04-09-2004, 11:29 PM
புலிகளுடன் மட்டும் பேசக் கூடாது, அரசுக்கு ஹெல உறுமய தெரிவிப்பு!
சமாதானப் பேச்சில் தாமும் பங்குபற்றுவது அவசியம் என உரிமை கோருகிறார் கருணா
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளு டன் சமாதானப் பேச்சுக்களைத் தொடங்கப் போவதாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் உறுதி அளித்தார். புலிகளுடன் மட்டும் அரசு பேசக் கூடாது என்று நாடாளுமன்றத் தில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உரத்த குரலில் தெரிவித்திருக்கிறது.
அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கேணல் கருணா, கிழக்குத் தமிழ் மக்களும் பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்குச் சமாதானப் பேச்சுக்களில் அவர்களின் பிரதிநிதியாகத் தாமும் பங்குகொள்ளவேண்டியது அவசியம் என்று உரிமை கோரியிருக்கின்றார். ஐலண்ட|| ஆங்கிலப் பத்திரிகைக்கு கருணா வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு உரிமை கோரி யிருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, புலிகளின் வன்னி நிர்வாகமோ கிழக்குத் தமிழ் மக்கள் மீது தீர்ப்பு எதையும் திணிக்க முடியாது. அவர்கள் சார்பில் பேசும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. எனவே, நாங்களும் எதிர்காலத்தில் நடக்கும் சமாதானப் பேச்சுக்களில் கிழக்குத் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டு அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் க~;ட ந~; டங்களுக்குத் தீர்வுகாண வேண்டும்|| என்று கருணா தனது செவ்வியில் தெரிவித்துள்ளார் என்று ஷஷஐலன்ட்|| ஆங்கிலப் பத்திரிகை தனது நேற் றைய இதழில் செய்தி வெளியிட்டி ருக்கிறது. ஹெல உறுமய கட்சியைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியின் ஆதரவு தனக்குக் கிடைக்காதா என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கலாய்த்துக் கொண்டு இருக்கி றது. சிறுபான்iமை அரசாங்கத்தை அமைக்கும் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் தனக்குப் பெரும் பான்மை உண்டு என்று காட்டுவதற்குக் ஹெல உறுமயவின் ஆதரவு பெரும் உதவியாக இருக்கும். இந்த நிலை யில் விடுதலைப் புலிகளுடன் அரசாங் கம் நடத்த இருக்கும் உத்தேச சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் பாணியில் கருத்துத் தெரிவித்திருக்கிறது ஹெல உறுமய. இனப்பிரச்சினை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த நோக்கத்தில் பேச்சு நடத்த ஜனாதி பதி முற்படுகிறார் என்பது குறித்து நன்கு ஆராய வேண்டியிருக்கிறது. இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேச்சுக் களை நடத்தக் கூடாது. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அமைப்புக்களுடனும் வட்ட மேசை மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் ஹெல உறுமய கூறியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் எவ்வகையிலாவது உடன்படிக்கை செய்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி பேச்சு நடத்த முற்பட்டால் அதனைத் தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
Thanx: Uthayan
சமாதானப் பேச்சில் தாமும் பங்குபற்றுவது அவசியம் என உரிமை கோருகிறார் கருணா
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளு டன் சமாதானப் பேச்சுக்களைத் தொடங்கப் போவதாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் உறுதி அளித்தார். புலிகளுடன் மட்டும் அரசு பேசக் கூடாது என்று நாடாளுமன்றத் தில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உரத்த குரலில் தெரிவித்திருக்கிறது.
அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கேணல் கருணா, கிழக்குத் தமிழ் மக்களும் பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்குச் சமாதானப் பேச்சுக்களில் அவர்களின் பிரதிநிதியாகத் தாமும் பங்குகொள்ளவேண்டியது அவசியம் என்று உரிமை கோரியிருக்கின்றார். ஐலண்ட|| ஆங்கிலப் பத்திரிகைக்கு கருணா வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு உரிமை கோரி யிருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, புலிகளின் வன்னி நிர்வாகமோ கிழக்குத் தமிழ் மக்கள் மீது தீர்ப்பு எதையும் திணிக்க முடியாது. அவர்கள் சார்பில் பேசும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. எனவே, நாங்களும் எதிர்காலத்தில் நடக்கும் சமாதானப் பேச்சுக்களில் கிழக்குத் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டு அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் க~;ட ந~; டங்களுக்குத் தீர்வுகாண வேண்டும்|| என்று கருணா தனது செவ்வியில் தெரிவித்துள்ளார் என்று ஷஷஐலன்ட்|| ஆங்கிலப் பத்திரிகை தனது நேற் றைய இதழில் செய்தி வெளியிட்டி ருக்கிறது. ஹெல உறுமய கட்சியைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியின் ஆதரவு தனக்குக் கிடைக்காதா என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கலாய்த்துக் கொண்டு இருக்கி றது. சிறுபான்iமை அரசாங்கத்தை அமைக்கும் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் தனக்குப் பெரும் பான்மை உண்டு என்று காட்டுவதற்குக் ஹெல உறுமயவின் ஆதரவு பெரும் உதவியாக இருக்கும். இந்த நிலை யில் விடுதலைப் புலிகளுடன் அரசாங் கம் நடத்த இருக்கும் உத்தேச சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் பாணியில் கருத்துத் தெரிவித்திருக்கிறது ஹெல உறுமய. இனப்பிரச்சினை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த நோக்கத்தில் பேச்சு நடத்த ஜனாதி பதி முற்படுகிறார் என்பது குறித்து நன்கு ஆராய வேண்டியிருக்கிறது. இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேச்சுக் களை நடத்தக் கூடாது. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அமைப்புக்களுடனும் வட்ட மேசை மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் ஹெல உறுமய கூறியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் எவ்வகையிலாவது உடன்படிக்கை செய்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி பேச்சு நடத்த முற்பட்டால் அதனைத் தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
Thanx: Uthayan
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

