03-30-2004, 03:58 PM
இலங்கை கிழக்கில் பிரபாகரனின் ஆதரவாளர்கள் ஊடுருவல் எனப் புகார்
கொழும்பு, மார்ச் 30: இலங்கை மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவுவதாக கருணா கோஷ்டி புகார் செய்துள்ளது.
பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா தலைமையில் தனிக்குழு கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
""எங்களது பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுருவியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எங்கள் போராளிகள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்'' என கருணாவின் ஆதரவாளர் வரதன் தெரிவித்தார்.
""ஊடுருவும் போராளிகள் எங்களது தலைவர் கருணாவை ஆதரிக்கும் முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்வர் எனத் தெரியவந்துள்ளது'' என்றார் வரதன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 15,000 போராளிகளில் 6 ஆயிரம் பேர் கருணா என்ற முரளீதரனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு -அம்பாறை பகுதியின் தளபதியாக இருந்தவர் கருணா.
புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகவும் அவரது நெருங்கிய சகா பொட்டு அம்மானைக் கண்டித்தும் குரல் எழுப்பியதை அடுத்து, இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் மேலிடம் எச்சரித்துள்ளது.
Thanx: Dinamani
கொழும்பு, மார்ச் 30: இலங்கை மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவுவதாக கருணா கோஷ்டி புகார் செய்துள்ளது.
பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா தலைமையில் தனிக்குழு கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
""எங்களது பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுருவியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எங்கள் போராளிகள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்'' என கருணாவின் ஆதரவாளர் வரதன் தெரிவித்தார்.
""ஊடுருவும் போராளிகள் எங்களது தலைவர் கருணாவை ஆதரிக்கும் முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்வர் எனத் தெரியவந்துள்ளது'' என்றார் வரதன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 15,000 போராளிகளில் 6 ஆயிரம் பேர் கருணா என்ற முரளீதரனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு -அம்பாறை பகுதியின் தளபதியாக இருந்தவர் கருணா.
புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகவும் அவரது நெருங்கிய சகா பொட்டு அம்மானைக் கண்டித்தும் குரல் எழுப்பியதை அடுத்து, இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் மேலிடம் எச்சரித்துள்ளது.
Thanx: Dinamani
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

