04-05-2004, 12:20 PM
வட, கிழக்கு தேர்தலை இரத்தாக்க வலியுறுத்துகிறது ஜாதிக ஹெல உறுமய
வட, கிழக்கில் இடம் பெற்றது தேர்தல் அல்ல. பிரபாகரன், கருணாவின் பயங்கரவாதமே இடம்பெற்றுள்ளது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து மீண்டுமொரு தேர்தலை அங்கு நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது:
ஜனநாயக சூழ் நிலையில் வட, கிழக்கில் தேர்தல்கள் இடம் பெறவில்லை. முழுக்க முழுக்க பயங்கரவாதமே அங்கு இடம் பெற்றது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து சர்வதேச மத்தியஸ்தத்துடன் தேர்தலை மீண்டும் அங்கு நடத்த வேண்டும்.
இப் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் வாக்களித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கின்றன. பகிரங்கமாக திருட்டு வாக்கு அளித்துள்ளனர்.
ஐ.தே.கட்சி நாட்டில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெறுமனே ஒரு மாயையைத்தான் கொண்டு சென்றது. இதனை மக்கள் இன்று நிராகரித்துள்ளதோடு புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற ஐ.தே.கட்சியின் நிலைப்பாட்டையும் அவர்களை தேர்தலில் தோல்வியடையச் செய்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்று ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா தமது வாக்கை அளிப்பதற்காக சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடனேயே செல்ல வேண்டியுள்ளது. அந்தளவிற்கு தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே மாறி விட்டனர்.
ஜனாதிபதியும், ரணிலும் புலிகளுடன் பேச வேண்டுமென்கிறார்கள். எதற்காக பேச வேண்டும் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இது போன்றதொரு சூழ்நிலையில் ஹெல உறுமய பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து தோல்வியடையச் செய்யும்.
ஹெல உறுமயவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப ஏதும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமானால் ஆதரிப்போம். ஆனால், எதற்காக பேசுகிறார்கள் என்பது தெளிவு படுத்தப்பட வேண்டுமென்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
வட, கிழக்கில் இடம் பெற்றது தேர்தல் அல்ல. பிரபாகரன், கருணாவின் பயங்கரவாதமே இடம்பெற்றுள்ளது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து மீண்டுமொரு தேர்தலை அங்கு நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது:
ஜனநாயக சூழ் நிலையில் வட, கிழக்கில் தேர்தல்கள் இடம் பெறவில்லை. முழுக்க முழுக்க பயங்கரவாதமே அங்கு இடம் பெற்றது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து சர்வதேச மத்தியஸ்தத்துடன் தேர்தலை மீண்டும் அங்கு நடத்த வேண்டும்.
இப் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் வாக்களித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கின்றன. பகிரங்கமாக திருட்டு வாக்கு அளித்துள்ளனர்.
ஐ.தே.கட்சி நாட்டில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெறுமனே ஒரு மாயையைத்தான் கொண்டு சென்றது. இதனை மக்கள் இன்று நிராகரித்துள்ளதோடு புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற ஐ.தே.கட்சியின் நிலைப்பாட்டையும் அவர்களை தேர்தலில் தோல்வியடையச் செய்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்று ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா தமது வாக்கை அளிப்பதற்காக சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடனேயே செல்ல வேண்டியுள்ளது. அந்தளவிற்கு தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே மாறி விட்டனர்.
ஜனாதிபதியும், ரணிலும் புலிகளுடன் பேச வேண்டுமென்கிறார்கள். எதற்காக பேச வேண்டும் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இது போன்றதொரு சூழ்நிலையில் ஹெல உறுமய பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து தோல்வியடையச் செய்யும்.
ஹெல உறுமயவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப ஏதும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமானால் ஆதரிப்போம். ஆனால், எதற்காக பேசுகிறார்கள் என்பது தெளிவு படுத்தப்பட வேண்டுமென்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

