04-08-2004, 10:41 PM
தனது படத்துக்கே தடை போட்ட விஜய்
சமீபத்தில் ரிலீஸ் ஆன விஜய் படம் சரியாகப் போகாது என்பது தெரிந்த விஜய் அந்தப் படம் ரிலீஸ் ஆகால் இருக்க மறைமுகமாக வேலை செய்திருக்கிறார்.
விஜய்-சிம்ரன் நடித்த சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் 'உதயா'. முழுவதும் படம் எடுக்கப்படாமலேயே எடுத்தவரை எடிட் செய்து படத்தை வெளியிட்டிருந்தார்கள். அதனால். வழக்கமாண படங்களை விட படத்தின் நீளம் ஏறத்தாழ 3,000 அடி குறைவாக இருந்ததால் படம் ஓடும் நேரமும் குறைவாக இருந்தது. இப்படி அரைகுறையாக 'உதயா' படம் வெளிவர சிம்ரனும் ஒரு காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். விஜய்க்கும் இதில் பங்கிருந்தது என்பது இப்போதுதான் தெரியும் என்கிறார்கள் படம் சம்மந்தப்பட்டவர்கள்.
அவர்கள் கூற்றுப்படி பார்த்தால் இந்தப் படம் வெற்றி பெறாது. எனவே இந்தப்படம் வெளிவருவது தற்போது தனக்குள்ள மார்க்கெட்டை பாதிக்கும் என்று விஜய் முடிவு செய்திருக்கிறார். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. "சிம்ரனிடம் மட்டும் இந்தப்படம் வராமலிருப்பது நமது 2 பேருக்கும் நல்லது. நாம் இதைக் காட்டிக்கொள்ளாமல் நமது காம்பினேஷனில் கால்ஷீட் தராமல் இழுத்தடித்து படம் வராமல் பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறார். இவர் சொன்னதால் சிம்ரனும் அதையே செய்திருக்கிறார். இது படம் சம்மந்தப்பட்டவர்கள் பக்கம் சொல்வது. இது ஏன் இவ்வளவு நாளாய் தெரியவில்லை என்று கேட்டால், அதற்கும் தயாராக பதில் சொல்கிறார்கள்.
திருமணம் முடிந்தபின் சிம்ரன் மறுபடியும் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறார். அப்போது தயாரிப்பாளர்கள் 'உதயா' படத்தில் சிம்ரன் கால்ஷீட் சொதப்பியதால் வாய்ப்பு தர தயங்குகிறார்கள். இதை அறிந்த சிம்ரன் வேறு வழியில்லாமல் அவர்கள் சந்தேகத்தை போக்குவதற்காக விஜய் சொல்லித்தான் இவ்வாறு கால்ஷீட் சொதப்பினேன். அவர் டேட் தரும்போது நான் டேட்ஸ் இல்லை என்று சொல்வேன். நான் கால்ஷீட் தரும்போது அவர் வேறு படத்தில் பிஸி என்று சொல்லிவிடுவார். ஆனால் பழி மட்டும் என் ஒருத்தி மேல் விழுந்துவிட்டது என்று கூறிவிட்டாராம்.
இதெல்லாம் உண்மையா என்பத அந்த கடவுளக்கே வெளிச்சம்
நன்றி - சினி சவுத்
சமீபத்தில் ரிலீஸ் ஆன விஜய் படம் சரியாகப் போகாது என்பது தெரிந்த விஜய் அந்தப் படம் ரிலீஸ் ஆகால் இருக்க மறைமுகமாக வேலை செய்திருக்கிறார்.
விஜய்-சிம்ரன் நடித்த சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் 'உதயா'. முழுவதும் படம் எடுக்கப்படாமலேயே எடுத்தவரை எடிட் செய்து படத்தை வெளியிட்டிருந்தார்கள். அதனால். வழக்கமாண படங்களை விட படத்தின் நீளம் ஏறத்தாழ 3,000 அடி குறைவாக இருந்ததால் படம் ஓடும் நேரமும் குறைவாக இருந்தது. இப்படி அரைகுறையாக 'உதயா' படம் வெளிவர சிம்ரனும் ஒரு காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். விஜய்க்கும் இதில் பங்கிருந்தது என்பது இப்போதுதான் தெரியும் என்கிறார்கள் படம் சம்மந்தப்பட்டவர்கள்.
அவர்கள் கூற்றுப்படி பார்த்தால் இந்தப் படம் வெற்றி பெறாது. எனவே இந்தப்படம் வெளிவருவது தற்போது தனக்குள்ள மார்க்கெட்டை பாதிக்கும் என்று விஜய் முடிவு செய்திருக்கிறார். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. "சிம்ரனிடம் மட்டும் இந்தப்படம் வராமலிருப்பது நமது 2 பேருக்கும் நல்லது. நாம் இதைக் காட்டிக்கொள்ளாமல் நமது காம்பினேஷனில் கால்ஷீட் தராமல் இழுத்தடித்து படம் வராமல் பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறார். இவர் சொன்னதால் சிம்ரனும் அதையே செய்திருக்கிறார். இது படம் சம்மந்தப்பட்டவர்கள் பக்கம் சொல்வது. இது ஏன் இவ்வளவு நாளாய் தெரியவில்லை என்று கேட்டால், அதற்கும் தயாராக பதில் சொல்கிறார்கள்.
திருமணம் முடிந்தபின் சிம்ரன் மறுபடியும் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறார். அப்போது தயாரிப்பாளர்கள் 'உதயா' படத்தில் சிம்ரன் கால்ஷீட் சொதப்பியதால் வாய்ப்பு தர தயங்குகிறார்கள். இதை அறிந்த சிம்ரன் வேறு வழியில்லாமல் அவர்கள் சந்தேகத்தை போக்குவதற்காக விஜய் சொல்லித்தான் இவ்வாறு கால்ஷீட் சொதப்பினேன். அவர் டேட் தரும்போது நான் டேட்ஸ் இல்லை என்று சொல்வேன். நான் கால்ஷீட் தரும்போது அவர் வேறு படத்தில் பிஸி என்று சொல்லிவிடுவார். ஆனால் பழி மட்டும் என் ஒருத்தி மேல் விழுந்துவிட்டது என்று கூறிவிட்டாராம்.
இதெல்லாம் உண்மையா என்பத அந்த கடவுளக்கே வெளிச்சம்
நன்றி - சினி சவுத்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

