03-23-2004, 01:30 AM
தன்மானம் உள்ள தமிழன் எவரும் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்: செல்வம் அடைக்கலநாதன்
செவ்வாய்க்கிழமை, 23 மார்ச் 2004, 5:23
தன்மானம் உள்ள தமிழன் எவரும் எதிர்வரும் தேர்தலில் மாற்று கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள் என வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் எழுச்சியோடு வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களிக்காத பட்சத்தில் எதிர்கால சந்ததி வெட்கித் தலைகுனிய வேண்டிவரும் என்றும் தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலை காரணமாக தென்னிலங்கை சமூகம் சந்தோஷமாக கைகொட்டி சிரிக்கின்ற இந்த நிலை மாறவேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழர்கள் அனைவரும் மிகவும் அவதானமாக சிந்தித்து தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பது மிக முக்கியமானது என்று மேலும் தெரிவித்தார்.
நன்றி - புதினம்
செவ்வாய்க்கிழமை, 23 மார்ச் 2004, 5:23
தன்மானம் உள்ள தமிழன் எவரும் எதிர்வரும் தேர்தலில் மாற்று கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள் என வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் எழுச்சியோடு வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களிக்காத பட்சத்தில் எதிர்கால சந்ததி வெட்கித் தலைகுனிய வேண்டிவரும் என்றும் தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலை காரணமாக தென்னிலங்கை சமூகம் சந்தோஷமாக கைகொட்டி சிரிக்கின்ற இந்த நிலை மாறவேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழர்கள் அனைவரும் மிகவும் அவதானமாக சிந்தித்து தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பது மிக முக்கியமானது என்று மேலும் தெரிவித்தார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

