03-23-2004, 09:48 AM
வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமே தமிழர்களின் தாயகம்: Nஐhசப் பரராஐசிங்கம்
வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமே தமிழர்களின் தாயகம் எனவும், தமிழர்களின் ஏக தலைவன் பிரபாகரன் எனவும், இலங்கை தமிழரசுக் கட்சிசியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் Nஐhசப் பரராஐசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே 17,000க்கு மேற்பட்ட மாவீரர்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் உயிர் நீத்தார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் தியாகம் வீண் போகாது எனவும் கூறினார்.
மட்டக்களப்பு களுவங்கேணியில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு மாகாணம் இரண்டு மாகாணங்களாக பிரிந்திருக்க வேண்டுமானால் 35 வருடங்களுக்கு முன்னரே பிரிந்திருக்க முடியும். எனினும் இந்த மாகாணங்கள் இரண்டும் பிரியக்கூடாது என்பதற்காகவே பல தியாகங்களை செய்ததாகவும் அவர் கூறினார்.
வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என்பது உட்பட பல்வேறு முக்கிய விடயங்களை அடிப்படையாக வைத்தே இலங்கை தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Thanx: Puthinam
வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமே தமிழர்களின் தாயகம் எனவும், தமிழர்களின் ஏக தலைவன் பிரபாகரன் எனவும், இலங்கை தமிழரசுக் கட்சிசியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் Nஐhசப் பரராஐசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே 17,000க்கு மேற்பட்ட மாவீரர்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் உயிர் நீத்தார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் தியாகம் வீண் போகாது எனவும் கூறினார்.
மட்டக்களப்பு களுவங்கேணியில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு மாகாணம் இரண்டு மாகாணங்களாக பிரிந்திருக்க வேண்டுமானால் 35 வருடங்களுக்கு முன்னரே பிரிந்திருக்க முடியும். எனினும் இந்த மாகாணங்கள் இரண்டும் பிரியக்கூடாது என்பதற்காகவே பல தியாகங்களை செய்ததாகவும் அவர் கூறினார்.
வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என்பது உட்பட பல்வேறு முக்கிய விடயங்களை அடிப்படையாக வைத்தே இலங்கை தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

