04-05-2004, 05:38 PM
<span style='font-size:25pt;line-height:100%'>ஆட்டோகிராப்பின் அருள்</span>
துவாரகாநாத். பி.சி. ஸ்ரீராமின் சீடர்களில் ஒருவர். "ஆட்டோ கிராப்'பில் கேமிரா கவிதை புனைந்த நால்வரில் ஒருவர்.
ஹை டெபனிஷன் கேமிராவைக் கையாண்ட இரண்டாவது இந்திய ஒளிப்பதிவாளர் இவர். முதலாமர் இவரது குரு.
ஈரோட்டைச் சேர்ந்த இவர், தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறாராம். எல்லாம் ஆட்டோ கிராப்பின் அருள்! அப் படத்தில் கோவையில் சேரன் இருப்பதாகக் காட்டப்படும் காட்சிகளும் சிநேகா சம்பந்தப்பட்ட காட்சிகளும் இவரது கைவண்ணம்தான்!
இவர் சினிமாவுக்கு வந்தது எப்படி?
"ஸ்கூல்ல படிக்கறப்பதான் திரைப்படக் கல்லூரியைப் பத்தி தெரிய வந்தது. காலேஜ்ல படிக்கும் போது, புகைப்படப் பிரிவுகள்ல நிறைய பரிசு வாங்கினேன். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பி.சி. ஸ்ரீராம்கிட்ட உதவியாளராயிட்டேன்.
காதலர் தினம், முகம், முகவரி, அலைபாயுதே, குஷி (தெலுங்கு) ன்னு அவர்கிட்ட 5 படங்களும் 45 விளம்பரப் படங்களுக்கும் உதவியாளரா இருந்தேன். பி.சி. சார் ரொம்ப என்கரேஜ் பண்ணுவார்.
அதுக்கப்புறம் இப்ப சேரன் வாய்ப்பு கொடுத்து வெளியே வந்திருக்கேன். இன்னொரு பக்கம் ஏரியல், கோல்டு வின்னர், ப்ரிமியர்னு நிறைய விளம்பரப் படங்களும் பண்ணிட்டு இருக்கேன். மகேஷ் நினைவு அறக்கட்டளைக்காக, புற்றுநோய் பற்றிய குறும்படம் ஒன்றையும் பண்ணி இருக்கிறேன்' என்கிறார்.
இவரைப் பொருத்தவரைக்கும் கேமிரா இருப்பதையே உணர வைக்காமல் இருப்பதுதான் நல்ல ஒளிப்பதிவு என்கிறார். "ஓர் ஒளிப்பதிவாளனுக்கு அடிப்படைத் தேவைகள் கற்பனை வளமும் பொறுமையும்தான். எல்லா கதைக்கும் ஒரே மாதிரி ஒளிப்பதிவு பண்ணக் கூடாது. ஜாதி கலவரம்னா கேமிரா ஓடிக்கிட்டே இருக்கணும். நகரக் காட்சிகள் பண்ணும்போது கேமிராவுல ஓர் அவதி தெரியும்' என்கிறார்.
ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பேசவே மாட்டாராம்.
அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். மொழி வித்தியாசம் பார்க்காமல் பணிபுரியும் ஆசை இவருக்கு இருக்கிறது.
துவாரகாநாத். பி.சி. ஸ்ரீராமின் சீடர்களில் ஒருவர். "ஆட்டோ கிராப்'பில் கேமிரா கவிதை புனைந்த நால்வரில் ஒருவர்.
ஹை டெபனிஷன் கேமிராவைக் கையாண்ட இரண்டாவது இந்திய ஒளிப்பதிவாளர் இவர். முதலாமர் இவரது குரு.
ஈரோட்டைச் சேர்ந்த இவர், தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறாராம். எல்லாம் ஆட்டோ கிராப்பின் அருள்! அப் படத்தில் கோவையில் சேரன் இருப்பதாகக் காட்டப்படும் காட்சிகளும் சிநேகா சம்பந்தப்பட்ட காட்சிகளும் இவரது கைவண்ணம்தான்!
இவர் சினிமாவுக்கு வந்தது எப்படி?
"ஸ்கூல்ல படிக்கறப்பதான் திரைப்படக் கல்லூரியைப் பத்தி தெரிய வந்தது. காலேஜ்ல படிக்கும் போது, புகைப்படப் பிரிவுகள்ல நிறைய பரிசு வாங்கினேன். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பி.சி. ஸ்ரீராம்கிட்ட உதவியாளராயிட்டேன்.
காதலர் தினம், முகம், முகவரி, அலைபாயுதே, குஷி (தெலுங்கு) ன்னு அவர்கிட்ட 5 படங்களும் 45 விளம்பரப் படங்களுக்கும் உதவியாளரா இருந்தேன். பி.சி. சார் ரொம்ப என்கரேஜ் பண்ணுவார்.
அதுக்கப்புறம் இப்ப சேரன் வாய்ப்பு கொடுத்து வெளியே வந்திருக்கேன். இன்னொரு பக்கம் ஏரியல், கோல்டு வின்னர், ப்ரிமியர்னு நிறைய விளம்பரப் படங்களும் பண்ணிட்டு இருக்கேன். மகேஷ் நினைவு அறக்கட்டளைக்காக, புற்றுநோய் பற்றிய குறும்படம் ஒன்றையும் பண்ணி இருக்கிறேன்' என்கிறார்.
இவரைப் பொருத்தவரைக்கும் கேமிரா இருப்பதையே உணர வைக்காமல் இருப்பதுதான் நல்ல ஒளிப்பதிவு என்கிறார். "ஓர் ஒளிப்பதிவாளனுக்கு அடிப்படைத் தேவைகள் கற்பனை வளமும் பொறுமையும்தான். எல்லா கதைக்கும் ஒரே மாதிரி ஒளிப்பதிவு பண்ணக் கூடாது. ஜாதி கலவரம்னா கேமிரா ஓடிக்கிட்டே இருக்கணும். நகரக் காட்சிகள் பண்ணும்போது கேமிராவுல ஓர் அவதி தெரியும்' என்கிறார்.
ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பேசவே மாட்டாராம்.
அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். மொழி வித்தியாசம் பார்க்காமல் பணிபுரியும் ஆசை இவருக்கு இருக்கிறது.

