04-07-2004, 11:24 AM
BBC Wrote:ஐரோப்பாவில் தமிழ் நடிகைக்கு கோவில்
<img src='http://cinesouth.com/images/new/27032004-THN12image2.jpg' border='0' alt='user posted image'>
ஐரோப்பாவின் டென்மார்க் நகரில் தமிழ் நடிகை த்ரிஷாவுக்கு அவரது ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது.
குஷ்பூ, நக்மா என இவர்களைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவிற்கும் ரசிகர்கள் கோவில் ஒன்றை கட்டியுள்ளனர். தமிழ் திரைஉலகிற்கு நடிக்க வந்த சில காலங்களே ஆகியிருந்தபோதிலும், குறைவான படங்களின் மூலமே பெரும்பான்மையான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகை த்ரிஷா.
இயக்குனர் கோபி கிருஷ்ணாவின் 'எனக்கு 20 உனக்கு 18' என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும், இயக்குனர் அமீர் இயக்கி சூர்யா-த்ரிஷா நடிப்பில் உருவான 'மௌனம் பேசியதே' திரைப்படமே, தமிழ் மக்களுக்கு த்ரிஷாவை அடையாளம் காட்டியது. அதனைத் தொடர்ந்து வெளியான ஹரியின் 'சாமி' படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனசில் மாமியாக நிரந்தரமான ஒரு இடத்தை அடைந்தார். இந்நிலையில் த்ரிஷாவின் கால்சீட்டுக்காக இயக்குனர்கள் காத்துக் கிடக்கையில், மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிக்கச் சென்ற த்ரிஷாவிற்கு, தெலுங்கு படங்களின் மூலமாகவும் பலத்த வரவேற்பே கிட்டியது. இவ்வாறு தமிழ், தெலுங்கு என சென்ற பக்கமெல்லாம் த்ரிஷாவின் புகழ் பரவிக் கொண்டே போய், இறுதியில் அது உலகம் முழுவதும் பரவத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பாவின் டென்மார்க் நகரில் நடிகை த்ரிஷாவிற்கு கோவில் ஒன்று அவரது ரசிகர்களால் கட்டப்பட்டுள்ளது என்ற செய்தி வெளிவரவே, அவரைத் தொடர்பு கொண்டு உண்மையா என கேட்க முற்பட்ட போது, அவரின் உதவியாளரே இதை உண்மை என ஊர்ஜிதம் செய்தார்.
முதன்முதலில் ரசிகர்களுக்கு கோவில் கட்டும் எண்ணத்தை உண்டு பண்ணியவர் குஷ்பூ என்றாலும், மிக விரைவில் ஒரு சில படங்கள் மூலமாகவே (வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு) அப்படி ஒரு இடத்தைப் பிடித்தவர் த்ரிஷாதான். இதைத்தவிர இப்போது இவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களிலும், முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருப்பதனால் நிச்சயம், ஹீரோக்களுடைய ரசிகர்களின் நெஞ்சிலும் இடம் பிடிப்பார் என்பதில் வியப்பில்லை. போதாக்குறைக்கு எல்லா நடிகர், நடிகைகளும் ஒருமுறையாவது அவரது இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று நினைக்க வைக்கும் டைரக்டர் மணிரத்னத்தின் படத்தில் வேறு நடித்துள்ளார். எனவே இவரது சினிமா எதிர்காலத்தைச் சொல்லவா வேண்டும்.
என்றாலும் குஷ்பூ, நக்மா, த்ரிஷா என நடிகைகள் ரசிகர்களின் மத்தியில், அவர்களது உள்ளங்களில் கடவுளுக்கு இணையாக கருதப்படுவது ஆச்சர்யத்தையே உண்டுபண்ணுகிறது என்கின்றனர் மூத்த சினிமாக்காரர்கள்.
நன்றி - சினி சவுத்
<span style='font-size:25pt;line-height:100%'>த்ரீஷாவிற்கு கோவில் கட்டிய டென்மார்க் ரசிகர்!
-அலகு, காவடி எடுப்பாங்களா ஆத்தாவுக்கு?</span>
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/thrisha06.jpg' border='0' alt='user posted image'>
நடிகைகளுக்கு கோவில் கட்டும் பழக்கமுள்ள நம் தமிழர்கள் அந்த நல்ல?! காரியத்தை வெளிநாட்டிலும் பரவ செய்துவிட்டார்கள். ஒருகாலத்தில் மதுரையில் குஷ்பூவிற்கு கோவில் கட்டி மோட்சம் பெற்றார்கள். இப்போது த்ரீஷாவுக்கு கோவில் கட்டியிருக்கிறார் ஒரு ரசிகர். டென்மார்க்கில்தான் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட த்ரீஷாவிற்கு, அந்த கோவிலைப் பார்த்துவிட்டு அதை கட்டிய ரசிகருக்கு தரிசனம் கொடுக்க வேண்டும் என்று ஆவல் பிறந்துவிட்டதாம். இதனால் கோடை வெயிலை சமாளிக்க செல்லும் ஊரின் பட்டியலில் டென்மார்க் பெயரையும் சேர்த்திருக்கிறார். ஆத்தா போயிருக்கிற நேரமா பார்த்து அலகு காவடி எடுப்பாங்களோ என்னவோ
Thanx: Tamil Cinema
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

