04-04-2004, 04:53 PM
![[Image: ltte.bmp]](http://sooriyan.com/images/stories/ltte/ltte.bmp)
<span style='color:red'>தமிழீழ விடுதலைப் புலிகள் வாழ்த்து
அரசியல்த்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
25-03-2004.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து, பெரும் தியாகங்கள் புரிந்து, பெரும் இராணுவ வெற்றிகளைக் குவித்து, தீர்க்கமான வரலாற்றுக் கட்டத்தை அடைந்துள்ள எமது தேச விடுதலைப் போராட்டத்திற்கும் அதனைத் தலைமை தாங்கி முன்னெடுத்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் (ஏப்ரல் 02, 2004) தமிழ் மக்கள் தமது தார்மீக ஆதரவை மீள உறுதிப்படுத்தி, எமது போராட்ட முன்னெடுப்புக்களுக்கு தமது ஒட்டுமொத்த ஆணையை வழங்கி, ஆற்றிய வரலாற்றுப் பணி மகத்தானது.
தமிழ்த் தேசிய உணர்வுடனும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் தமிழ் மக்கள் எந்தவிதமான சிரமங்களையும் பொருட்படுத்தாது, கொழுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையாக நின்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒருமித்து ஒற்றுமையாகத் தமது வாக்குகளைச் செலுத்தி, அதற்கு மகத்தான வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்து, சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் பகிரங்கமாகப் பெரும் செய்தியினைச் சொல்லியுள்ளார்கள்.
மீண்டும் இத்தேர்தல் மூலம் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தமிழீழ மக்களின் தேசியத் தலைமையாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழீழ மக்களின் உண்மையான ஏகப் பிரதிநிதிகளாகவும் உலகிற்கு உறுதியாக எடுத்துக்கூறியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் எந்தவிதமான பேதங்களுமின்றி ஒன்றுபட்டு, ஒற்றுமையாக நிற்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்தோடு, தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் தன்னாட்சி உரிமை ஆகிய தமிழீழத் தேசிய இனத்தின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்று அவற்றின் அடிப்படையில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்பதையும் இல்லாதுவிடின் தமிழீழத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் தமிழரின் இறைமையை நிலைநிறுத்தப் போராடுவோம் என்பதையும் தெளிவாக இடித்துரைத்துள்ளார்கள்.
தமிழீழத் தனியரசை அமைக்குமாறு 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களித்த பின்னர், தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில்தான் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்று, தமிழ்த் தேசிய உணர்வோடு தமது அபிலாசைகளையும் விருப்பங்களையும் மிகவும் உறுதியாகத் தீர்க்கமான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தவோ அசட்டைசெய்யவோ முடியாதவாறு அதனைத் தூக்கிநிறுத்தியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் பலம்மிக்க வலுவான மக்கள் சக்தியாக உலகிற்கு மீளவும் நிரூபித்திருக்கிறார்கள். இது எமது போராட்ட முன்னெடுப்புக்களுக்குக் கிடைத்த மாபெரும் அரசியல் வெற்றி. இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்த தமிழ் மக்களுக்கு இச்சந்தர்ப்பத்திலே தமிழீழத் தேசியத் தலைவர் சார்பாகவும் எமது அமைப்பின் சார்பாகவும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்தோடு, தமிழ் மக்களது பாதுகாப்பிற்காகவும் சுதந்திர வாழ்விற்காகவும் அயராது போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைத்துவத்தினது அரசியல் போராட்ட முன்னெடுப்புக்களுக்கும் பக்கத்துணையாக இருந்து செயற்படவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தொடர்ந்து உங்கள் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிச் செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.</span>
sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

