Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதன் பொருள் என்ன
#2
வெள்ளிவீதியார் எழுதிய குறுந்தொகைப் பாடல் இது.

"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே"


கன்று=சேய் பசு(குட்டி)
கலம்=பாத்திரம்
ஆ=பசு, எனவே நல்லான்=நல்+ஆ+ன்=நல்ல பசு
தீம்=இனிய
ஐ=தலைவன்
பசலை=தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்படும் நிறமாற்றம்
திதலை=தேமல்
அல்குல்=இடுப்பு,பெண்குறி
மாமை=மேனி,நிறம்
கவின்=அழகு.


வீணாக்கப்படும் பசுவின் பாலை போல் என் பெண்மை எனக்கும்,என் கணவனுக்கும் பயன்படாததால் என் பொலிவு குன்றுகின்றது
\"


\" -()
<i><b></b></i>
Reply


Messages In This Thread
[No subject] - by phozhil - 03-29-2004, 10:47 AM
[No subject] - by Eelavan - 03-29-2004, 11:33 AM
[No subject] - by Mathan - 03-29-2004, 11:37 AM
[No subject] - by Paranee - 03-29-2004, 02:48 PM
[No subject] - by kuruvikal - 03-29-2004, 06:02 PM
[No subject] - by shanmuhi - 03-29-2004, 07:18 PM
[No subject] - by phozhil - 03-30-2004, 11:40 AM
[No subject] - by kuruvikal - 03-30-2004, 12:03 PM
[No subject] - by phozhil - 03-31-2004, 04:22 PM
[No subject] - by kuruvikal - 03-31-2004, 06:18 PM
[No subject] - by ishwari - 04-03-2004, 10:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)