03-30-2004, 12:38 AM
தமிழ்அலை பத்திரிகை நிர்வாகத்திலிருந்து பிளவுபட்ட அணியினர், இன்னுமொரு நிழற்பதிப்பை ஆரம்பித்துள்ளனர்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 2:57 ஈழம் ஸ
தமிழ்அலை என்ற பெயரில், நிழற்பதிப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இன்னுமொரு பத்திரிகை, கருணாவின் பின்னால் உண்மை தெரியாமல் அணிவகுத்திருக்கும் போராளிகளுக்கும் மக்களுக்கும் தற்போதைய உண்மை நிலைமைகளை எடுத்துச் சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அதனது முதற்பதிப்பில் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தங்களது உயிருக்குக் கடும் ஆபத்து இருப்பதைத் தாம் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ள இப்பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர், தமது உயிருக்கு அஞ்சாது உண்மையை எடுத்துச் சொல்லவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தாம் கடுமையான அழுத்தம் காரணமாகவே பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து செயற்பட்டதாகவும், இனியும் அப்படியான துரோகச் செயலில் ஈடுபட தங்கள் மனம் இடம்கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள, பிரிந்துசென்ற பத்திரிகையாளர்கள், இனிமேல் தாம் அமைதி காக்கப்போவதில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார்கள்.
கிழக்கிலங்கை மக்களை முற்றாகக் குற்றம் சாட்டும் புலம்பெயர் மக்கள் அதை நிறுத்திக்கொண்டு, கருணா என்ற தனிமனிதனின் குற்றத்தை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ள இப்பத்திரிகை, கிழக்கில் வாழும் மக்கள் உண்மை நிலையை அறிந்து கொண்டுள்ளார்கள் என்றும், அவர்களது ஆதரவு எப்போதும் வன்னித் தலைமைக்கே இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.
<b>http://www.thamilalai.net</b>
நன்றி - புதினம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2004, 2:57 ஈழம் ஸ
தமிழ்அலை என்ற பெயரில், நிழற்பதிப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இன்னுமொரு பத்திரிகை, கருணாவின் பின்னால் உண்மை தெரியாமல் அணிவகுத்திருக்கும் போராளிகளுக்கும் மக்களுக்கும் தற்போதைய உண்மை நிலைமைகளை எடுத்துச் சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அதனது முதற்பதிப்பில் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தங்களது உயிருக்குக் கடும் ஆபத்து இருப்பதைத் தாம் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ள இப்பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர், தமது உயிருக்கு அஞ்சாது உண்மையை எடுத்துச் சொல்லவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தாம் கடுமையான அழுத்தம் காரணமாகவே பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து செயற்பட்டதாகவும், இனியும் அப்படியான துரோகச் செயலில் ஈடுபட தங்கள் மனம் இடம்கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள, பிரிந்துசென்ற பத்திரிகையாளர்கள், இனிமேல் தாம் அமைதி காக்கப்போவதில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார்கள்.
கிழக்கிலங்கை மக்களை முற்றாகக் குற்றம் சாட்டும் புலம்பெயர் மக்கள் அதை நிறுத்திக்கொண்டு, கருணா என்ற தனிமனிதனின் குற்றத்தை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ள இப்பத்திரிகை, கிழக்கில் வாழும் மக்கள் உண்மை நிலையை அறிந்து கொண்டுள்ளார்கள் என்றும், அவர்களது ஆதரவு எப்போதும் வன்னித் தலைமைக்கே இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.
<b>http://www.thamilalai.net</b>
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

