Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் தாயகச் செய்திகள்
#34
தனிமனித சுதந்திரம் மிக ஒழுங்காக பேணப்படுவது புலிகள்பகுதியிலேயே நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா உதயனுக்கு செவ்வி

எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்தநேரத்திலும் எவரும் பயப்பீதியின்றி, சுதந்திரமாக, அச்சமின்றி நடமாடமுடியும்.இங்கு சட்டம், ஒழுங்கு வலுவாக உள்ளது. ஆனால், அரசின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் எவரும் சுதந்திரமாக, பயம் பீதியின்றி நடமாட முடியாது.தெற்கில் அரசியல் தலையீடு, பாதாள உலகக் கோஷ்டியின் செயற் பாடு, இரணுவம் மற்றும் பொலீஸில் இருந்து தப்பி ஓடியவர்களின் அடா வடித்தனம், பொலீஸ், இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளின் லஞ்சம், ஊழல் போன்றவற்றால் சட்டம், ஒழுங்கு என்பன சீர்குலைந்துள்ளன.
தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் பரா ~உதயன்| செய்தியாள ருக்கு வன்னியில் வைத்து வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். அதன் முழு விவரமும் வருமாறு:

கேள்வி:- நீதி, நிர்வாகத்துறையின் தோற்றம் பற்றி விளக்குவீர்களா?
பதில்:- தமிழீழத்தின் நீதி, நிர்வாகத்துறை தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் நெறிப்படுத்தலின்கீழ் உருவாக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி சட்டக் கற்கை யினைப் புூர்த்திசெய்த போராளிகள் அணியினருடன் இது முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
நீதி வழங்குவதில் பக்கச் சார்புகள், செல்வாக்குகள், தாமதங்கள் என்பவை ஏற்படாதவாறு செயற்படும் பொருட்டு தம்மைத் தேசவிடுதலைக்காக முழுமையாக அர்ப்பணித்த போராளிகளில் தலைவரால் திறமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட வர்கள் சட்டக்கல்லு}ரியில் கற்கை நெறியினைப் பயின்றனர். பின்னர் அவர்களில் இருந்து நீதியாளர்களும் சட்டவாளர்களும் தெரிவுசெய்யப் பட்டு தமிழீழ நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
எமது நீதித்துறையானது நீதி மன்றங்களின் செயற்பாடு, சட்டக்கல்லு}ரி, சட்டவாக்கச் செயற்பாடுகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- நீதி, நிர்வாகத்துக் குரிய சட்டங்கள் எவ்வாறு உருவாக் கப்படுகின்றன?
பதில்:- நீதித்துறையில் நிபுணத்துவம்பெற்ற சட்டமாக்கல் பிரிவினால் சட்டங்கள் வரையறுக்கப்படுகின் றன. அவ்வாறு வரையறுக்கப்படும் சட்டங்கள் சட்டப் பரிசீலனைக் குழு வால் பரிசீலிக்கப்படும்.
சட்டப் பரிசீலனைக்குழு, புலிகளின் மூத்த உறுப்பினர்களையும் நீதித்துறை நிபுணர்களையும் கொண்டிருக்கும்.
பின்னர் தமிழீழ தேசியத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றபின் சட்டமாக வெளியிடப்படுகின்றது.
சட்டங்கள் யாவும் து}ய நீதியினை நிலைநாட்டவும், மக்கள் வாழ்வினை சீராக அனுபவிக்கவும், அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான விடயங்களை அடிப் படையாகக் கொண்டும் இயற்றப்படுகின்றன.
இவ்வாறு இயற்றப்படும் சட்டங்கள் மக்களின் இறைமை, நீதித் துறைச் சுதந்திரம் என்பன ஐ.நா. சபையின் மனித உரிமை பிரகடனத்திற்கு அமைவாக மக்களின் உரி மைகளைப் பேணும் நோக்குடன் இயற்றப்படுகின்றன.
சர்வதேச சட்டங்கள் எப்படி உள்ளதோ அதே வடிவில் எமது பண்பாடு, கலாசாரம் போன்ற சூழலுக்கு ஏற்றவகையில் தமிழீழச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கேள்வி :- நீதித்துறையினால் இயற்றப்பட்ட சட்டங்கள் பற்றிக் கூற முடியுமா?
பதில் :- இதுவரை பிரதான சட்டங்களும், திருத்தச் சட்டங்களுமாக மொத்தமாக 19 சட்டக் கோவைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் குற்றவியல் சட்டம், சான்றியல் சட்டம், தமிழீழ சட்டக் கோவை, தேசவழமைச் சட்டம், உணவுச் சட்டம், சீட்டுச் சட்டம் போன்ற பிரதான சட்டங்களைக் குறிப்பிடமுடியும்.
பொதுவாக இயற்றப்பட்ட சட்டங்கள், நாகரிக விருத்தி, மனித உரிமைகள் பேணல், மக்களின் இயல்பான சமூக வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்பளித்தல், நீதித்துறை சுதந்திரம் ஆகிய பிரதான விதிகளை அடியொட்டியே மேற்படி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக நீதி நிர்வாகத் துறை, ஓர் அரசிற்குரிய பிரதான கட்டமைப்பாகச் செயற்படக் கூடியதாய் அதன் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டிருக்கின் றன. அதனால் இத்துறை செம்மையான பணியை ஆற்றி வருகின்றது.
நீதித்துறையின் இன்றைய செயற்பாடுகள், நாளைய அரச நிர்வாகத்திற்கான ஓர் அலகாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து செல்கிறது. இதன் பரிணாம வளர்ச்சியை நீதிமன்றங்களின் செயற்பாடுகள் மூலம் அறியமுடியும்.
கேள்வி:- சட்டக்கல்லு}ரியின் பாடவிதானம் பற்றிக் கூறமுடியுமா?
பதில்:- சட்டக் கல்லு}ரியின் உள்ளக கற்கைநெறியானது 22 முழுமையான சட்டப் பாடநெறிகளையும் ஏனைய நான்கு உபபாடநெறிகளை யும் கொண்டுள்ளது.
வெளிவாரிக் கற்கைநெறி 18 சட்டக் கற்கைநெறிகளையும், ஓர் உபகற்கைநெறியினையும் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகள் கற்கை நெறியினைச் சட்டக் கல்லு}ரிகள் கொண்டுள்ளன. கேள்வி: - தலைவர் பிரபாகரனின் பங்கு நீதித்துறையில் எவ்வாறு உள்ளது?
பதில் : -தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் நீதியாளர்கள் உறுதியுரை செய்துகொள்ள வேண்டும். அதன் பின் தலைவரால் அவர்கள் நீதியாளர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைத்தல், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல் மற்றும் சட்டத்தவறுகள் காணப்படுகின்றதான விடயங்களில் நியாயவிளக்கம் ஒன் றிற்கு பணிப்புரைகளை விடுக்கலாம்.
தமிழீழத்தின் அனைத்துச் சட்டங்களும் தலைவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே சட்டமாக்கப்படுகின் றன.
கேள்வி:- நீதி, நிர்வாக சேவையின் நீதிமன்றங்கள் பற்றிக் கூறுவீர்களா?
பதில்:- எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் 6 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் உள்;ளன. இரண்டு மேல் நீதிமன்றங்களும் உண்டு. ஒரு சிறப்பு மேல் முறையீட்டு நீதி மன்றமும் உண்டு.
இதுவரை காலமும் 24ஆயிரம் வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 19ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டன. இவற்றில் 750 வழக்குகள் மேன்முறையீடு செய்யப்பட்டன. அவற்றில் 500 தீர்க்கப்பட்டுவிட்டன.
சிறப்பு நீதிமன்றில் 50 வரையான வழக்குகள் இதுவரை காலமும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவையாவற்றிலும் திருப்தி இல்லாவிட்டால் இறுதியாகத் தலைவருக்கு மனுச் செய்ய முடியும். அதனைத் தலைவர் பரிசீலனை செய்வார்.
கேள்வி:- சட்டவாளர்கள் வழக்காளிகளிடம் வழக்குகளுக்காகப் பெறுகின்ற நிதி தொடர்பாகக் கூற முடியுமா?
பதில்:- மக்களின் பாரச் சுமைகளைக் குறைப்பதற்கு நீதிமன்றின் ஊடாகவே சட்டவாளர்களுக்கான கொடுப்பனவை வழங்கமுடியும். இங்கு லஞ்சம், ஊழல் எதுவும் இல்லை. சிறீலங்கா நீதிமன்றைப் போன்று சட்ட வாளர்கள் தீர்மானிக்கும் தொகை யினை ஏழை வழக்காளிகளால் கொடுக்கமுடியாது. அதனால், வழக்காளி ஒழுங்காக வழக்குகளைத் தொடரமுடியாது.
இவ்வாறான சூழலில் ஏழை வழக்காளிக்கு நீதி கிடைப்பதில்லை. சட்டவாளர்கள் வரையறுக்கப்பட்ட தொகைப் பணத்தையே பெற முடியும்.
கேள்வி:- தமிழீழ நீதிமன்றில் சிறீலங்கா அல்லது வெளிநாட்டு சட்டவாளர்களும் சட்டவாளராக வழக்காடமுடியுமா?
பதில்:- தமிழீழ நீதிமன்று தமிழீழ அரச சட்டவாளர்களையும், பிரத்தியேகச் சட்டவாளர்களையும் கொண்டு செயற்படுகின்றது. வேறு நாடுகளில் (தமிழீழத்திற்கு வெளியே) சட்டக் கல்வி பயின்ற சட்டவாளர்கள் தமிழீழ சட்டக் கல்லு}ரியில் பாPட்சை எழுதித் சித்தியடைந்து பின்னர், நீதியாளர் முன்னிலையில் உறுதியுரையினைச் செய்த பின் சட்டவாளராகப் பணியாற்றமுடியும்.
கேள்வி:- தமிழீழ நீதி, நிர்வாகத்துறையில் பெண்களுக்குச்சார்பாக நீதி வழங்கப்படுவதாகப் பரவலாக ஆண்களால் நீதி, நிர்வாகத்துறை மீது குற்றஞ்சுமத்தப்படுகின்றதே. இது தொடர்பான விமர்சனம் குறித்துயாது கூற விரும்புகின்றீர்கள்?
பதில்:- எமது தேச வழமையின் படி குடும்ப சூழலில் பெண்கள் ஆண்களால் அதிகம் கட்டுப்படுத்தப்படுகின்ற வழமை தமிழர் நாகரிகத்தில் மட்டும்தான் அதிகம் உண்டு. இதனை ஆண்கள் வர்க்கம் உணர வேண் டும். எங்கு எதற்கான தேவையிருக் கின்றதோ அங்கு அதற்கான சட்டம் உருவாக்கப்படும். பெண்களின் சகல சுதந்திரங்களும் ஆண்களால் கட்டுப் படுத்தப்படுவது நியாயமற்றது; அநீதி யானது.
தமிழ்ப் பெண்கள் மூட நம்பிக்கையின் அடிப்படையில் எமது மூதாதையரால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். எழுதப்படாத பல சட்டங்கள் பெண்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. பெண்களின் சுதந்திரம் வீட்டுச் சூழலில் அவர்களுக்கு மறுக் கப்பட்டிருக்கின்றது.அப்போது தனக்கு நீதி, நியாயம் கிடைக்கும் என்றுதான் அவள் நீதி மன்றம் வருகின்றாள். 90வீதமான பெண்கள் தொடர்பான வழக்குகள் ஆண்களினால் துன்புறுத்தப்பட்ட வழக்குகளாகவே இருக்கின்றன. ஆகவே, அவை பெண்களுக்குச் சாத கமாக இருப்பதில் எதுவிதமான விமர்சனமும் இருப்பதற்கு நியாயம் இல்லை.
பெண்கள் மீதான ஆண்களின் துன்புறுத்தல்கள் என்று ஓய்கின்றதோ அன்று ஆண்களும் பெண்களும் சமத்துவமுடையவர்கள் ஆகின்றனர். அப்போது நீதியும் சமமாகும்.
கேள்வி:- யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித் துள்ளன பற்றி யாது கூறவிரும்புகின்றீர்கள்?
பதில்:- யாழ்ப்பாணத்தில் இன்று கொலையும், கொள்ளையும், பாலி யல் வல்லுறவும் மலிந்துவிட்டன. இராணுவக் கட்டுப்பாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
யாழ்ப்பாணத்தில் லஞ்சம் வழங்கி எதனையும் செய்யமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இளைஞர்களிடம் சிறீலங்கா புலனாய்வுத்துறை, அவர் களின் இளவயதுப் பசியைத் தீர்ப்ப தற்கு உடந்தையாக இருந்து அதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற் படுத்திக் கொடுத்துள்ளதுடன், எமது போராட்டத்திற்கு எதிராக அவர்களைப் பயன்படுத்துகின்ற சூழல் உருவாகியுள்ளது.
கொள்ளைகள் அதிகரிப்பதற்கும் இளைஞர்கள் மத்தியில் மது, போதைப் பழக்கம் அதிகரிக்கவும் இராணுவ புலனாய்வுத்துறையினரின் செயற்பாடுகளும் காரணமாக அமைகின் றன.
கேள்வி:- சம காலத்தில் மரண தண்டனைக்கு எதிராக வாதங்கள் முன்வைக்கப்படும்போது தமிழீழ நீதி, நிர்வாகம் மரணதண்டனை வழங்குவது தொடர்பாகப் பரிசீலிக்க வில்லையா?
பதில்:- இதுவரை காலத்தில் 10 ஆயிரம் வரையிலான கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக் கின்றன. இவற்றில், பாலியல் வல்லுறவு, கொலை போன்றவற்றுக்கு 4பேருக்கு மட்டுந்தான் மரணதண்டனை நிறைவேற்றியுள்ளோம்.
மரணதண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள் கருணை மனுச் செய்யலாம்.அவற்றை ஆலோசனைக்குழு பரிசீலனை செய்யும்.
இது தொடாபாகத் தலைவர் அவர்கள் எமது தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை மிகவும் இறுக்கமான தண்டனைகளை வழங்கவும் குற்றவாளிகளின் வீதத்தைக் குறைப்பதற்கு ஏற்ற சகல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நீதித் துறைக்கு அனுமதி வழங்கியிருக்கின்றார். எமக்கு விடுதலை கிடைத்து, எமது வெளிப்பிரச் சினைகள் தீர்க்கப்பட்டு, எமது தேசம் சுமுகமான நிலைக்கு வரும்போது, மரணதண்டனைச் சட்டம் நிச்சயமாக நீக்கப்படும் எனத் தலைவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
கேள்வி:- போராளிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று பரவலாக விமர்சனங்கள் எழுகின்றன. இது தொடர் பாகத் தங்கள் கருத்து என்ன?
பதில்:- போராளிகளுடனான பிரச்சினைக்கும், தற்போது பொது மக்கள் நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும். அவை தேசநலன் போராட்டம் சாராத போராளியின் தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தால் போராளியையும் நீதிமன்றில் நிறுத்தமுடியும். அத்துடன், போராளிகள் தொடர்பான வழக்குகள் பெரும்பாலும் இராணுவ நீதிமன்றில் விசாரணை செய்யப்படும். அல்லது சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள், பிரச்சினைக்குரிய போராளிக்குரிய தண்டனையை வழங்குவார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று. போராளிக்கு வேறு பொது மகனுக்கு வேறு அல்ல.
பொது மக்களுக்கு வழங்கும் தண்டனையை விடப்போராளிகளுக்கு அதிக தண்டனை வழங்கப்படும். இவை வெளிப்படையாகத் தெரிவதில்லை - என்றார்.

நன்றி உதயன்;

மதி மனவழுக்குகளை ஒருபக்கம் வைத்துவிட்டு இக்கட்டுரையைப் படித்துப் பாருங்கள். குட்டை என்று தெரிந்தும் அசீங்கங்களுக்கு வக்காலத்து வாங்காமல் எல்லாவற்றையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதுவதில் ஏதாவது சரியாக இருந்தால் நானும் உங்கள் பக்கம் வந்து உங்களுக்கு சார்பாக நிற்பேன். ஆனால் எதற்கோ மாரடித்து அடம் பிடிக்கின்றீர்களே.

ஒன்றுபடு தமிழா

அன்புன்
சீலன்
அன்புடன
seelan
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 06-11-2003, 10:40 AM
[No subject] - by Guest - 06-11-2003, 09:15 PM
[No subject] - by sethu - 06-16-2003, 05:48 PM
[No subject] - by sethu - 06-16-2003, 08:36 PM
[No subject] - by Guest - 06-16-2003, 08:54 PM
[No subject] - by sethu - 06-16-2003, 09:55 PM
[No subject] - by Paranee - 06-17-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-17-2003, 01:19 PM
[No subject] - by sethu - 06-19-2003, 03:27 PM
[No subject] - by sethu - 06-19-2003, 07:05 PM
[No subject] - by YC-Kiruba - 06-19-2003, 09:50 PM
[No subject] - by sethu - 06-20-2003, 07:39 PM
[No subject] - by kuruvikal - 06-30-2003, 11:04 PM
[No subject] - by sethu - 07-01-2003, 11:32 AM
[No subject] - by P.S.Seelan - 07-01-2003, 12:55 PM
[No subject] - by GMathivathanan - 07-01-2003, 01:03 PM
[No subject] - by S.Malaravan - 07-01-2003, 08:44 PM
[No subject] - by GMathivathanan - 07-01-2003, 09:16 PM
[No subject] - by கபிலன் - 07-01-2003, 10:56 PM
[No subject] - by GMathivathanan - 07-01-2003, 11:17 PM
[No subject] - by Paranee - 07-02-2003, 05:05 AM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 10:54 AM
[No subject] - by P.S.Seelan - 07-02-2003, 12:51 PM
[No subject] - by Paranee - 07-02-2003, 01:17 PM
[No subject] - by mathe - 07-02-2003, 01:24 PM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 01:25 PM
[No subject] - by mathe - 07-02-2003, 01:32 PM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 01:47 PM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 02:02 PM
[No subject] - by S.Malaravan - 07-02-2003, 06:53 PM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 09:33 PM
[No subject] - by sethu - 07-03-2003, 11:52 AM
[No subject] - by GMathivathanan - 07-03-2003, 12:10 PM
[No subject] - by P.S.Seelan - 07-03-2003, 12:44 PM
[No subject] - by GMathivathanan - 07-03-2003, 02:23 PM
[No subject] - by sethu - 07-03-2003, 06:22 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 12:17 AM
[No subject] - by sethu - 07-04-2003, 08:45 AM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 08:51 AM
[No subject] - by sethu - 07-04-2003, 09:02 AM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 09:08 AM
[No subject] - by sethu - 07-04-2003, 10:18 AM
[No subject] - by sethu - 07-04-2003, 10:19 AM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 11:02 AM
[No subject] - by sethu - 07-04-2003, 11:59 AM
[No subject] - by P.S.Seelan - 07-04-2003, 12:38 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 03:16 PM
[No subject] - by sethu - 07-04-2003, 05:47 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 06:09 PM
[No subject] - by sethu - 07-04-2003, 06:43 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 07:18 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 07:57 PM
[No subject] - by S.Malaravan - 07-04-2003, 08:26 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 08:40 PM
[No subject] - by S.Malaravan - 07-04-2003, 09:00 PM
[No subject] - by sethu - 07-04-2003, 09:08 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 09:42 PM
[No subject] - by sethu - 07-05-2003, 08:19 AM
[No subject] - by GMathivathanan - 07-05-2003, 10:01 AM
[No subject] - by sethu - 07-05-2003, 11:49 AM
[No subject] - by sethu - 07-08-2003, 01:16 PM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 01:48 PM
[No subject] - by TMR - 07-09-2003, 06:02 AM
[No subject] - by TMR - 07-09-2003, 06:06 AM
[No subject] - by Paranee - 07-09-2003, 07:25 AM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 07:41 AM
[No subject] - by Paranee - 07-09-2003, 07:55 AM
[No subject] - by sethu - 07-09-2003, 07:17 PM
[No subject] - by kuruvikal - 07-11-2003, 11:04 AM
[No subject] - by GMathivathanan - 07-11-2003, 02:05 PM
[No subject] - by sethu - 07-11-2003, 08:10 PM
[No subject] - by GMathivathanan - 07-11-2003, 09:10 PM
[No subject] - by kuruvikal - 07-11-2003, 09:17 PM
[No subject] - by GMathivathanan - 07-11-2003, 09:29 PM
[No subject] - by sethu - 07-12-2003, 09:18 AM
[No subject] - by kuruvikal - 07-13-2003, 08:42 AM
[No subject] - by sethu - 07-13-2003, 09:27 AM
[No subject] - by kuruvikal - 07-14-2003, 09:09 AM
[No subject] - by Paranee - 07-14-2003, 09:33 AM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 09:51 AM
[No subject] - by Kanani - 07-14-2003, 09:56 AM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 10:19 AM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 10:32 AM
[No subject] - by Paranee - 07-14-2003, 01:01 PM
[No subject] - by P.S.Seelan - 07-14-2003, 04:35 PM
[No subject] - by S.Malaravan - 07-14-2003, 08:18 PM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 09:29 PM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 09:37 PM
[No subject] - by kuruvikal - 07-15-2003, 05:07 AM
[No subject] - by Paranee - 07-15-2003, 05:17 AM
[No subject] - by GMathivathanan - 07-15-2003, 08:32 AM
[No subject] - by sethu - 07-19-2003, 09:28 AM
[No subject] - by kuruvikal - 07-20-2003, 09:10 AM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 11:07 AM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 11:29 AM
[No subject] - by kuruvikal - 07-20-2003, 12:48 PM
[No subject] - by Manithaasan - 07-20-2003, 12:58 PM
[No subject] - by sOliyAn - 07-20-2003, 01:05 PM
[No subject] - by Paranee - 07-20-2003, 01:16 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 01:18 PM
[No subject] - by Paranee - 07-20-2003, 01:18 PM
[No subject] - by Manithaasan - 07-20-2003, 01:23 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 01:29 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 01:38 PM
[No subject] - by kuruvikal - 07-20-2003, 01:46 PM
[No subject] - by Paranee - 07-20-2003, 01:54 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 01:59 PM
[No subject] - by sethu - 07-20-2003, 08:41 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 09:26 PM
[No subject] - by Kanani - 07-20-2003, 10:08 PM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 12:15 PM
[No subject] - by P.S.Seelan - 07-21-2003, 12:26 PM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 12:33 PM
[No subject] - by P.S.Seelan - 07-21-2003, 12:42 PM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 12:54 PM
[No subject] - by sethu - 07-21-2003, 05:02 PM
[No subject] - by sethu - 07-21-2003, 05:03 PM
[No subject] - by P.S.Seelan - 07-22-2003, 12:27 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 01:02 PM
[No subject] - by kuruvikal - 07-22-2003, 01:31 PM
[No subject] - by Paranee - 07-22-2003, 01:34 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 01:44 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 01:49 PM
[No subject] - by kuruvikal - 07-22-2003, 01:55 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 02:10 PM
[No subject] - by sethu - 07-22-2003, 06:51 PM
[No subject] - by P.S.Seelan - 07-22-2003, 08:26 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 09:59 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 11:21 PM
[No subject] - by P.S.Seelan - 07-23-2003, 12:24 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 04:22 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 06:14 PM
[No subject] - by sOliyAn - 07-23-2003, 06:14 PM
[No subject] - by sOliyAn - 07-23-2003, 06:17 PM
[No subject] - by sethu - 07-23-2003, 06:46 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 07:20 PM
[No subject] - by sOliyAn - 07-23-2003, 07:41 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 07:47 PM
[No subject] - by sOliyAn - 07-23-2003, 07:55 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 08:08 PM
[No subject] - by P.S.Seelan - 07-23-2003, 08:11 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 08:16 PM
[No subject] - by P.S.Seelan - 07-24-2003, 12:32 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 01:50 PM
[No subject] - by sethu - 07-25-2003, 05:35 PM
[No subject] - by P.S.Seelan - 07-26-2003, 12:52 PM
[No subject] - by sethu - 07-26-2003, 01:23 PM
[No subject] - by kuruvikal - 08-22-2003, 05:57 PM
[No subject] - by sethu - 08-22-2003, 06:22 PM
[No subject] - by Paranee - 08-23-2003, 07:17 AM
[No subject] - by Guest - 08-23-2003, 07:41 AM
[No subject] - by kuruvikal - 08-26-2003, 09:55 AM
[No subject] - by Kanani - 08-26-2003, 10:41 AM
[No subject] - by kuruvikal - 08-29-2003, 12:23 PM
[No subject] - by kuruvikal - 08-29-2003, 12:24 PM
[No subject] - by Mathivathanan - 08-29-2003, 05:10 PM
[No subject] - by Kanani - 08-29-2003, 10:37 PM
[No subject] - by Mathivathanan - 08-29-2003, 10:48 PM
[No subject] - by Kanani - 08-29-2003, 11:00 PM
[No subject] - by Mathivathanan - 08-30-2003, 01:02 AM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 08:00 PM
[No subject] - by Mathivathanan - 09-19-2003, 08:25 PM
[No subject] - by Mullai - 09-19-2003, 09:47 PM
[No subject] - by தணிக்கை - 09-20-2003, 10:07 PM
[No subject] - by தணிக்கை - 09-22-2003, 05:20 PM
[No subject] - by தணிக்கை - 09-22-2003, 05:25 PM
[No subject] - by kuruvikal - 09-24-2003, 12:00 PM
[No subject] - by Kanani - 09-30-2003, 09:45 AM
[No subject] - by kuruvikal - 09-30-2003, 11:36 AM
[No subject] - by kuruvikal - 10-12-2003, 10:00 AM
[No subject] - by P.S.Seelan - 10-12-2003, 12:52 PM
[No subject] - by kuruvikal - 10-17-2003, 09:30 PM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 12:19 PM
[No subject] - by P.S.Seelan - 10-25-2003, 12:45 PM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)