04-01-2004, 02:15 AM
நாளை இரவு 10 மணிமுதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த தீர்மானம்?
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை முடிவடைந்து வாக்குப்பெட்டிகள் வாக்குக் கணக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டவென நாளை இரவு 10 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த பாதுகாப்பு கவுன்சில் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை மறுதினம் சனிக்கிழமை நிலைமையை அவதானித்த பின் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
இதேவேளை ஊரடங்குச் சட்டம் குறித்து அச்சம் கொண்டுள்ள பொது மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரும் அக்கறை செலுத்தி வருகின்றனர். இதனால் சந்தையில் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ஒரு கிலோ சீனியின் விலை 45 ரூபா வரை உயர்ந்துள்ளது. பருப்பு, கிழங்கு, காய்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. சீனியின் இறக்குமதித் தீர்வை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் சீனியின் விலை இன்னும் குறைவடையாமைகுறித்து நுகர்வோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நன்றி - வீரகேசரி
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை முடிவடைந்து வாக்குப்பெட்டிகள் வாக்குக் கணக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டவென நாளை இரவு 10 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த பாதுகாப்பு கவுன்சில் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை மறுதினம் சனிக்கிழமை நிலைமையை அவதானித்த பின் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
இதேவேளை ஊரடங்குச் சட்டம் குறித்து அச்சம் கொண்டுள்ள பொது மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரும் அக்கறை செலுத்தி வருகின்றனர். இதனால் சந்தையில் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ஒரு கிலோ சீனியின் விலை 45 ரூபா வரை உயர்ந்துள்ளது. பருப்பு, கிழங்கு, காய்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. சீனியின் இறக்குமதித் தீர்வை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் சீனியின் விலை இன்னும் குறைவடையாமைகுறித்து நுகர்வோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

