04-09-2004, 12:24 PM
'எங்களை முன்னுக்கு மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்'
வாகரைப் பகுதியில் கருணாவை விட்டு விலகி ஓடிவரும் பல போராளிகள் சண்டை ஆரம்பமானபோது நடந்த விடயங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிந்தபோது எறிகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தங்கள் கேட்டது. நாங்கள் தாக்குதல் தொடங்கி விட்டதை உணர்ந்து என்ன செய்வது என்று யோசித்தபோது எங்கள் முகாமுக்குப் பொறுப்பாக இருந்து நேசன் 'வந்துட்டானுகள் எழும்பி அடியுங்கடா' என்று சத்தமிட்டவாறு ஓடினார். நாங்களும் பின்னோக்கி ஓடி பாதுகாப்பான இடத்தில் கவர் எடுத்தோம்.
தொடர்ந்து தொலைத் தொடர்புக் கருவிகளில் 'அடியுங்கடா, அடியுங்கடா' என்று கொமாண்ட் வநது கொண்டே இருந்தது. நாங்கள் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை. ஏற்கனவே யோசிச்சிருந்தபடி மீட்பு அணிகளிடம் வந்து சேர்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
எவ்விடத்திலும் தீவிரமாக தாக்குதல் இடம் பெறவேயில்லை. நாங்கள் மீட்பு அணியின் தாக்குதல் தணியும் வரை பாதுகாப்பான இடத்தில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் நேசனும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார். 'எங்களை மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்' என்று கூறினார்.
பின்னர் விடிகாலை நேரத்தில் மீட்பு அணியைச் சேர்ந்த, எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ராகவன் அண்ணன் வந்து எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்று கூறினார்.
இதே நேரம் விடுதலைப் புலிகளின் வேகமான முன்னேற்றம் கருணா அணியின் முன்னணி தளபதிகளுக்கு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பனிச்ச கேணி, கட்டுமுறிவு போன்ற இடங்களைத் தவிர வாகரையின் பெரும்பகுதி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஓட்டுமடுப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கருணா அணியைச் சேர்ந்த ஞானம் என்பவர் காயமடைந்துள்ளார்.
வாகரைப் பகுதியில் கருணாவை விட்டு விலகி ஓடிவரும் பல போராளிகள் சண்டை ஆரம்பமானபோது நடந்த விடயங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிந்தபோது எறிகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தங்கள் கேட்டது. நாங்கள் தாக்குதல் தொடங்கி விட்டதை உணர்ந்து என்ன செய்வது என்று யோசித்தபோது எங்கள் முகாமுக்குப் பொறுப்பாக இருந்து நேசன் 'வந்துட்டானுகள் எழும்பி அடியுங்கடா' என்று சத்தமிட்டவாறு ஓடினார். நாங்களும் பின்னோக்கி ஓடி பாதுகாப்பான இடத்தில் கவர் எடுத்தோம்.
தொடர்ந்து தொலைத் தொடர்புக் கருவிகளில் 'அடியுங்கடா, அடியுங்கடா' என்று கொமாண்ட் வநது கொண்டே இருந்தது. நாங்கள் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை. ஏற்கனவே யோசிச்சிருந்தபடி மீட்பு அணிகளிடம் வந்து சேர்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
எவ்விடத்திலும் தீவிரமாக தாக்குதல் இடம் பெறவேயில்லை. நாங்கள் மீட்பு அணியின் தாக்குதல் தணியும் வரை பாதுகாப்பான இடத்தில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் நேசனும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார். 'எங்களை மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்' என்று கூறினார்.
பின்னர் விடிகாலை நேரத்தில் மீட்பு அணியைச் சேர்ந்த, எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ராகவன் அண்ணன் வந்து எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்று கூறினார்.
இதே நேரம் விடுதலைப் புலிகளின் வேகமான முன்னேற்றம் கருணா அணியின் முன்னணி தளபதிகளுக்கு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பனிச்ச கேணி, கட்டுமுறிவு போன்ற இடங்களைத் தவிர வாகரையின் பெரும்பகுதி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஓட்டுமடுப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கருணா அணியைச் சேர்ந்த ஞானம் என்பவர் காயமடைந்துள்ளார்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

