04-08-2004, 10:59 PM
கிழக்கு தமிழ் எம்.பி.க்கள் நால்வர் பாதுகாப்பாக மட்டக்களப்பைச் சென்றடைந்தனர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இராணுவ பாதுகாப்புடன் வியாழன்காலை மட்டக்களப்பு வந்து சேர்ந்தனர். கொழும்பு நகரில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான த.கனகசபை, செல்வி தங்கேஸ்வரி, கதிர்காமன், கிங்ஸ்லி இராசநாயகம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் ஆகியோரே மட்டக்களப்பு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி கொழும்பு நகரிலேயே தங்கியுள்ளார். அவர் சுயாதீனமாக கட்சித் தலைமையுடன் இணைந்து செயற்பட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கிழக்கு மாகாண புலிகள் அமைப்பின் தளபதியக இருந்து விலக்கப்பட்ட கேணல் கருணாவுக்கு அனுசரணையாக செயற்படுபவர் என்று நம்பப்படுகிறது. அம்பாறை மாவட்ட தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர் ஆ.பத்மநாதன் இதுவரை தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கிளிநொச்சியில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்திக்க மாட்டார்களென கருணா தரப்பு உத்தியோக பூர்வ நாளிதழான "தமிழ் அலை' செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இராணுவ பாதுகாப்புடன் வியாழன்காலை மட்டக்களப்பு வந்து சேர்ந்தனர். கொழும்பு நகரில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான த.கனகசபை, செல்வி தங்கேஸ்வரி, கதிர்காமன், கிங்ஸ்லி இராசநாயகம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் ஆகியோரே மட்டக்களப்பு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி கொழும்பு நகரிலேயே தங்கியுள்ளார். அவர் சுயாதீனமாக கட்சித் தலைமையுடன் இணைந்து செயற்பட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கிழக்கு மாகாண புலிகள் அமைப்பின் தளபதியக இருந்து விலக்கப்பட்ட கேணல் கருணாவுக்கு அனுசரணையாக செயற்படுபவர் என்று நம்பப்படுகிறது. அம்பாறை மாவட்ட தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர் ஆ.பத்மநாதன் இதுவரை தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கிளிநொச்சியில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்திக்க மாட்டார்களென கருணா தரப்பு உத்தியோக பூர்வ நாளிதழான "தமிழ் அலை' செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

