Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மறக்கலாமோ சொல் மனமே
#1
மறக்கலாமோ சொல் மனமே

மனம் என்றொன்று இருப்பதால்
ஞாபகங்கள் அங்கே சங்கமம்

வெள்ளையாய் உடை கண்டால்
பள்ளி சென்ற தோழிகளுடன்
அள்ளிச் சென்ற புத்தகங்களுக்குள்
சுமந்து சென்ற ஞாபகங்கள்.....

பட்டாடையுடுத்தி பட்டாம் புூச்சியாய்
வட்டமடிக்கும் திருவிழாக் காலமதில்
கடலை வாங்கி உண்ட
கடந்து போன ஞாபகங்கள்.....

மண் மணக்கும் மழைத்துளிகளினுடே
மனை நோக்கி வருகையில்
அன்னையவளின் தாளித்த சமையலில்
வாசனையாய் போன ஞாபகங்கள்.....

வயதுக்கு வந்த போது
புதுப்புது மாற்றங்களுடே.. முதன் முதலாய்
புதுச் சேலையின் தழுவலில்
அனுபவமாகிப் போன ஞாபகங்கள்....

பருவ வயதில் பருவமான போதே
உருவமாய் உள்ளத்தில் உறைந்துபோன
முதற்காதலின் ஸ்பரிசங்கள்
ரணங்களாகிப்போன ஞாபகங்கள்.....

நடுநிசியில் கடந்து போன ஞாபகங்கள்
மீண்டும் என் நினைவில்.. அவற்றை
மறக்கலாமோ சொல் மனமே….!
25.03.2004
Reply


Messages In This Thread
மறக்கலாமோ சொல் மனமே - by shanmuhi - 03-25-2004, 07:31 AM
[No subject] - by kuruvikal - 03-25-2004, 10:00 AM
[No subject] - by sWEEtmICHe - 03-25-2004, 02:11 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 03:13 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 05:44 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 06:01 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 06:15 PM
[No subject] - by sWEEtmICHe - 03-26-2004, 07:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)