03-29-2004, 09:42 PM
150 புலிகளை சம்பூருக்கு அழைத்துவரும் திட்டம் ஏப். 5 வரை ஒத்திவைப்பு
(எஸ்.என்.ஆர்.பிள்ளை)
தேர்தலை முன்னிட்டு ஓமந்தையிலிருந்து 150 புலிகள் இயக்க அங்கத்தவர்களை சம்பூருக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை பின் போடப்பட்டுள்ளதாக சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.
ஓமந்தையில் இருந்து 150 புலிகள் இயக்க அங்கத்தவர்களை இன்று 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சம்பூருக்கு அழைத்து வர ஏற்பாடுகளை செய்து தருமாறு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் சமாதான செயலகத்தை கடிதம் மூலம் கேட்டிருந்தது.
அதேவேளை நாளை 31ஆம் திகதி 150 பெண் போராளிகளை சம்பூரில் இருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லவும் புலிகள் அனுமதி கோரியிருந்தனர்.
ஆனால் தேர்தல் காலம் என்பதால் அழைத்து வரப்படும் புலிகள் இயக்கத்திற்கு பாதுகாப்பு படையினரால் வழித்துணை பாதுகாப்பு வழங்க முடியாது. அந்த கடமையை 5ஆம் திகதி செய்யத் தயாராக இருக்கின்றோம் என சமாதான செயலகம் புலிகள் இயக்கத்திற்கு அறிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி - வீரகேசரி
(எஸ்.என்.ஆர்.பிள்ளை)
தேர்தலை முன்னிட்டு ஓமந்தையிலிருந்து 150 புலிகள் இயக்க அங்கத்தவர்களை சம்பூருக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை பின் போடப்பட்டுள்ளதாக சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.
ஓமந்தையில் இருந்து 150 புலிகள் இயக்க அங்கத்தவர்களை இன்று 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சம்பூருக்கு அழைத்து வர ஏற்பாடுகளை செய்து தருமாறு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் சமாதான செயலகத்தை கடிதம் மூலம் கேட்டிருந்தது.
அதேவேளை நாளை 31ஆம் திகதி 150 பெண் போராளிகளை சம்பூரில் இருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லவும் புலிகள் அனுமதி கோரியிருந்தனர்.
ஆனால் தேர்தல் காலம் என்பதால் அழைத்து வரப்படும் புலிகள் இயக்கத்திற்கு பாதுகாப்பு படையினரால் வழித்துணை பாதுகாப்பு வழங்க முடியாது. அந்த கடமையை 5ஆம் திகதி செய்யத் தயாராக இருக்கின்றோம் என சமாதான செயலகம் புலிகள் இயக்கத்திற்கு அறிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

