03-22-2004, 11:51 AM
தடையை நீக்க புலிகள் கோரிக்கை: மத்திய அரசுக்கு கடிதம்
பொடா சட்டத்தின் கீழ் தங்கள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யக் கோரி மத்திய அரசிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் மனு அளித்துள்ளது. இதனை பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
புலிகளின் மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் பொடா மறு ஆய்வுக் குழுவிடம் அனுப்பியுள்ளதாக, குழுவின் தலைவரான நீதிபதி சகார்யா இன்று தெரிவித்தார்.
புலிகளை ஆதரித்ததாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான வழக்கை மறு ஆய்வு செய்து வருகிறது இந்தக் குழு. இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் சகார்யா.
இந்த விசாரணையின்போது தான் புலிகளின் மனு குறித்து மத்திய உள்துறைச் செயலகம் தனக்கு அனுப்பிய கடித விவரத்தை சகார்யா வெளியிட்டார்.
குழுவுக்கு மத்திய அரசு ஏதும் பரிந்துரை செய்துள்ளதா என்று கேட்டபோது, இன்னும் முழு விவரத்தை நான் படிக்கவில்லை. முன்பு இதே போன்ற மனுவை புலிகள் கொடுத்தபோது அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஆனால், பொடா சட்டத்தின்படி இந்த விஷயத்தில் மறு ஆய்வுக் குழுவின் கருத்தைக் கேட்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
நன்றி - தட்ஸ் தமிழ்
பொடா சட்டத்தின் கீழ் தங்கள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யக் கோரி மத்திய அரசிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் மனு அளித்துள்ளது. இதனை பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
புலிகளின் மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் பொடா மறு ஆய்வுக் குழுவிடம் அனுப்பியுள்ளதாக, குழுவின் தலைவரான நீதிபதி சகார்யா இன்று தெரிவித்தார்.
புலிகளை ஆதரித்ததாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான வழக்கை மறு ஆய்வு செய்து வருகிறது இந்தக் குழு. இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் சகார்யா.
இந்த விசாரணையின்போது தான் புலிகளின் மனு குறித்து மத்திய உள்துறைச் செயலகம் தனக்கு அனுப்பிய கடித விவரத்தை சகார்யா வெளியிட்டார்.
குழுவுக்கு மத்திய அரசு ஏதும் பரிந்துரை செய்துள்ளதா என்று கேட்டபோது, இன்னும் முழு விவரத்தை நான் படிக்கவில்லை. முன்பு இதே போன்ற மனுவை புலிகள் கொடுத்தபோது அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஆனால், பொடா சட்டத்தின்படி இந்த விஷயத்தில் மறு ஆய்வுக் குழுவின் கருத்தைக் கேட்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
நன்றி - தட்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

