04-04-2004, 01:59 PM
sOliyAn Wrote:எனக்கு கண்ணன் தான் கூறினார். ஒருமுறை றீவிறெஸ் செய்வது யார் சேர்வர் சிலோவாக வேலைசெய்கிறது என களத்தில் கண்ணாவால் எழுதப்பட்டபோது அதற்கு என்ன முறுக்கிறதை கண்டுபிடிச்சிட்டியள் போலை இருக்கோ ஏதோ என சோழியான் எழுதிஇருந்தார். அப்போதான் இந்த விளக்கத்தை எனக்கு கண்ணா சொன்னார். (அந்த காலப:;பகுதியில் தான் மோகன் பார்வையாளரின் எண்ணிக்கையை முறுக்கி விட்டிருக்கிறாh ;என என்னால் எழுதப்பட்டது.
இவ்வாறு நிகழ்ந்ததுதான். ஏதோ சுவாரிசியமாக அவருக்கு பதில் கொடுக்கப்போய் அது இவ்வளவுதூரம் வந்திருக்கிறது. அதேவேளையில், அன்று அவர் இது தனிச்செய்தியா.. கருத்துக்களமா என்று எழுதியிருந்தார்... அப்படியாயின் அவ்வளவுக்கு அவர் அன்று நிதானமில்லாத மயக்கநிலையில் இருக்கிறார்.. அந்த மயக்கநிலையில்தான் தங்களுடன் உரையாடினார் என மனம்போனபோக்கில் முடிவுகட்டிவிட முடியுமா?!
நான் மீண்டும் மீண்டும் நான் சொல்வதற்கு எதுவுமில்லை என்று கூறிய போதும் அதை புரிந்து கொள்ளாமல் மயக்கநிலையில் இருந்தார் மனம் போன போக்கில் எழுதினார் என்று கூறுவதனால் நானும் எனது நிலைப்பாட்டை கூறவேண்டியது அவசியம்.
தனிச்செய்தியா கருத்துக்களமா என்று,
ஏன் எழுதினேன் என்று எனக்கும் வசிசுதாவுக்கும் தான் தெரியும். ஆனால் அது மயக்கநிலையில் எழுதப்படவில்லை.
மற்றது சிலர் நினைப்பது போல் ஒரு கணனியின் இணையப்பாவனையை அவர்கள் வீட்டில் போய் இருந்துதான் கவனிக்க வேண்டுமென்பதில்லை. கணனியின் பாதுகாப்பும் கணனியை பாவிப்பவரின் அறிவைப்பொறுத்து இதை உலகத்தில் எந்த மூலையிலிருந்தும்(இணையஇணைப்பு உள்ள ) கவனிக்கமுடியும்.
சாதரண மெசெஞ்சரில் ஒரு முறை தொடர்பு கொள்ளும் போது சில தகவல்களை சரியான முறையில் உங்கள் கணனிக்குள் அனுப்பிவிட்டால், அதன் பின் நீங்கள் எந்த எந்த வெப்பதளங்களை பார்க்கறீர்கள் எத்தனைதரம் பார்க்கிறீர்கள். எவ்வளவு நேரம் பார்க்கறீர்கள். என்பதை அறியமுடியும் (தமிழ்களுக்குள் இது மிகவும் இலகுவானது. எதை அனுப்பினாலும் கணனி முதலில் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை கூறும் ஆனால் நம்மவர்கள்ஆமா அனுப்புங்க இன்னும் இருக்கா என்பது போல் வரவேற்பார்கள்)
தனியே மெசெஞ்சர் மட்டுமல்லாது
மின்னஞ்சலில் கூட எதுவித சமிஞ்ஞையும் தெரியாமல் கூட சில script களை அனுப்பிவிடலாம்.
அதே போல் chat,
forum களில் உள்ள Private massage இல் கூட பல விளையாட்டுக்களை செய்யலாம்.
இந்தவிடயங்கள் பற்றி நான் இங்கு கூறவேண்டிய அவசியமில்லை
எனவே நீங்கள் கேட்டதற்கிணங்க விடயத்திற்கு வருகிறேன்.
ஒரு நாள் இரவு போல் நான் களத்தை பார்த்த்துக்கொண்டு இருக்கும் போது சேர்வர் slow ஆகியது. அந்த வேளையில்
http://www.yarl.com/articles.php?articleId=156 என்ற கட்டுரை refresh பண்ணப்பட்டுக்கொண்டு இருந்தது.அதாவது மீற்றர் முறுக்கப்பட்டுக்கொண்டு இருந்தது கிட்டத்தட்ட 200 பேர் மேலதிகமாக பார்க்கப்பட்டதாக (5நிமிடத்தில்) செய்யப்பட்டது. இதனை செய்து கொண்டிருந்த ஐபி ஜேர்மனியில்லுள்ள Bremen நகரைச்சேர்ந்ததாக இருந்தது. அப்போது தான் நான் கேட்டேன் யார் refresh பண்ணுவதாக. அப்போது நீங்கள் செய்தான் செய்கிறீர்கள் என்ற கருத்தை ஒத்த பதிலைதந்தீர்கள்.
இது நடந்து சில நேரங்களுக்குப்பின் நளாயினி அக்காவுடன் refresh (F5) பற்றி தனி மடலில் விளக்கம் கொடுத்தேன்.
அதாவது யாழ் வெப்தளத்தில் முன்பக்கத்தில் ஒரு கட்டுரையையோ வேறு ஆக்கத்தையோ பார்க்கும் போது அந்தக்கட்டுரைக்குரிய மீற்றர் மட்டுமல்லாது களத்தில் உள்ள மீற்றரும் ஓடும் . முதல்பக்கத்திற்கும் களத்தின் database க்கும் தொடர்பு இருப்பதால் முன்பக்கில் ஏற்படும் தாக்கம் இங்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.சிலோ ஆவதற்கும் அது ஓரு காரணம்.
நான் நளாயினி அக்காவிடம்
சோழியான் பற்றி எதுவும் நான் சொல்லவில்லை.
எந்தக்கட்டுரை முறுக்கப்பட்டது என்றும் கூறவில்லை.
எந்த ஐபி என்றும் கூறவில்லை.
எந்த நாட்டிலிருந்து என்றும் கூறவில்லை.
தனியே refresh பற்றியும் அதன் தாக்கம் பற்றியுமே தெரிவித்தேன்.
ஆனால் நளாயினி அக்கா நான் தான் சோழியன் முறுக்கிறார் என்று கூறினேன் என்றார்.
இதை எழுதும் போது சோழியானும் களத்தில் நின்றார் .உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நளாயினி அக்காவிடம் மீண்டும் நானா சொன்னேன் என்று கேட்டெழுதினேன். ஆனால் அதற்கு பதில் தரவில்லை
அதற்கிடையில் சோழியானும் உள்ளே வந்து தன்னைப்பற்றியும் தனது எழுத்துப்பற்றியும் ஏதோ எல்லாம் எழுதி நளாயினி அக்கா எழுதியதற்கு நான் விளக்கம் தரவேண்டும் என்று கேட்டார்.
ஏற்கனவே பழைய களத்தில் சோழியனுக்கு ஏதோ ஒரு ஆக்கத்திற்கு கருத்து எழுதப்போய் கழுதை என்றும் ஏதோ முக்கா... என்று ஏதோ தொனியில் பல திட்டல்களை வாங்கிய பின் அவரின் கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனாலும் சாதாரண கருத்துப்பரிமாற்றத்தை வைத்திருந்தேன்.
ஆனால் நளாயினி அக்கா நான் தான் சொன்னேன் என்று கூறாதபோதும் நான் கேட்ட கேள்விகளக்க அவர் சரியான பதிலை தராமல் செல்வதை சோழியன் கண்ட பின்பும். நான் அதற்கு விளக்கம் தரவேண்டும் என்பதும் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேட்டபின்
இதற்கு மேல் இங்கு நான் எதையும் எழுத விருப்பப்படவில்லை. அப்படி எழுதினாலும் நான் எழுதுவதை இவர்கள் புரிந்து கொள்ளப்போவதுமில்லை.
அதனால் நான் இங்கு எழுதுவதற்கு எதுவுமில்லை என்று எழுதிவிட்டுச்சென்றேன்.
அப்போது சற்றுக்கோபமாகவும் இருந்தேன்.
இப்படி முட்டாள் தனமாக நடக்கிறார்களே என்று நினைத்து நிர்வாகத்திற்கு,
அந்த லூசுகளுக்கு நான் நான் பதில் எழுதப்போவதில்லை என்றும்
சோழியன் முறுக்கிறதையும் முறுக்கிவிட்டு இப்படி நடிக்கிறார் என்று எழுதிவிட்டுச்சென்றேன்.
ஆனால் சோழியனும் நளாயினி அக்காவும் என்னை விடுவதாக இல்லை
நான் தான் சொன்னேன் என்று கூறி என்னை ஒரு பொய்யன் என்பது போல் களத்தில் அடையாமிட்டா நளாயினி அக்கா
மயக்கநிலையில் இருந்தேன் என்றார் சோழியான்
இவர்கள் இப்படி ககூறிய பின் எனது பக்க நியாயத்தை எழுதவேண்டும் என்பதால் இங்கு எழுதியுள்ளேன்.
வசிசுதா எழுதியது போல் நளாயினி அக்கா நாரதர் வேலை பார்த்ததாக நான் நினைக்கவில்லை நான் பலகாலமாக அவருடன் பழகியிருக்கிறேன்.அவர் எதையும் வஞ்சகம் இல்லாது வெளியில் சொல்லக்ககூடியவர்.அந்த ரீதியில் தான் அறிந்ததை அப்படியே வெளியே கூறியுள்ளார். ஆனால் இது அறிவுபூர்வமான செயல் அல்ல, இனிவரும் காலங்களில் ஒருவர் எழுதியதை நன்றாக வாசித்து புரிந்து கொண்ட பின் அதுபற்றி மற்றவர்களிடம் கூறவேண்டும் என்பதை நளாயினி அக்கா கவனத்தில் எடுக்க வேண்டும்.
சோழியானுக்கு
அன்றைய தினம் நீங்கள் தான் அதை செய்வதாக ஒத்துக்கொண்டீர்கள். அதுவும் வெளியரங்கில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் , இப்போது நீங்கள் ஏதோ சுவாரிசியத்திகாக சொன்னீர்கள் என்று சொல்கிறீர்கள். காகம் இருக்க பனம்பழம் விழுந்தது போல். யாரோ Bremen இல் இருந்து முறுக்க அந்தநேரம் பார்த்து நீங்களும் நீங்கள் தான் செய்கிறீர்கள் என்று கூறியதால் தான் இவ்வளவு பிரச்சனையும்.ஆனால் கடைசியில் எனது தலையில் எல்லா பழியையும் போட்டதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
கடைசியாக நளாயினி அக்காவிடம் ஒரு கேள்வி:
நான் திரும்பத்திரும்பகேட்பது உண்மையில் நான் அப்படிச்சொன்னேனா? அப்படிச்சொல்லியிருப்பின் உண்மையில் சோழியன் கூறியது போல் நான் மயக்க நிலையில் தான் இருந்திருக்கவேண்டும்.

