03-31-2004, 03:26 PM
பிரதமர் ரணில் - ஐனாதிபதி சந்திரிகா
ஒரு கற்பனைச் சந்திப்பு
-வாசகன் ரட்ணதுரை-
ஐனாதிபதி தென்கொரியா பற்றிய, பிபிசி செய்தியை ரிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் தென்கொரிய ஐனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுகின்றது. அதனை ஐனாதிபதியின் ஆதரவாளர்களான எதிர்க்கட்சியினர் எதிர்த்துக் குரல்கொடுகின்றனர்.
அப்போது அரசாங்கக் கட்சியின் சார்பான சபாநாயகர், ஐனாதிபதியின் கட்சியினரை வெளியேற்றுமாறு பணிக்கின்றார். ஒவ்வொருவராக சபையின் காவலர்கள் வந்து ஐனாதிபதியின் கட்சியின் அங்கத்தவர்களை இழுத்துக்கொண்டு வெளியேற்றுகின்றனர். இறுதியில் ஐனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேணை மூன்றில் இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்படுகின்றது.
சபையில் மிஞ்சியிருந்த இரு ஐனாதிபதியின் ஆதரவாளர்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக வாக்குப் போடுகின்றனர். அதனைத் தொடர்ந்து தென்கொரிய பிரதமர் காபாந்து ஐனாதிபதியாகப் பதவியேற்று அமைச்சரவைக் கூட்டுகின்றார்.
சந்திரிகா: அட இந்த ரணில் இந்த மாதிரி என்னைப் பதவியிலிருந்து து}க்கியெறிந்திருக்கலாம். முட்டாள்.. சோம்பேறி..
செயலாளர்: மேடம் பிரதமர் ரணில் வாறார்..
(உடனே சந்திரிகா ரிவியை நிற்பாட்டுகிறார்)
ரணில்: என்ன ரிவியை நிற்பாட்டிவிட்டிர்.
சந்திரிகா: இல்லை.. கதைக்கேக்கை ஏன் இடைஞ்சல் என்றுதான்..
ரணில்: எனக்குத் தெரியும் அதிலை தென்கொரிய செய்தியைப் பார்த்திருப்பீர் அப்செட்டாகிப் போயிருப்பீர்..
சந்திரிகா: அதெல்லாம் ஒன்றுமில்லை.. அந்த ஐனாதிபதி என்னை யோசணை கேட்டிருக்கவேண்டும்.. பிழைவிட்டுட்டார்.
ரணில்: ஐனாதிபதி மீதான நம்பிக்யையில்லாத் தீர்மானம் கொண்டுவர முன் பாராளுமன்றத்தைக் கலைக்கச் சொல்லி ஆலோசணை சொல்லியிருப்பீர்.
சந்திரிகா: சரியாச் சொன்னீர். சூடுபட்டது மறக்கேல்லைபோல..
ரணில்: போன தடவை நான் விட்ட தவறை இம்முறை விடப் போறேல்லை.
சந்திரிகா: என்ன அது?
ரணில்: இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடனேயே உங்கள் மீதான குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றிப் போடுவன்.
சந்திரிகா: அப்படியென்றால் நான் மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைத்துப் போடுவேன்.
ரணில்: அதுதான் முடியாதே! ஒரு வருடத்திற்குப் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதே!
சந்திரிகா: இவ்விரண்டு மாதத்திற்குத்தான் என்னால் ஒத்திவைக்க முடியுமே. ஒரு வருடத்திற்கு அவ்வாறு ஒத்திவைத்துவிட்டு மீளவும் பாராளுமன்றத்தைக் கலைப்பதா பெரிய காரியம். அதுசரி ஏதோ அடுத்த பாராளுமன்றத்தை நீங்கள்தான் அமைப்பதுபோல் பேசுகிறீர்கள்..
ரணில்: ஏன் ஐனாதிபதி ஒழிக என்று மக்கள் கோசம் போடுவது கேட்கவி;ல்லையா?
சந்திரிகா: அதனாலைதான் சொல்லுறன் எனக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று?
ரணில்: எப்படி?
சந்திரிகா: ஐனாதிபதி முறையை பத்து மாதத்தில் ஒழிப்பேன் என்று சொல்லியிருக்கிறனல்லோ?
ரணில்: போன வருடமும் அப்படிச் சொல்லித்தானே தேர்தல் கேட்டனீங்கள்.
சந்திரிகா: அதாலைதான் போன தடவையும் எனக்கு வாக்குகள் கணிசமாய் கிடைத்தது. ஒரு இடத்தாலை தானே நீர் அதிகம் வென்றீர்.
ரணில்: அதுக்கென்ன?
சந்திரிகா: இப்ப புரியுதோ ஐனாதிபதியை வெறுக்கிற சனம், ஐனாதிபதியை ஒழிய வேண்டும் என்று சொல்லுகிற சனம் என்ன செய்யும்.
ரணில்: எனக்கு வாக்குப் போடும்.
சந்திரிகா: அதுதான் இல்லை ஐனாதிபதியை ஒழிக்கிறம் என்று சொல்லுகிறவைக்குத்தான் போடும்.
ரணில்: அதாலை..
சந்திரிகா: பத்து மாதத்திலை ஐனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று சொல்லும் எனக்கும்தான் வாக்குப் போடும்..
ரணில்: விளங்கேல்லை..
சந்திரிகா: ஐனாதிபதியை ஒழிக்க ஐனாதிபதியின் கட்சிக்கு வாக்குப் போடப்போயினம்.
ரணில்: அதெப்படி ஐனாதிபதியை ஒழிக்க, ஐனாதிபதிக்கு வாக்குப் போடுறது. நடக்கிற காரியமா?
சந்திரிகா: ஏன் நடக்காது.. முன்னயை தேர்தலில் சமாதானத்திற்கான யுத்தம் என்று சொன்னபோது வாக்குப் போட்டவைதானே! அதென்ன சமாதானம் பிறகென்ன யுத்தம் என்று யாராவது கேள்வி கேட்டவையே?
ரணில்: இந்தமுறை அதெல்லாம் சரிவராது. சமாதானத்திற்கு மட்டும் தான் வாக்குக் கிடைக்கும்.
சந்திரிகா: போன தடவை பாராளுமன்றத்தில் உமக்கு என்னை விட ஒரு இடம்தான் அதிகம் கிடைத்தது என்பதை மறந்து போடாதையும். அப்பவும் நீர் சமாதானம் என்று சொல்லித்தான் வாக்குக் கேட்டனீர்.
ரணில்: ஆனால் இந்தமுறை அப்படியில்லை.
சந்திரிகா: அதுதானில்லை.. சிங்களச் சனத்திலை இரண்டு விதமான சனமும் இருக்கு. சமாதானத்தை விரும்பிற சனமும் இருக்கு. தமிழரையும் புலிகளையும் வெறுக்கிற சனமும் இருக்கு.
ரணில்: இரண்டு பேரையும் ஒரே நேரத்திலை திருப்தி செய்ய முடியாதே?
சந்திரிகா: ஏன் முடியாது. நான் முன்னைய தேர்தலில் என்ன செய்தனான்? முதல் தேர்தலிலை சமாதானத்திற்கான யுத்தம் என்று, நானே சமாதானத்தையும் யுத்தத்தையும் ஒரே நேரத்திலை ஆதரித்துப் பேசினன். அடுத்த தேர்தலிலை. எனது கட்சிக்குள் நான் சமாதானத்தை ஆதரித்துப் பேச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமசிங்கவை தமிழருக்கு எதிராய் - புலிகளுக்கு எதிராய் பேசவைத்தன்.
ரணில்: உண்மைதான் - அந்த மனிசனும் வஞ்சகமில்லாமல், தமிழரை வேர், மரம், செடி, கொடி என்றெல்லாம் கேவலமாய் பேசினார்.
சந்திரிகா: அதாலை இரு தரப்பு வாக்குகளையும் நான் பெற்றுக்கொண்டன்.
ரணில்: இந்தத் தடவை உங்கடை கட்சி ஒட்டுமொத்தமாக சமாதானத்தைப் பற்றித் தானே பேசுகினம்.
சந்திரிகா: அங்கைதான் நீர் தவறுவிட்டிட்டிர். நான் இந்த முறை சமாதானத்தை வலியுறுத்திப் பேசினாலும், நான் கூட்டணி அமைத்த Nஐ.வி.பி. புலிகளை எதிர்த்தல்லே பேசுகினம்.
ரணில்: ஓ!..
சந்திரிகா: புரியுதே முதல் தேர்தலிலை, நானே சமாதானத்தையும் யுத்தத்தையும் பேசினன். இரண்டாவது தேர்தலிலை, எனது கட்சியில் நான் சமாதானத்தைப் பேச, பிரதமர் யுத்தத்தைப் பேசினார். இம்முறை Nஐ.வி.பி. இப்ப புலிகளையும் தமிழரையும் எதிர்த்து பேசும். நான் சமாதானத்தையும் பேச்சுவார்த்தையையும் அமைதியையும் பேசுவன். இரு தரப்பு சிங்களச் சனமும் எனக்கு வாக்குப் போடும்.
ரணில்: அதுதான் இரண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டனீரோ?
சந்திரிகா: (ஹா ஹா சிரிப்பு) இப்பத்தான் உமக்கு அரசியல் புரியுது. எப்படி எனது கெட்டித்தனம். புலிகளுடன் நிபந்தனையில்லாமல் பேசுவன் என்று - ஒரு தேர்தல் விஞ்ஞாபனம், நிபந்தனையோடை பேச்சு இல்லாவிட்டால் சண்டை என்ற ரீதியில் இன்னொரு விஞ்ஞாபனம்..
ரணில்: அதுசரி! அப்ப தேர்தலிலை வென்றால் என்ன - சண்டை பிடிப்பீரோ? சமாதானமாய்ப் போவீரோ?
சந்திரிகா: நானென்ன, நீரென்ன, யார் இனி ஆட்சிக்கு வந்தாலும், இனிமேல் புலிகளோடை சண்டை பிடிக்கேலாது. அதுதான் இன்றைய இலங்கையின் யதர்த்த நிலை.
ரணில்: அப்படியென்றால் உடனை சமாதான முயற்சிகளை ஆரம்பிக்கவல்லோ வேணும்..
சந்திரிகா: அதுக்கென்ன கஸ்டம்.
ரணில்: Nஐ.வி.பி. அதற்குச் சம்மதிக்குமோ?
சந்திரிகா: Nஐ.பி.சி சம்மதிக்கா விட்டால், அவை கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டியதுதான்.
ரணில்: Nஐ.வி.பி வெளியேறினால் பாராளுமன்றில் யார் உமக்கு ஆதரவு தரப்போகிறார்கள்.
சந்திரிகா: ஏன் தமிழக் கட்சிகள் இல்லையே?
ரணில்: யாரைச் சொல்கிறீர் டக்ளசையோ?
சந்திரிகா: சீ தமிழ்க் கூட்டமைப்பை.
ரணில்: அவை ஏன் உமக்கு ஆதரவு தரப்போகினம்?
சந்திரிகா: போன வருசம், ரவ10ப் ஹக்கீம் உம்மோடை பிரச்சினைப்பட்டு - தான் அரசாங்கத்திற்கு தாற ஆதரவை விலக்கப் போவதாகச் சொன்னபோது, தமிழ்க் கூட்டமைப்பு என்ன சொன்னது?
ரணில்: அவருக்குப் பதிலாய் தாங்கள் எனக்கு ஆதரவு தாறமெண்டவை.
சந்திரிகா: ஏன்?
ரணில்: சமாதான நடவடிக்கைகள் இடையில் குழம்பக் கூடாது என்றபடியால், அரசாங்கம் விழாமல் இருக்கத் தாங்கள் ஹக்கீமிற்குப் பதிலாக ஆதரவு தாறமெண்டவை.
சந்திரிகா: ஆ.. இப்ப புரியுதே! சமாதான நடவடிக்கையை நான் ஆரம்பித்து, அதனாலை Nஐ.வி.பி என்னை விட்டுப் போனால், அந்த இடத்தை உடனை தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நிரப்பும்? புரியுதே?
ரணில்: சரி,. நீர் போடுற நிபந்தனைகளைப் பார்த்துப் புலிகள் பேச்சுக்கு வர மறுத்தால்..
சந்திரிகா: ஏன்? என்ன நிபந்தனை நான் போட்டனான்?
ரணில்: புலிகளோடை மட்டுமல்ல எல்லாத் தரப்போடையும் பேசுவம் என்டெல்லே கதிர்காமர் சொல்லியிருக்கிறார்.
சந்திரிகா: நீர் தவறாய் புரிந்துகொண்டிர். நாங்கள் அப்படிச் சொல்லேல்லை. புலிகளோடை பேசுவம். மற்றத் தரப்போடு கலந்தாலோசிப்போம் என்றுதான் சொன்னனாங்கள்..
ரணில்: எவ்வளவு காலத்திற்கு ஆலோசணை நடத்திக்கொண்டிருப்பீர்கள்..
சந்திரிகா: நீர் எப்படி இரு வருடமாய் ஆலோசணை மட்டும் புலிகளோடை நடத்திக்கொண்டிருந்தீர். அப்படித்தான் நானும் அடுத்த தேர்தல் வரை காலம் கடத்துவன்.
ரணில்: நீர் ஆட்சியில் இருந்தால் அடுத்த தேர்தல் வர ஐந்து வருடம் ஆகும். அதுவரை காலம் கடத்தேலுமே? நானே ஒரு வருடத்திற்கு மேல் காலம் கடத்தேலாமல் கஸ்டப்பட்டன். நல்லவேளை நீர் பாராளுமன்றத்தைக் கலைத்தபடியால் தப்பினன்.
சந்திரிகா: என்ன?
ரணில்: புலிகளோடை இனிமேல் காலங்கடத்தேலாது. அவர்கள் நல்லவர்கள். ஆனால் முட்டாள்களல்ல. அவர்கள் இடைக்கால வரைபை தந்து என்னை பொறியிலை மாட்டிப் போட்டாங்கள். அதுவும் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து அதைத் தயாரித்தார்கள். அதனாலை, அதை அவர்கள் தயாரிக்கவில்லை - சர்வதேச நாடுகள்தான் தயாரித்தது என்ற ஒரு மாயையையும் அவர்கள் உருவாக்கிக்போட்டார்கள். அதனாலை அதை நான் ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் பட்ட கஸ்டம் எனக்கெல்லோ தெரியும். நல்லவேளை நீர் பாராளுமன்றத்தைக் கலைத்தபடியால் நான் கொஞ்சம் மூச்சுவிடக் கூடியதாய் இருக்கு.
சந்திரிகா: என்ன சொல்லுறீர்.
ரணில்: நான் இப்ப இஞ்சை வந்ததே உம்மை தேர்தலிலை வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தத்தான். நிச்சயமாய் நீர்தான் வெல்வீர். நான் வாரன்..
சந்திரிகா: எங்கை போறீர்?
ரணில்: கதிர்காமத்தானை வேண்டப் போறன். நான் தோற்கவேணுமென்று. நான் வாரன்.
சந்திரிகா: நானும் கதிர்காமத்தானை - சீ, கதிர்காமரைத் தான் கேட்கவேணும். (தொலைபேசியில்) ஹலோ கதிர்காமர்..
கதிர்காமர்: என்ன மேடம்?
சந்திரிகா: இந்தமுறை நாங்கள் தேர்தலிலை வெல்லுவமே?
கதிர்காமர்: பயப்படாதையுங்கோ Nஐ.வி.பி இருக்கு, நாம்தான் வெல்லுவம்.
சந்திரிகா: ஐயோ! வேண்டாம் நாங்கள் தோற்கவேணும்.
கதிர்காமர்: பயப்படாதையுங்கோ அனுரா இருக்கிறார். நாங்கள்தான் தோற்பம்.
நன்றி: ஈழமுரசு / தமிழ் நாதம்
ஒரு கற்பனைச் சந்திப்பு
-வாசகன் ரட்ணதுரை-
ஐனாதிபதி தென்கொரியா பற்றிய, பிபிசி செய்தியை ரிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் தென்கொரிய ஐனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுகின்றது. அதனை ஐனாதிபதியின் ஆதரவாளர்களான எதிர்க்கட்சியினர் எதிர்த்துக் குரல்கொடுகின்றனர்.
அப்போது அரசாங்கக் கட்சியின் சார்பான சபாநாயகர், ஐனாதிபதியின் கட்சியினரை வெளியேற்றுமாறு பணிக்கின்றார். ஒவ்வொருவராக சபையின் காவலர்கள் வந்து ஐனாதிபதியின் கட்சியின் அங்கத்தவர்களை இழுத்துக்கொண்டு வெளியேற்றுகின்றனர். இறுதியில் ஐனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேணை மூன்றில் இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்படுகின்றது.
சபையில் மிஞ்சியிருந்த இரு ஐனாதிபதியின் ஆதரவாளர்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக வாக்குப் போடுகின்றனர். அதனைத் தொடர்ந்து தென்கொரிய பிரதமர் காபாந்து ஐனாதிபதியாகப் பதவியேற்று அமைச்சரவைக் கூட்டுகின்றார்.
சந்திரிகா: அட இந்த ரணில் இந்த மாதிரி என்னைப் பதவியிலிருந்து து}க்கியெறிந்திருக்கலாம். முட்டாள்.. சோம்பேறி..
செயலாளர்: மேடம் பிரதமர் ரணில் வாறார்..
(உடனே சந்திரிகா ரிவியை நிற்பாட்டுகிறார்)
ரணில்: என்ன ரிவியை நிற்பாட்டிவிட்டிர்.
சந்திரிகா: இல்லை.. கதைக்கேக்கை ஏன் இடைஞ்சல் என்றுதான்..
ரணில்: எனக்குத் தெரியும் அதிலை தென்கொரிய செய்தியைப் பார்த்திருப்பீர் அப்செட்டாகிப் போயிருப்பீர்..
சந்திரிகா: அதெல்லாம் ஒன்றுமில்லை.. அந்த ஐனாதிபதி என்னை யோசணை கேட்டிருக்கவேண்டும்.. பிழைவிட்டுட்டார்.
ரணில்: ஐனாதிபதி மீதான நம்பிக்யையில்லாத் தீர்மானம் கொண்டுவர முன் பாராளுமன்றத்தைக் கலைக்கச் சொல்லி ஆலோசணை சொல்லியிருப்பீர்.
சந்திரிகா: சரியாச் சொன்னீர். சூடுபட்டது மறக்கேல்லைபோல..
ரணில்: போன தடவை நான் விட்ட தவறை இம்முறை விடப் போறேல்லை.
சந்திரிகா: என்ன அது?
ரணில்: இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடனேயே உங்கள் மீதான குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றிப் போடுவன்.
சந்திரிகா: அப்படியென்றால் நான் மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைத்துப் போடுவேன்.
ரணில்: அதுதான் முடியாதே! ஒரு வருடத்திற்குப் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதே!
சந்திரிகா: இவ்விரண்டு மாதத்திற்குத்தான் என்னால் ஒத்திவைக்க முடியுமே. ஒரு வருடத்திற்கு அவ்வாறு ஒத்திவைத்துவிட்டு மீளவும் பாராளுமன்றத்தைக் கலைப்பதா பெரிய காரியம். அதுசரி ஏதோ அடுத்த பாராளுமன்றத்தை நீங்கள்தான் அமைப்பதுபோல் பேசுகிறீர்கள்..
ரணில்: ஏன் ஐனாதிபதி ஒழிக என்று மக்கள் கோசம் போடுவது கேட்கவி;ல்லையா?
சந்திரிகா: அதனாலைதான் சொல்லுறன் எனக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று?
ரணில்: எப்படி?
சந்திரிகா: ஐனாதிபதி முறையை பத்து மாதத்தில் ஒழிப்பேன் என்று சொல்லியிருக்கிறனல்லோ?
ரணில்: போன வருடமும் அப்படிச் சொல்லித்தானே தேர்தல் கேட்டனீங்கள்.
சந்திரிகா: அதாலைதான் போன தடவையும் எனக்கு வாக்குகள் கணிசமாய் கிடைத்தது. ஒரு இடத்தாலை தானே நீர் அதிகம் வென்றீர்.
ரணில்: அதுக்கென்ன?
சந்திரிகா: இப்ப புரியுதோ ஐனாதிபதியை வெறுக்கிற சனம், ஐனாதிபதியை ஒழிய வேண்டும் என்று சொல்லுகிற சனம் என்ன செய்யும்.
ரணில்: எனக்கு வாக்குப் போடும்.
சந்திரிகா: அதுதான் இல்லை ஐனாதிபதியை ஒழிக்கிறம் என்று சொல்லுகிறவைக்குத்தான் போடும்.
ரணில்: அதாலை..
சந்திரிகா: பத்து மாதத்திலை ஐனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று சொல்லும் எனக்கும்தான் வாக்குப் போடும்..
ரணில்: விளங்கேல்லை..
சந்திரிகா: ஐனாதிபதியை ஒழிக்க ஐனாதிபதியின் கட்சிக்கு வாக்குப் போடப்போயினம்.
ரணில்: அதெப்படி ஐனாதிபதியை ஒழிக்க, ஐனாதிபதிக்கு வாக்குப் போடுறது. நடக்கிற காரியமா?
சந்திரிகா: ஏன் நடக்காது.. முன்னயை தேர்தலில் சமாதானத்திற்கான யுத்தம் என்று சொன்னபோது வாக்குப் போட்டவைதானே! அதென்ன சமாதானம் பிறகென்ன யுத்தம் என்று யாராவது கேள்வி கேட்டவையே?
ரணில்: இந்தமுறை அதெல்லாம் சரிவராது. சமாதானத்திற்கு மட்டும் தான் வாக்குக் கிடைக்கும்.
சந்திரிகா: போன தடவை பாராளுமன்றத்தில் உமக்கு என்னை விட ஒரு இடம்தான் அதிகம் கிடைத்தது என்பதை மறந்து போடாதையும். அப்பவும் நீர் சமாதானம் என்று சொல்லித்தான் வாக்குக் கேட்டனீர்.
ரணில்: ஆனால் இந்தமுறை அப்படியில்லை.
சந்திரிகா: அதுதானில்லை.. சிங்களச் சனத்திலை இரண்டு விதமான சனமும் இருக்கு. சமாதானத்தை விரும்பிற சனமும் இருக்கு. தமிழரையும் புலிகளையும் வெறுக்கிற சனமும் இருக்கு.
ரணில்: இரண்டு பேரையும் ஒரே நேரத்திலை திருப்தி செய்ய முடியாதே?
சந்திரிகா: ஏன் முடியாது. நான் முன்னைய தேர்தலில் என்ன செய்தனான்? முதல் தேர்தலிலை சமாதானத்திற்கான யுத்தம் என்று, நானே சமாதானத்தையும் யுத்தத்தையும் ஒரே நேரத்திலை ஆதரித்துப் பேசினன். அடுத்த தேர்தலிலை. எனது கட்சிக்குள் நான் சமாதானத்தை ஆதரித்துப் பேச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமசிங்கவை தமிழருக்கு எதிராய் - புலிகளுக்கு எதிராய் பேசவைத்தன்.
ரணில்: உண்மைதான் - அந்த மனிசனும் வஞ்சகமில்லாமல், தமிழரை வேர், மரம், செடி, கொடி என்றெல்லாம் கேவலமாய் பேசினார்.
சந்திரிகா: அதாலை இரு தரப்பு வாக்குகளையும் நான் பெற்றுக்கொண்டன்.
ரணில்: இந்தத் தடவை உங்கடை கட்சி ஒட்டுமொத்தமாக சமாதானத்தைப் பற்றித் தானே பேசுகினம்.
சந்திரிகா: அங்கைதான் நீர் தவறுவிட்டிட்டிர். நான் இந்த முறை சமாதானத்தை வலியுறுத்திப் பேசினாலும், நான் கூட்டணி அமைத்த Nஐ.வி.பி. புலிகளை எதிர்த்தல்லே பேசுகினம்.
ரணில்: ஓ!..
சந்திரிகா: புரியுதே முதல் தேர்தலிலை, நானே சமாதானத்தையும் யுத்தத்தையும் பேசினன். இரண்டாவது தேர்தலிலை, எனது கட்சியில் நான் சமாதானத்தைப் பேச, பிரதமர் யுத்தத்தைப் பேசினார். இம்முறை Nஐ.வி.பி. இப்ப புலிகளையும் தமிழரையும் எதிர்த்து பேசும். நான் சமாதானத்தையும் பேச்சுவார்த்தையையும் அமைதியையும் பேசுவன். இரு தரப்பு சிங்களச் சனமும் எனக்கு வாக்குப் போடும்.
ரணில்: அதுதான் இரண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டனீரோ?
சந்திரிகா: (ஹா ஹா சிரிப்பு) இப்பத்தான் உமக்கு அரசியல் புரியுது. எப்படி எனது கெட்டித்தனம். புலிகளுடன் நிபந்தனையில்லாமல் பேசுவன் என்று - ஒரு தேர்தல் விஞ்ஞாபனம், நிபந்தனையோடை பேச்சு இல்லாவிட்டால் சண்டை என்ற ரீதியில் இன்னொரு விஞ்ஞாபனம்..
ரணில்: அதுசரி! அப்ப தேர்தலிலை வென்றால் என்ன - சண்டை பிடிப்பீரோ? சமாதானமாய்ப் போவீரோ?
சந்திரிகா: நானென்ன, நீரென்ன, யார் இனி ஆட்சிக்கு வந்தாலும், இனிமேல் புலிகளோடை சண்டை பிடிக்கேலாது. அதுதான் இன்றைய இலங்கையின் யதர்த்த நிலை.
ரணில்: அப்படியென்றால் உடனை சமாதான முயற்சிகளை ஆரம்பிக்கவல்லோ வேணும்..
சந்திரிகா: அதுக்கென்ன கஸ்டம்.
ரணில்: Nஐ.வி.பி. அதற்குச் சம்மதிக்குமோ?
சந்திரிகா: Nஐ.பி.சி சம்மதிக்கா விட்டால், அவை கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டியதுதான்.
ரணில்: Nஐ.வி.பி வெளியேறினால் பாராளுமன்றில் யார் உமக்கு ஆதரவு தரப்போகிறார்கள்.
சந்திரிகா: ஏன் தமிழக் கட்சிகள் இல்லையே?
ரணில்: யாரைச் சொல்கிறீர் டக்ளசையோ?
சந்திரிகா: சீ தமிழ்க் கூட்டமைப்பை.
ரணில்: அவை ஏன் உமக்கு ஆதரவு தரப்போகினம்?
சந்திரிகா: போன வருசம், ரவ10ப் ஹக்கீம் உம்மோடை பிரச்சினைப்பட்டு - தான் அரசாங்கத்திற்கு தாற ஆதரவை விலக்கப் போவதாகச் சொன்னபோது, தமிழ்க் கூட்டமைப்பு என்ன சொன்னது?
ரணில்: அவருக்குப் பதிலாய் தாங்கள் எனக்கு ஆதரவு தாறமெண்டவை.
சந்திரிகா: ஏன்?
ரணில்: சமாதான நடவடிக்கைகள் இடையில் குழம்பக் கூடாது என்றபடியால், அரசாங்கம் விழாமல் இருக்கத் தாங்கள் ஹக்கீமிற்குப் பதிலாக ஆதரவு தாறமெண்டவை.
சந்திரிகா: ஆ.. இப்ப புரியுதே! சமாதான நடவடிக்கையை நான் ஆரம்பித்து, அதனாலை Nஐ.வி.பி என்னை விட்டுப் போனால், அந்த இடத்தை உடனை தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நிரப்பும்? புரியுதே?
ரணில்: சரி,. நீர் போடுற நிபந்தனைகளைப் பார்த்துப் புலிகள் பேச்சுக்கு வர மறுத்தால்..
சந்திரிகா: ஏன்? என்ன நிபந்தனை நான் போட்டனான்?
ரணில்: புலிகளோடை மட்டுமல்ல எல்லாத் தரப்போடையும் பேசுவம் என்டெல்லே கதிர்காமர் சொல்லியிருக்கிறார்.
சந்திரிகா: நீர் தவறாய் புரிந்துகொண்டிர். நாங்கள் அப்படிச் சொல்லேல்லை. புலிகளோடை பேசுவம். மற்றத் தரப்போடு கலந்தாலோசிப்போம் என்றுதான் சொன்னனாங்கள்..
ரணில்: எவ்வளவு காலத்திற்கு ஆலோசணை நடத்திக்கொண்டிருப்பீர்கள்..
சந்திரிகா: நீர் எப்படி இரு வருடமாய் ஆலோசணை மட்டும் புலிகளோடை நடத்திக்கொண்டிருந்தீர். அப்படித்தான் நானும் அடுத்த தேர்தல் வரை காலம் கடத்துவன்.
ரணில்: நீர் ஆட்சியில் இருந்தால் அடுத்த தேர்தல் வர ஐந்து வருடம் ஆகும். அதுவரை காலம் கடத்தேலுமே? நானே ஒரு வருடத்திற்கு மேல் காலம் கடத்தேலாமல் கஸ்டப்பட்டன். நல்லவேளை நீர் பாராளுமன்றத்தைக் கலைத்தபடியால் தப்பினன்.
சந்திரிகா: என்ன?
ரணில்: புலிகளோடை இனிமேல் காலங்கடத்தேலாது. அவர்கள் நல்லவர்கள். ஆனால் முட்டாள்களல்ல. அவர்கள் இடைக்கால வரைபை தந்து என்னை பொறியிலை மாட்டிப் போட்டாங்கள். அதுவும் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து அதைத் தயாரித்தார்கள். அதனாலை, அதை அவர்கள் தயாரிக்கவில்லை - சர்வதேச நாடுகள்தான் தயாரித்தது என்ற ஒரு மாயையையும் அவர்கள் உருவாக்கிக்போட்டார்கள். அதனாலை அதை நான் ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் பட்ட கஸ்டம் எனக்கெல்லோ தெரியும். நல்லவேளை நீர் பாராளுமன்றத்தைக் கலைத்தபடியால் நான் கொஞ்சம் மூச்சுவிடக் கூடியதாய் இருக்கு.
சந்திரிகா: என்ன சொல்லுறீர்.
ரணில்: நான் இப்ப இஞ்சை வந்ததே உம்மை தேர்தலிலை வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தத்தான். நிச்சயமாய் நீர்தான் வெல்வீர். நான் வாரன்..
சந்திரிகா: எங்கை போறீர்?
ரணில்: கதிர்காமத்தானை வேண்டப் போறன். நான் தோற்கவேணுமென்று. நான் வாரன்.
சந்திரிகா: நானும் கதிர்காமத்தானை - சீ, கதிர்காமரைத் தான் கேட்கவேணும். (தொலைபேசியில்) ஹலோ கதிர்காமர்..
கதிர்காமர்: என்ன மேடம்?
சந்திரிகா: இந்தமுறை நாங்கள் தேர்தலிலை வெல்லுவமே?
கதிர்காமர்: பயப்படாதையுங்கோ Nஐ.வி.பி இருக்கு, நாம்தான் வெல்லுவம்.
சந்திரிகா: ஐயோ! வேண்டாம் நாங்கள் தோற்கவேணும்.
கதிர்காமர்: பயப்படாதையுங்கோ அனுரா இருக்கிறார். நாங்கள்தான் தோற்பம்.
நன்றி: ஈழமுரசு / தமிழ் நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

