04-09-2004, 12:09 PM
மீட்பு அணி தொடர்ந்து முன்னேறுகிறது. கருணாவிற்கு நெருங்கிய தளபதிகள் தப்பியோட்டம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீட்பு அணிகள் ஆரம்பித்த கிழக்கையும், மக்களையும் விடுவிக்கும் முயற்சியில் வாகரைப் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வாகரைப் பிரதேசத்திற்கான தளபதியாக கருணாவால் நியமிக்கப்பட்ட nஐயம் இத் தாக்குதலில் காயமடைந்துள்ளார். கருணாவிற்கு மிகவும் நெருங்கியவரும் பிற மாவட்ட மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் முன்னின்றவருமான பிள்ளையான் பயணம் செய்த வாகனம் கிளைமோர்த் தாக்குதலிற்கு உள்ளானதில் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.
இதேவேளை இந்தப் பிராந்தியம் முழுவதற்குமான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த கருணாவின் சகோதரனான ரெஐp சண்டை ஆரம்பித்தவுடனேயே வாகரையை விட்டுத் பின் வாங்கியுள்ளார். போராளிகளை முன்னோக்கி நகருமாறு தொலைதொடர்புக் கருவிகளினூடாக கட்டளையிட்ட வண்ணம் கருணாவின் தளபதிகள் பின்வாங்கிய சம்பவம் அணித்தலைவர்களால் போராளிகளிற்குத் தெரிவிக்கப்பட்டு மீட்பு அணியிடம் சரணடையும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் முதற்கட்டமாக சுமார் 300ற்கும் மேற்பட்ட போராளிகள் மீட்பு அணியிடம் எந்தவித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தனர். இதேபோன்று சில அணிகளின் பொறுப்பாளர்களும் தங்களின் அணியை இவ்வாறு மீட்பு அணியிடம் கையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை இடம்பெற்ற சண்டையில் கருணா அணி சார்ந்த ஒன்பது பேர் பலியாகியுள்ளதாகவும், 15ற்கு மேற்பட்டோர் வைத்தியசாலைகளிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிற்குள்ளும் மீட்பு அணியினர் பிரிதொரு முனையால் ஊடுருவியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. கருணா இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட பின்பும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தன என்றும் எனினும் தேவையற்ற சண்டைகளைத் தவிர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கான முன்னேற்றத்தை புலிகள் தவிர்த்து வந்தனர் என்பதே அம்மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமகனின் கருத்தாகவுள்ளது.
ஆதாரம்: புதினம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீட்பு அணிகள் ஆரம்பித்த கிழக்கையும், மக்களையும் விடுவிக்கும் முயற்சியில் வாகரைப் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வாகரைப் பிரதேசத்திற்கான தளபதியாக கருணாவால் நியமிக்கப்பட்ட nஐயம் இத் தாக்குதலில் காயமடைந்துள்ளார். கருணாவிற்கு மிகவும் நெருங்கியவரும் பிற மாவட்ட மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் முன்னின்றவருமான பிள்ளையான் பயணம் செய்த வாகனம் கிளைமோர்த் தாக்குதலிற்கு உள்ளானதில் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.
இதேவேளை இந்தப் பிராந்தியம் முழுவதற்குமான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த கருணாவின் சகோதரனான ரெஐp சண்டை ஆரம்பித்தவுடனேயே வாகரையை விட்டுத் பின் வாங்கியுள்ளார். போராளிகளை முன்னோக்கி நகருமாறு தொலைதொடர்புக் கருவிகளினூடாக கட்டளையிட்ட வண்ணம் கருணாவின் தளபதிகள் பின்வாங்கிய சம்பவம் அணித்தலைவர்களால் போராளிகளிற்குத் தெரிவிக்கப்பட்டு மீட்பு அணியிடம் சரணடையும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் முதற்கட்டமாக சுமார் 300ற்கும் மேற்பட்ட போராளிகள் மீட்பு அணியிடம் எந்தவித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தனர். இதேபோன்று சில அணிகளின் பொறுப்பாளர்களும் தங்களின் அணியை இவ்வாறு மீட்பு அணியிடம் கையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை இடம்பெற்ற சண்டையில் கருணா அணி சார்ந்த ஒன்பது பேர் பலியாகியுள்ளதாகவும், 15ற்கு மேற்பட்டோர் வைத்தியசாலைகளிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிற்குள்ளும் மீட்பு அணியினர் பிரிதொரு முனையால் ஊடுருவியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. கருணா இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட பின்பும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தன என்றும் எனினும் தேவையற்ற சண்டைகளைத் தவிர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கான முன்னேற்றத்தை புலிகள் தவிர்த்து வந்தனர் என்பதே அம்மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமகனின் கருத்தாகவுள்ளது.
ஆதாரம்: புதினம்

