04-10-2004, 08:18 AM
வக்கரையை நோக்கி விடுதலைப் புலிகள் படை!
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்க வியாழன் இரவு தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள், கருணாவின் முக்கிய முகாம் அமைந்துள்ள வக்கரையை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இலங்கையின் வட பகுதியையும், கிழக்குப் பகுதியையும் பிரிக்கும் வெறுகல் ஆற்றைக் கடந்த விடுதலைப்புலிகளின் படையின் மீது, கருணாவின் ஆதரவாளர்கள் நேற்று இரவு நடத்திய இரண்டு தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக புலிகள் ஆதரவு இணைய தளமான தமிழ் நெட் கூறியுள்ளது.
1997 மற்றும் 99ம் ஆண்டுகளில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலின் போது அதற்கு கடும் பதிலடி கொடுத்து ஆனையிரவு ராணுவ முகாமை கைப்பற்றிய தளபதி ஜெயந்தன் தலைமையிலான (?) சக்தி வாய்ந்த படைப்பிரிவு இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் நெட் கூறியுள்ளது.
நேற்று நடந்த தாக்குதலில் விறுகல் ஆற்றங்கரையில் சிக்கிக் கொண்ட கருணா குழுவினர் சரணடைந்தது மட்டுமின்றி தங்கள் வசம் இருந்த 120 எம்எம் பீரங்கிகளை ஒப்படைத்துவிட்டதாகவும் புலிகள் செய்தி கூறுகிறது.
ஜெயந்தன் படைப்பிரிவினருடன் மட்டக்களப்பு, அம்பாரை பகுதிகளில் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் தலைமையிலான படைகளும் கருணாவின் துணைத் தளபதியாக இருந்த பிரபா என்பவர் தலைமையிலான படைகளும் வக்கரை நோக்கி முன்னேறி வருவதாக அச்செய்தி கூறுகிறது.
இந்தப் போரில் இதுவரை எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் ஏதும் கிட்டவில்லை. இதற்கிடையே இலங்கையின் கிழக்குப் பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த தனது பாதுகாப்புப் படைகளின் தளபதிகளை மட்டக்களப்பிற்கு செல்லுமாறு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
கருணா குழுவினர் மீது விடுதலைப் புலிகள் நடத்தி வரும் தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று இலங்கை அரசு கருதுவதாக புலிகளிடம் தெரிவிக்குமாறு நார்வே தூதுக்குழுவை அதிபர் சந்திரிகா கேட்டுக் கொண்டுள்ளார்.
Thanx: Webulagam
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்க வியாழன் இரவு தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள், கருணாவின் முக்கிய முகாம் அமைந்துள்ள வக்கரையை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இலங்கையின் வட பகுதியையும், கிழக்குப் பகுதியையும் பிரிக்கும் வெறுகல் ஆற்றைக் கடந்த விடுதலைப்புலிகளின் படையின் மீது, கருணாவின் ஆதரவாளர்கள் நேற்று இரவு நடத்திய இரண்டு தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக புலிகள் ஆதரவு இணைய தளமான தமிழ் நெட் கூறியுள்ளது.
1997 மற்றும் 99ம் ஆண்டுகளில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலின் போது அதற்கு கடும் பதிலடி கொடுத்து ஆனையிரவு ராணுவ முகாமை கைப்பற்றிய தளபதி ஜெயந்தன் தலைமையிலான (?) சக்தி வாய்ந்த படைப்பிரிவு இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் நெட் கூறியுள்ளது.
நேற்று நடந்த தாக்குதலில் விறுகல் ஆற்றங்கரையில் சிக்கிக் கொண்ட கருணா குழுவினர் சரணடைந்தது மட்டுமின்றி தங்கள் வசம் இருந்த 120 எம்எம் பீரங்கிகளை ஒப்படைத்துவிட்டதாகவும் புலிகள் செய்தி கூறுகிறது.
ஜெயந்தன் படைப்பிரிவினருடன் மட்டக்களப்பு, அம்பாரை பகுதிகளில் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் தலைமையிலான படைகளும் கருணாவின் துணைத் தளபதியாக இருந்த பிரபா என்பவர் தலைமையிலான படைகளும் வக்கரை நோக்கி முன்னேறி வருவதாக அச்செய்தி கூறுகிறது.
இந்தப் போரில் இதுவரை எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் ஏதும் கிட்டவில்லை. இதற்கிடையே இலங்கையின் கிழக்குப் பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த தனது பாதுகாப்புப் படைகளின் தளபதிகளை மட்டக்களப்பிற்கு செல்லுமாறு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
கருணா குழுவினர் மீது விடுதலைப் புலிகள் நடத்தி வரும் தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று இலங்கை அரசு கருதுவதாக புலிகளிடம் தெரிவிக்குமாறு நார்வே தூதுக்குழுவை அதிபர் சந்திரிகா கேட்டுக் கொண்டுள்ளார்.
Thanx: Webulagam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

