04-05-2004, 11:23 AM
குத்து பட விமர்சனம்
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/kuthu_simbu_divyasbanthas.jpg' border='0' alt='user posted image'>
ஊரில் உள்ள மசாலா ஐயிட்டங்களை எல்லாம் ஒன்று சேர்த்து அதில் வழிய வழிய, காதல் நெய்யை ஊற்றினால் கமகம 'குத்து' ரெடி! இந்த விபரீத கலவை சில காட்சிகளில் வயிற்றை பிசைய வைப்பதுதான் ஜீரணிக்க முடியாத பகீர்!
முந்தைய படமான 'தம்' மிற்கும் இப்போது வந்திருக்கும் 'குத்து' விற்கும் ஆறு வித்யாசங்கள் கேட்டால் ரசிகர்கள் திகைத்து திண்டாடவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் சின்ன சின்ன திருப்பங்களில் தன்னுடைய ஷார்ப் மூளையை பயன்படுத்தி அட போட வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். கதையை மறுபடி(?) சொல்வதில் தப்பில்லை என்பதால் கதை....
பணக்கார தாதா கலாபவன்மணி. அவருக்கு ஒரே பெண் திவ்யா பந்தனாஸ். கல்லூரிக்கு படிக்க வரும் அவரிடம், காதல் பாடம் கற்க ஆசைப்படுகிறார் சிம்பு. நடுத்தர குடும்பத்து பிள்ளைக்கு, பணக்கார பெண் மீது ஆசை வரலாமா? வரக்கூடாது என்று சொல்வதற்கு சிம்பு என்ன சாதாரண மனுஷனா? அவதாரமாச்சே! இடையில் குறுக்கிடும் அப்பனை, தன் தலையில் ரிப்பனை கட்டிக் கொண்டு விளாசுகிறார் சிம்பு. வில்லன்கள் ஓட, வெற்றியடைகிறது காதல்!
விரல் விளையாட்டை ஒலிம்பிக் விளையாட்டு போல் நினைத்து நிறைய மெனக்கட்டிருக்கிறார் சிம்பு. ரசிக்கவும் முடிகிறது! தன் பெண்ணை ஊரெல்லாம் வலை வீசி தேடிக் கொண்டிருக்கும் கலாபவன் மணிக்கு தண்ணி காட்டிவிட்டு அவர் வீட்டிலேயே தன் கல்யாணத்தை முடிக்கும் சிம்புவின் தெம்பு, 100 மைல் வேக அம்பு! அதுமட்டுமா? சிம்புவின் அம்மா அப்பாவை கடத்தி வர தன் கைத்தடிகளை அனுப்புகிறார் வில்லன்! ஆனால் அவர்கள் இருவரும் வில்லன் வீட்டிலேயே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். (இந்த அப்பளம் எங்கே வாங்கினீங்க? வில்லனிடமே விசாரிக்கிறார் விஜயகுமார். திமிலோகப்படுகிறது தியேட்டர்!)
இந்தா எடுத்துக்கோ.. என்று அள்ளி அள்ளி தருகிறார் திவ்யா பந்தனாஸ். கவர்ச்சியையும், நடிப்பையும் சரிவிகிதத்தில் தந்திருக்கிற இந்த தேவதை, ரசிகர்களை நனைக்க வந்த கோடை மழை!
விஜயகுமார் பேசும் அந்த வசனங்கள் மனோகராவின் மறுபதிப்பு. மாணவர்கள் மீது கை வைத்தால் அவ்வளவுதான்.... மாணவர் புரட்சின்னா என்னன்னு தெரியுமா? அவங்க மேல கை வச்சு பாருங்க... இப்படியெல்லாம் அவர்பேசுவது ஏதோ யுகப் புரட்சிக்காக என்று நீங்கள் நினைத்தால், ஐயோ பாவம்... எல்லாம் மகன் சிம்புவின் காதலுக்காகதான்!
சாமியில் வந்து தூள் கிளப்பிய அந்த கோட்டா சீனிவாசராவா இது? ஸாரி.... இந்த எபிசோடில் மட்டும் ஒரே தெலுங்கு வாசமுலு!
கருணாசின் காமெடியில் வியத்தகு வேகம்! சிம்புவின் தோழனாக கல்லூரிக்குள்ளும் வந்து கலக்கியிருக்கிறார்.
எந்த நேரத்தில் எந்த மாதிரி ரீயாக்ஷன் வருமோ? கதிகலங்க வைத்திருக்கிறார் கலாபவன்மணி. அர்த்த ராத்திரியில் எழுந்து மாமனார் வீட்டுக்கு ஓடிப்போய் மகளை பார்த்துவிட்டு திருப்தியடையும் இந்த ராட்சசன், பல இடங்களில் குழந்தையாக குதூகலிப்பது விசேஷ வெளிப்பாடு!
இசையமைப்பாளர் தேவாவின் இசை வாரிசு ஸ்ரீகாந்தின் பாடல்கள் அத்தனையும் குத்து ரகம்! ''நிபுணா நிபுணா..'' விபரீத மெலடி!
குத்து...பன்ச்!
நன்றி - தமிழ் சினிமா
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/kuthu_simbu_divyasbanthas.jpg' border='0' alt='user posted image'>
ஊரில் உள்ள மசாலா ஐயிட்டங்களை எல்லாம் ஒன்று சேர்த்து அதில் வழிய வழிய, காதல் நெய்யை ஊற்றினால் கமகம 'குத்து' ரெடி! இந்த விபரீத கலவை சில காட்சிகளில் வயிற்றை பிசைய வைப்பதுதான் ஜீரணிக்க முடியாத பகீர்!
முந்தைய படமான 'தம்' மிற்கும் இப்போது வந்திருக்கும் 'குத்து' விற்கும் ஆறு வித்யாசங்கள் கேட்டால் ரசிகர்கள் திகைத்து திண்டாடவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் சின்ன சின்ன திருப்பங்களில் தன்னுடைய ஷார்ப் மூளையை பயன்படுத்தி அட போட வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். கதையை மறுபடி(?) சொல்வதில் தப்பில்லை என்பதால் கதை....
பணக்கார தாதா கலாபவன்மணி. அவருக்கு ஒரே பெண் திவ்யா பந்தனாஸ். கல்லூரிக்கு படிக்க வரும் அவரிடம், காதல் பாடம் கற்க ஆசைப்படுகிறார் சிம்பு. நடுத்தர குடும்பத்து பிள்ளைக்கு, பணக்கார பெண் மீது ஆசை வரலாமா? வரக்கூடாது என்று சொல்வதற்கு சிம்பு என்ன சாதாரண மனுஷனா? அவதாரமாச்சே! இடையில் குறுக்கிடும் அப்பனை, தன் தலையில் ரிப்பனை கட்டிக் கொண்டு விளாசுகிறார் சிம்பு. வில்லன்கள் ஓட, வெற்றியடைகிறது காதல்!
விரல் விளையாட்டை ஒலிம்பிக் விளையாட்டு போல் நினைத்து நிறைய மெனக்கட்டிருக்கிறார் சிம்பு. ரசிக்கவும் முடிகிறது! தன் பெண்ணை ஊரெல்லாம் வலை வீசி தேடிக் கொண்டிருக்கும் கலாபவன் மணிக்கு தண்ணி காட்டிவிட்டு அவர் வீட்டிலேயே தன் கல்யாணத்தை முடிக்கும் சிம்புவின் தெம்பு, 100 மைல் வேக அம்பு! அதுமட்டுமா? சிம்புவின் அம்மா அப்பாவை கடத்தி வர தன் கைத்தடிகளை அனுப்புகிறார் வில்லன்! ஆனால் அவர்கள் இருவரும் வில்லன் வீட்டிலேயே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். (இந்த அப்பளம் எங்கே வாங்கினீங்க? வில்லனிடமே விசாரிக்கிறார் விஜயகுமார். திமிலோகப்படுகிறது தியேட்டர்!)
இந்தா எடுத்துக்கோ.. என்று அள்ளி அள்ளி தருகிறார் திவ்யா பந்தனாஸ். கவர்ச்சியையும், நடிப்பையும் சரிவிகிதத்தில் தந்திருக்கிற இந்த தேவதை, ரசிகர்களை நனைக்க வந்த கோடை மழை!
விஜயகுமார் பேசும் அந்த வசனங்கள் மனோகராவின் மறுபதிப்பு. மாணவர்கள் மீது கை வைத்தால் அவ்வளவுதான்.... மாணவர் புரட்சின்னா என்னன்னு தெரியுமா? அவங்க மேல கை வச்சு பாருங்க... இப்படியெல்லாம் அவர்பேசுவது ஏதோ யுகப் புரட்சிக்காக என்று நீங்கள் நினைத்தால், ஐயோ பாவம்... எல்லாம் மகன் சிம்புவின் காதலுக்காகதான்!
சாமியில் வந்து தூள் கிளப்பிய அந்த கோட்டா சீனிவாசராவா இது? ஸாரி.... இந்த எபிசோடில் மட்டும் ஒரே தெலுங்கு வாசமுலு!
கருணாசின் காமெடியில் வியத்தகு வேகம்! சிம்புவின் தோழனாக கல்லூரிக்குள்ளும் வந்து கலக்கியிருக்கிறார்.
எந்த நேரத்தில் எந்த மாதிரி ரீயாக்ஷன் வருமோ? கதிகலங்க வைத்திருக்கிறார் கலாபவன்மணி. அர்த்த ராத்திரியில் எழுந்து மாமனார் வீட்டுக்கு ஓடிப்போய் மகளை பார்த்துவிட்டு திருப்தியடையும் இந்த ராட்சசன், பல இடங்களில் குழந்தையாக குதூகலிப்பது விசேஷ வெளிப்பாடு!
இசையமைப்பாளர் தேவாவின் இசை வாரிசு ஸ்ரீகாந்தின் பாடல்கள் அத்தனையும் குத்து ரகம்! ''நிபுணா நிபுணா..'' விபரீத மெலடி!
குத்து...பன்ச்!
நன்றி - தமிழ் சினிமா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

