04-09-2004, 11:32 PM
அதிருப்தி படை தளபதி கருணா கதி என்ன? தலைமை முகாமை பிரபாகரன் படை சுற்றி வளைத்து தாக்குதல்
கொழும்பு,ஏப்.10- கருணா தலைமை முகாமை பிரபாகரன் படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக ஆயுதபோர் நடத்தி வரும் விடுதலைபுலிகள் இயக்கத்தில் கடந்த மாதம் பிளவு ஏற்பட்டது.
பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு அம்பாறை பகுதி தளபதியாக முரளீதரன் என்ற கருணா இருந்தார். அவரது தலைமையின் கீழ் ஏறத்தாழ 6 ஆயிரம் புலிகள் உள்ளனர். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அதனால் தனது தலைமையிலான புலிகள் தனித்து இயங்கப்போவதாகவும் கடந்த மாதம் கருணா அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து கிழக்கு பகுதி புலிகள் தளபதி பொறுப்பில் இருந்து கருணாவை நீக்கிவிட்டு ரமேஷ் என்பவரை பிரபாகரன் நியமித்தார். கருணா புலிகள் இயக்கத்துக்கு தொடர்பு இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தலாம் என்று பொதுமன்னிப்பும் அளித்தார். அதை கருணா ஏற்கவில்லை.
கருணா துரோகி. அவர் ஒழித்துக்கட்டப்படுவார். அவருடன் இருக்கும் வீரர்கள் சரண் அடைந்துவிட வேண்டும் என்றும் பிரபாகரன் எச்சாpத்தார். ஆனால் கருணா தனது பிடியைவிடாமல் இருந்தார்.
இதனால் இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் எந்த நேரத்திலும் பிரபாகரன் படைக்கும், பிhpந்து சென்ற கருணா ஆதரவாளர்களுக்கும் இடையே போர் மூளலாம் என்ற நிலை இருந்தது.
இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிந்ததை தொடர்ந்து இந்த போர் மூண்டுவிட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிரபாகரனின் கமாண்டோ படை யின் ஒரு பிhpவு திhpகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் ஆற்றங்கரையை அடைந்தது. பயங்கர ஆயுதங்கள் தாpத்திருந்த அந்த படை வெருகல் ஆற்றில் இறங்கி தென் பகுதியில் உள்ள மட்டக்களப்பில் புகுந்தது. இது அதிருப்தி தளபதி கருணாவின் கோட்டை ஆகும். பிரபாகரன் படையினர் பீரங்கி, ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தனர். பிரபாகரன் படையினரை பார்த்ததும் கருணா ஆதரவாளர்கள் சுடத்தொடங்கினர். இருதரப்பினருக்கும் இடையே 2 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
வெருகல் ஆற்றங்கரையில் நடந்த சண்டையில் இருதரப்பிலும் 1000 வீரர்களுக்கு மேல் ஈடுபட்டனர். இருதரப்பில் ஏராளமானவர்கள் இறந்ததாக வும், காயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. 9 பேர் இறந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. பிரபாகரன் தரப்பில் காயம் அடைந்தவர்கள் வளச்செனாய் மருத்துவமனையிலும், கருணா தரப்பில் காயம் அடைந்தவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனை யிலும் அனு மதிக்கப்பட்டு உள்ளனர்.
பிரபாகரன் தரப்பில் இறந்தவர்களில் 2பேர் பெண் புலிகள் என்றும் அவர்களது உடல்களை கருணா ஆதரவாளர் அப்புறப்படுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சண்டையின் இடையே அப்பாவி மக்களும் சிக்கி காயமடைந்து உள்ளனர்.
கருணா தரப்பில் காயம் அடைந்தவர்களை ஏற்றி வரச்சென்ற ஒரு ஆம்புலன்சின் டிரைவர் குண்டு வீச்சில் இறந்தார். அவரது உடலை மீட்க செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை கருணா தரப்பு கோhpயது. பாதுகாப்புக்கு இரு தரப்பிலும் உத்தரவாதம் இல்லாமல் அந்த பணியில் இறங்க மாட்டோம் என்று செஞ்சிலுவை சங்கம் மறுத்து விட்டது.
கருணா படை 300 பேர் சரண்
பிரபாகரன் படை வெருகல் ஆற்றை கடந்ததுமே அங்கு இருந்த கருணா ஆதரவு படையினர் 300 பேர் எந்தவித எதிர்ப்பும் இன்றி சரண் அடைந்துவிட்டதாக புலிகளின் இணையதளம் செய்தி வெளியிட்டது. கருணாவின் சில முகாம்கள் பிரபாகரன் படை வசமாகி விட்டதாக தொpகிறது.
கருணா தளபதி காயம்
இந்த சண்டையில் கருணா ஆதரவு தளபதி ஜெயம் என்பவர் காயம் அடைந்தார். கருணாவின் சகோதரரும் மற்றெhரு தளபதியுமான வெற்றி தப்பி ஓடிவிட்டார்.
கருணா தரப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் வரதன் கூறும்போது பிரபாகரன் படையினர் எங்கள் பகுதிகளில் ஊடுருவி முன்னேறிவிட்டார் கள் என்று ஒப்புக்கொண்டார்.
மட்டக்களப்பு முழுவதும் பரவலாக இருந்த கருணா ஆதரவாளர்கள் இப்போது பிரபாகரன் படை கொடுத்த நெருக்கடியால் பச்சென்னை என்ற இடத்தில் கூடி தங்கள் நிலையை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறhர்கள்.
கருணாவின் தலைமையகம் வரகரை என்ற இடத்தில் உள்ளது. அந்த தலைமையகத்தை நோக்கி பிரபாகரன் படை முன்னேறி செல்கிறது.
பிரபாகரன் - கருணா படை மோதலை தொடர்ந்து இலங்கை ராணுவம் முழு உஷhர் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சண்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு பரவி விடாமல் தடுக்க அவர்கள் விழிப்பாக இருக்கிறhர்கள்.
கருணாவின் தலைமையகத்தை பிரபாகரன் படை பிடித்துவிட்டால் கருணாவின் ஆதரவாளர்கள் அனைவரும் சரண் அடைந்து விடுவார்கள். அத்துடன் போர் முடிந்துவிடும்.
கருணா கதி என்ன?
கருணாவின் தலைமையகத்தை பிரபாகரன் படை நெருங்கிவிட்டதாகவும் அதை சுற்றி வளைத்து அடுத்து தாக்குதலை தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. அதிருப்தி தளபதி கருணா எங்கு இருக்கிறhர், அவரது கதி என்ன என்பது தொpயவில்லை.
Thanx: Dinakaran
கொழும்பு,ஏப்.10- கருணா தலைமை முகாமை பிரபாகரன் படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக ஆயுதபோர் நடத்தி வரும் விடுதலைபுலிகள் இயக்கத்தில் கடந்த மாதம் பிளவு ஏற்பட்டது.
பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு அம்பாறை பகுதி தளபதியாக முரளீதரன் என்ற கருணா இருந்தார். அவரது தலைமையின் கீழ் ஏறத்தாழ 6 ஆயிரம் புலிகள் உள்ளனர். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அதனால் தனது தலைமையிலான புலிகள் தனித்து இயங்கப்போவதாகவும் கடந்த மாதம் கருணா அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து கிழக்கு பகுதி புலிகள் தளபதி பொறுப்பில் இருந்து கருணாவை நீக்கிவிட்டு ரமேஷ் என்பவரை பிரபாகரன் நியமித்தார். கருணா புலிகள் இயக்கத்துக்கு தொடர்பு இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தலாம் என்று பொதுமன்னிப்பும் அளித்தார். அதை கருணா ஏற்கவில்லை.
கருணா துரோகி. அவர் ஒழித்துக்கட்டப்படுவார். அவருடன் இருக்கும் வீரர்கள் சரண் அடைந்துவிட வேண்டும் என்றும் பிரபாகரன் எச்சாpத்தார். ஆனால் கருணா தனது பிடியைவிடாமல் இருந்தார்.
இதனால் இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் எந்த நேரத்திலும் பிரபாகரன் படைக்கும், பிhpந்து சென்ற கருணா ஆதரவாளர்களுக்கும் இடையே போர் மூளலாம் என்ற நிலை இருந்தது.
இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிந்ததை தொடர்ந்து இந்த போர் மூண்டுவிட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிரபாகரனின் கமாண்டோ படை யின் ஒரு பிhpவு திhpகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் ஆற்றங்கரையை அடைந்தது. பயங்கர ஆயுதங்கள் தாpத்திருந்த அந்த படை வெருகல் ஆற்றில் இறங்கி தென் பகுதியில் உள்ள மட்டக்களப்பில் புகுந்தது. இது அதிருப்தி தளபதி கருணாவின் கோட்டை ஆகும். பிரபாகரன் படையினர் பீரங்கி, ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தனர். பிரபாகரன் படையினரை பார்த்ததும் கருணா ஆதரவாளர்கள் சுடத்தொடங்கினர். இருதரப்பினருக்கும் இடையே 2 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
வெருகல் ஆற்றங்கரையில் நடந்த சண்டையில் இருதரப்பிலும் 1000 வீரர்களுக்கு மேல் ஈடுபட்டனர். இருதரப்பில் ஏராளமானவர்கள் இறந்ததாக வும், காயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. 9 பேர் இறந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. பிரபாகரன் தரப்பில் காயம் அடைந்தவர்கள் வளச்செனாய் மருத்துவமனையிலும், கருணா தரப்பில் காயம் அடைந்தவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனை யிலும் அனு மதிக்கப்பட்டு உள்ளனர்.
பிரபாகரன் தரப்பில் இறந்தவர்களில் 2பேர் பெண் புலிகள் என்றும் அவர்களது உடல்களை கருணா ஆதரவாளர் அப்புறப்படுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சண்டையின் இடையே அப்பாவி மக்களும் சிக்கி காயமடைந்து உள்ளனர்.
கருணா தரப்பில் காயம் அடைந்தவர்களை ஏற்றி வரச்சென்ற ஒரு ஆம்புலன்சின் டிரைவர் குண்டு வீச்சில் இறந்தார். அவரது உடலை மீட்க செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை கருணா தரப்பு கோhpயது. பாதுகாப்புக்கு இரு தரப்பிலும் உத்தரவாதம் இல்லாமல் அந்த பணியில் இறங்க மாட்டோம் என்று செஞ்சிலுவை சங்கம் மறுத்து விட்டது.
கருணா படை 300 பேர் சரண்
பிரபாகரன் படை வெருகல் ஆற்றை கடந்ததுமே அங்கு இருந்த கருணா ஆதரவு படையினர் 300 பேர் எந்தவித எதிர்ப்பும் இன்றி சரண் அடைந்துவிட்டதாக புலிகளின் இணையதளம் செய்தி வெளியிட்டது. கருணாவின் சில முகாம்கள் பிரபாகரன் படை வசமாகி விட்டதாக தொpகிறது.
கருணா தளபதி காயம்
இந்த சண்டையில் கருணா ஆதரவு தளபதி ஜெயம் என்பவர் காயம் அடைந்தார். கருணாவின் சகோதரரும் மற்றெhரு தளபதியுமான வெற்றி தப்பி ஓடிவிட்டார்.
கருணா தரப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் வரதன் கூறும்போது பிரபாகரன் படையினர் எங்கள் பகுதிகளில் ஊடுருவி முன்னேறிவிட்டார் கள் என்று ஒப்புக்கொண்டார்.
மட்டக்களப்பு முழுவதும் பரவலாக இருந்த கருணா ஆதரவாளர்கள் இப்போது பிரபாகரன் படை கொடுத்த நெருக்கடியால் பச்சென்னை என்ற இடத்தில் கூடி தங்கள் நிலையை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறhர்கள்.
கருணாவின் தலைமையகம் வரகரை என்ற இடத்தில் உள்ளது. அந்த தலைமையகத்தை நோக்கி பிரபாகரன் படை முன்னேறி செல்கிறது.
பிரபாகரன் - கருணா படை மோதலை தொடர்ந்து இலங்கை ராணுவம் முழு உஷhர் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சண்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு பரவி விடாமல் தடுக்க அவர்கள் விழிப்பாக இருக்கிறhர்கள்.
கருணாவின் தலைமையகத்தை பிரபாகரன் படை பிடித்துவிட்டால் கருணாவின் ஆதரவாளர்கள் அனைவரும் சரண் அடைந்து விடுவார்கள். அத்துடன் போர் முடிந்துவிடும்.
கருணா கதி என்ன?
கருணாவின் தலைமையகத்தை பிரபாகரன் படை நெருங்கிவிட்டதாகவும் அதை சுற்றி வளைத்து அடுத்து தாக்குதலை தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. அதிருப்தி தளபதி கருணா எங்கு இருக்கிறhர், அவரது கதி என்ன என்பது தொpயவில்லை.
Thanx: Dinakaran
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

