Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மானிற்கு ஓர் அன்பு மடல் !
#2
ஒரு முட்டையிலிருந்து
ஒன்பது முட்டைகளும்
ஓராயிரம் குஞ்சுகளும்
பொரித்த பின்பே- தாய்க்
கோழிகளுக்கிடையே
சலசலப்பு....
எப்படி?

பருந்துகளிடமிருந்து
பாதுகாப்பதாக சொல்லி
குஞ்சுகளுக்கு
சாயம் பூசியது
பழைய வீட்டுக்கார
~துரைகளின்| தப்பு
இதில் கோழிகளுக்கு
என்ன பிரிவினை?

~குறுணிகளுக்காக| எடுபட்டு
புத்திபேதலித்து போனது
தனிப்பட்ட பலவீனம்
ஒத்துக் கொள்வோம்
அதனால் ~குழம்பும்|
குடியை ருசிக்க நினைக்கிறதே
ஒரு சதிகார குறவர் கூட்டம்
அனுமதிப்போமா இதை?

இது விதியல்ல: சதி
சதியே சதியே
என் செய்யப்போகிறாய்
எம் தமிழர் சாதியை?

எங்கள் குஞ்சுகளை
விடுதலைக்காய்
அடைகாத்த
அரும் பெருஞ்செல்வங்களை
அடகு வைக்க துணிந்ததன்
பின்னணிகள் என்ன?

முழு விடுதலைக்காய்
போராடிவிட்டு
வெண்ணை திரண்டபின்
தாழி உடைத்த கதையாக
குறைப்பிரசவம் காண்பது
என்றும் ரசிக்கத்தக்கதல்ல

தேவைப்பட்டால்
|கருணைக்| கொலையை கூட
அங்கீகரிக்கிறது
நவீன மருத்துவம்
அன்றில் புற்றுநோயை
பரவாது தடுப்பதே
இன்றைய அவசியம்

கூழ் முட்டைகளை
வெட்டிப்புதைப்பதோ
அல்லது
தூக்கி எறிவதோதான்
எமது வழமையும்!
காலம் விரைந்ததை
செய்யும்.


லண்டனிலிருந்து முத்து விஐயராகவன்

Thanks www.tamilnaatham.com
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 03-31-2004, 08:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)