03-29-2004, 10:47 AM
வெள்ளிவீதியார் எழுதிய குறுந்தொகைப் பாடல் இது.
"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே"
கன்று=சேய் பசு(குட்டி)
கலம்=பாத்திரம்
ஆ=பசு, எனவே நல்லான்=நல்+ஆ+ன்=நல்ல பசு
தீம்=இனிய
ஐ=தலைவன்
பசலை=தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்படும் நிறமாற்றம்
திதலை=தேமல்
அல்குல்=இடுப்பு,பெண்குறி
மாமை=மேனி,நிறம்
கவின்=அழகு.
வீணாக்கப்படும் பசுவின் பாலை போல் என் பெண்மை எனக்கும்,என் கணவனுக்கும் பயன்படாததால் என் பொலிவு குன்றுகின்றது
"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே"
கன்று=சேய் பசு(குட்டி)
கலம்=பாத்திரம்
ஆ=பசு, எனவே நல்லான்=நல்+ஆ+ன்=நல்ல பசு
தீம்=இனிய
ஐ=தலைவன்
பசலை=தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்படும் நிறமாற்றம்
திதலை=தேமல்
அல்குல்=இடுப்பு,பெண்குறி
மாமை=மேனி,நிறம்
கவின்=அழகு.
வீணாக்கப்படும் பசுவின் பாலை போல் என் பெண்மை எனக்கும்,என் கணவனுக்கும் பயன்படாததால் என் பொலிவு குன்றுகின்றது
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>

