03-31-2004, 12:43 PM
மக்கள் சேவகனை மட்டு மண் இழந்து தவிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரும், வர்த்தக சங்கத் தலைவருமான ராஜன் சத்தியமூர்த்தி நேற்றுக்காலை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் மீது தணியாத தாகம் கொண்ட சத்தியமூர்த்தி பிரதேச அபிவிருத்தியில் அதீத அக்கறை காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது வெற்றி நிர்ணயிக்கப்பட்டதற்கான சான்றாக மக்கள் அமோக ஆதரவை உற்சாகத்தை ஊட்டி வந்தது வியப்பில்லை.
தற்போது மட்டக்களப்பு மாவட்டம் மாபெரும் சமூக சேவகனை இழந்து கண்ணீர் வடிக்கிறது. மக்கள் கதறி அழுகின்றனர்.
மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட அன்னார் தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்துக்காக அயராது படுபட்டார். மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் பிணக்குகள் எது எங்கு நடந்தாலும் அங்கு ராஜன் சத்தியமூர்த்தி பிரசன்னமாகியிருப்பார். அவர் வருவார் எப் பிரச்சினையானாலும் தீர்த்து வைக்க துணை நிற்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டிருந்தது நேற்றுடன் அந்த நம்பிக்கை அகன்று விட்டது.
மட்டக்களப்பு கல்வி மான்கள், புத்தி ஜீவிகள், அரசியல் சேவகர்கள் என அனைவரையும் துரோகி எனக் கூறி சுட்டுத் தள்ளுவதால் இன விடுதலையை அடையமுடியாது. இந்த துரோகத்தை புரிந்தவர்கள் உணர்ந்து கொள்வது மேல்.
ராஜன் சத்தியமூர்த்தி ஆத்மா சாந்திக்காகவும், அவரது உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர்.
நன்றி - தமிழ் அலை
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரும், வர்த்தக சங்கத் தலைவருமான ராஜன் சத்தியமூர்த்தி நேற்றுக்காலை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் மீது தணியாத தாகம் கொண்ட சத்தியமூர்த்தி பிரதேச அபிவிருத்தியில் அதீத அக்கறை காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது வெற்றி நிர்ணயிக்கப்பட்டதற்கான சான்றாக மக்கள் அமோக ஆதரவை உற்சாகத்தை ஊட்டி வந்தது வியப்பில்லை.
தற்போது மட்டக்களப்பு மாவட்டம் மாபெரும் சமூக சேவகனை இழந்து கண்ணீர் வடிக்கிறது. மக்கள் கதறி அழுகின்றனர்.
மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட அன்னார் தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்துக்காக அயராது படுபட்டார். மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் பிணக்குகள் எது எங்கு நடந்தாலும் அங்கு ராஜன் சத்தியமூர்த்தி பிரசன்னமாகியிருப்பார். அவர் வருவார் எப் பிரச்சினையானாலும் தீர்த்து வைக்க துணை நிற்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டிருந்தது நேற்றுடன் அந்த நம்பிக்கை அகன்று விட்டது.
மட்டக்களப்பு கல்வி மான்கள், புத்தி ஜீவிகள், அரசியல் சேவகர்கள் என அனைவரையும் துரோகி எனக் கூறி சுட்டுத் தள்ளுவதால் இன விடுதலையை அடையமுடியாது. இந்த துரோகத்தை புரிந்தவர்கள் உணர்ந்து கொள்வது மேல்.
ராஜன் சத்தியமூர்த்தி ஆத்மா சாந்திக்காகவும், அவரது உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர்.
நன்றி - தமிழ் அலை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

