03-29-2004, 11:45 AM
முல்தான் டெஸ்ட் 300 ரன்கள் அடித்து ஷேவக் சாதனை
திங்கள், 29 மார்ச் 2004
முல்தானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவக் 366 பந்துகளை எதிர்கொண்டு 300 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார், பாகிஸ்தானின் 300வது டெஸ்ட் போட்டியில் ஷேவக் இந்த சாதனையை படைத்தார்.
அவர் 309 ரன்கள் எடுத்திருந்த போது சமீ பந்தில் உமரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றிய உத்வேகத்துடன் முல்தானில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று களமிறங்கியது. டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆகாஷ் சோப்ரா, வீரேந்திர ஷேவக் ஆகியோரில் சோப்ரா 40 ரன்கள் அடித்த நிலையில் சமீ பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திராவிட்டும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருக்குப் பின் ஷேவக்குடன் ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் நன்றாக ஈடுகொடுத்து விளையாடினார்.
டெண்டுல்கர் - ஷேவக் இணை அதிகபட்சமாக ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்த பெருமையைப் பெற்றுள்ளது.
இதனிடையே துவக்கம் முதலே நன்றாக அடித்தாடிய ஷேவக் ஆட்டத்தின் 2வது நாளான இன்று 366 பந்துகளில் 300 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். தொடர்ந்து ஆடிய ஷேவக், சமீ வீசிய பந்தில் பாகிஸ்தான் வீரர் உமரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
நன்றி - வெப் உலகம்
திங்கள், 29 மார்ச் 2004
முல்தானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவக் 366 பந்துகளை எதிர்கொண்டு 300 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார், பாகிஸ்தானின் 300வது டெஸ்ட் போட்டியில் ஷேவக் இந்த சாதனையை படைத்தார்.
அவர் 309 ரன்கள் எடுத்திருந்த போது சமீ பந்தில் உமரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றிய உத்வேகத்துடன் முல்தானில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று களமிறங்கியது. டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆகாஷ் சோப்ரா, வீரேந்திர ஷேவக் ஆகியோரில் சோப்ரா 40 ரன்கள் அடித்த நிலையில் சமீ பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திராவிட்டும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருக்குப் பின் ஷேவக்குடன் ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் நன்றாக ஈடுகொடுத்து விளையாடினார்.
டெண்டுல்கர் - ஷேவக் இணை அதிகபட்சமாக ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்த பெருமையைப் பெற்றுள்ளது.
இதனிடையே துவக்கம் முதலே நன்றாக அடித்தாடிய ஷேவக் ஆட்டத்தின் 2வது நாளான இன்று 366 பந்துகளில் 300 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். தொடர்ந்து ஆடிய ஷேவக், சமீ வீசிய பந்தில் பாகிஸ்தான் வீரர் உமரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

