு ஆசனங்களும் அடங்கலாக 111 ஆசனங்கள் தம்வசம் உள்ள நிலையில், வெறும் இரண்டே ஆசனங்கள் குறைவான நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் வாய்ப்பை முற்றாக இழந்தது. யாழ். தொகுதியில் ஒரு ஆசனம், அம்பாறையில் ஒரு ஆசனம் உட்பட, கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஒருவரை நியமித்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு ஆசனத்தையும் இழந்த நிலையில், தற்போது சர்வசங்கடமான பாராளுமன்றப் பிரவேசமே காத்திருக்கிறது.
தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன், முழு ஆசனங்களையும் பெற்று, ஆட்சியமைக்கும் கட்சியின் முடிவை நிர்ணயிக்கும் பலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வரவேண்டும் என்பதே உள்ளுர எமது திட்டமாக இருந்தபோது, கற்பனை பண்ணிக்கூடப் பார்க்காத சந்திரிகா வெற்றி, பொங்கி வரும்போது தாழி உடைந்த கதையாகிப் போனது.
<b>முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறுகட்சிகளின் விழுக்கு</b>
பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் வலிமையுள்ள கட்சியாக பாராளுமன்றம் நுழைந்தால் மட்டுமே, நாம் விரும்பும் அளவுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து, எமது இலக்கை நோக்கி நகர வாய்ப்பு உருவாகியிருக்கும்.
சந்திரிகா கட்சிக்குத் தாவவேண்டிய தேவையேற்படலாம் என்ற வியூகத்தில், இறுதி நேரத்தில் ரணில் கட்சிக்கெதிரான கருத்துக்களைப் பரவலாகத் தெரிவித்து வந்தவர் ரவூப் ஹக்கீம். முஸ்லிம் காங்கிரஸ் தற்செயலாக 8 ஆசனங்களைப் பெற்றிருந்தால், இம்முறை தேர்தலின் வெற்றி நாயகனாக ஹக்கீமே திகழ்ந்திருப்பார். அறுதிப் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியிருக்கும். 7 ஆசனங்கள் பெற்றிருந்தால் கூட, ஈ.பி.டி.பி. கைகொடுத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரிடம் உள்ளவை 5 மட்டுமே. அதனால், மனிதர் அடங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறார். (இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்தாக தயவுசெய்து எடுக்க வேண்டாம், ஹக்கீமின் தேர்தல் குறித்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வாதம்).
<b>பாராளுமன்றத்தில் தனிக்குரலாக ஒலிக்க முடியுமா?</b>
இப்போது நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல், முற்று முழுதாக ஈழத் தமிழினத்தின் அபிலாசைகளைத் தீர்த்து வைப்பதற்கு வாய்ப்பு வழங்கிய தேர்தலல்ல. மூன்றாவது பலமான கட்சியாக உருவெடுத்திக்கின்ற திருப்தியும், ஒரு தலைமையின் கீழ் ஒன்றாக நிற்கின்ற வெற்றியும் திருப்தியளித்தாலும், பாராளுமன்றத்தில் தனிக் குரலாக ஒலிப்பதற்கான பலத்தை நாம் நிஐமாகத் தவறவிட்டுள்ளோம் என்றே கருதவேண்டியுள்ளது.
இந்நிலையில், மகிழ்ச்சி தரும் விடயங்கள் சிலவும் உண்டு. குறைந்தது எட்டு ஆசனங்களையாவது தம்வசம் வைத்திருக்கும் ஹெல உருமய அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்க மறுக்கும் பட்சத்தில், மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாக, புதிய தேர்தலுக்கு நாள் பார்க்கும் நிலை வரும். ஹெல உருமய இணைந்து செயற்பட இணங்கும் பட்சத்தில் கூட, Nஐ.வி.பி.க்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்கனவே கருத்துமுரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்ட நிலையில், ஹெல உருமயவின் வருகை மேலதிக நெருக்கடிகளையே தோற்றுவிக்கும். தொழிலாளர் காங்கிரஸ் இணைவதற்கு இணங்குவதாக இருந்தால்கூட, அவர்கள் கேட்கப்போகும் முக்கிய இரு அமைச்சுக்களை ஏற்கனவே Nஐ.வி.பி. தனதாக்கிக் கொண்டுள்ள நிலையில், அதுவும் கல்லில் நாருரிக்கும் கதைதான்.
ஆக, இந்தத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர வெற்றி தரும் தேர்தலல்ல. இன்னுமொரு தேர்தல் வரலாம், அதுவும் மிக விரைவில் வரலாம் என்று பார்க்கும்போது, ஈழத்தமிழர்கள் இன்னும் செறிவாகத் தங்கள் ஆசனங்களை உறுதிசெய்து, மலையகக் கட்சிகளை முற்றாக ஒன்றிணைத்து, பாராளுமன்றத்தின் ஆட்சிப் பீடமேறும் கட்சியைத் தீர்மானிக்கின்ற பலத்தைப் பெறுவதே, எமது அபிலாசைகளை வென்றெடுக்கும் நிரந்தரப் பலத்தைத் தரும்.
நன்றி - காவலூர் கவிதன்/தமிழ்நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

