03-22-2004, 02:11 AM
ஆத்திரம் - ஐயப்பன்
ஒரு ஆள் ஜென் துறவியிடம் வந்தார்.
"சுவாமி, எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. அந்த நேரத்தில் என்ன செய்கிறேன் என்பதே தெரிவதில்லை. சில நேரம் வீட்டுக் கண்ணாடிப் பொருட்களையும் கூட உடைத்துப் போட்டு இருக்கிறேன். வீட்டிலிருப்பவர்களிடமும் வெகு கடுமையாக நடந்துகொள்கிறேன். சில நேரம் தவறு என்னுடையதாகவும், சில நேரம் மற்றவர்களுடையதாகவும் இருக்கிறது. இந்த மாதிரியான என் நிலையினால் பல நன்பர்களையும் இழந்தும், கெட்டபேரையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன். இதற்கு தாங்கள் தான் ஏதாவது வழி சொல்லவேண்டும்".
துறவி ஒரு மரப்பலகையும் கூடவே ஒரு பை நிறைய ஆணிகளையும் கொடுத்து சொன்னார், "எப்போதெல்லாம் உங்களுக்கு கோபம் வருகிறதோ.. அப்போதெல்லாம் இந்தப் பலகையில் ஒரு ஆணி அடித்து வையுங்கள். பிறகு செய்தது தவறென்றோ அல்லது இன்னும் தன்மையாகப் பேசி இருக்கலாம் என்றோ நி னைப்பீராயின் அந்த நேரத்தில் அடிக்கப்பட்ட ஆணியைப் பிடுங்கி எடுங்கள். ஒரு மாதம் கழித்து என்னிடம் வாருங்கள்".
ஒரு மாதம் கழித்து அந்த மனிதர் வந்தார். பலகையில் நிறைய ஆணி அறையப் பட்ட தடங்களும், சில ஆணிகளும் மிச்சமிருந்தது.
"சுவாமி, இப்போது கோபம் மட்டுப்பட்டு இருக்கிறது, பாருங்கள் எத்தனை தடவை தவறுணர்ந்து ஆணிகளைப் பிடுங்கி இருக்கிறேன்."
ஜென் ஆசிரியர் சொன்னார்... "அதெல்லாம் சரி நான் உன்னிடம் பலகையைத் தரும்போது எப்படி இருந்ததோ அப்படியே தா, இதில் பார் எத்தனை காயங்களும் ஓட்டைகளும் ஏற்பட்டிருக்கிறது".
**
ஆத்திரம்
--------
அடடா மூடன் தானோ ஆனேன்?
படரும் வன்மம் தன்னைப் போற்றி
சொற்கள் பலதைச் சுழற்றி வீசி
நண்பர் பலரை பகைவர் ஆக்கும்
கொடும் பட்டம் வழங்கி மகிழும்
ஆத்திரம் அதனை அடக்கி ஆள
துறவி யவரின் உதவி நாடி
நிலைமை விளக்கி
நிஜமாய் அழுதேன்
பலகை ஒன்றில் பழகக் கொடுத்து
ஆத்திரம் என்னும் ஆணியை அறைய
வெட்பம் தணிந்த பின்னே உடனே
தவறு எனதாய் இருப்பின் தெளிந்து
ஆணி யதனை அவிழ்த்திடச் செய்தார்
மாதக் கடையில் மெதுவாய் நோக்கின்
அறையப்பட்ட ஆணிகள் நிறைய
கையில் அவிழ்ந்து இருந்திடக் கண்டேன்
சொற்பம் சிலதே பலகையைத் தாக்க
நானாய் உருவக மான பலகையில்
மிச்சம் இருந்ததோ பிளவும், வலியும்.
-- ஷக்தி ப்ரபா.
**
மொத்தத்தில் யென்நிலை மூடனாய் என்நாளும்
சித்தம் குழைந்து செயலிலும் சொல்லிலும்
எத்தனை பேரை எதிரியாய் ஆக்கினேன்
உத்தமம் இற்று ஊரைப் பழித்து நான்
கத்தித் திரிய கதிகலங்கி நாடினேன்
முத்தியுடை நல்ல முனிவர்; ஆணிகள்
கொத்தும் பலகையும் கூடக் கொடுத்து
புத்தி கெடுக புதையொரு ஆணியென;
வித்திட்ட நேரமதில் வேகாத பிழைக்கு
உத்தர வாதமில்லா உன்செயல் என்றாலே
குத்திட்ட ஆணி குழையச் செய்துவிடு.
பத்துத் தினங்கள் பார்த்திடு மூன்றுமுறை
அத்தினம் நோக்கையில் அண்மியென்றார் சாமியவர்
அத்தினமே வந்திடவே அங்கே துறவியிடம்
நித்தம் சினந்தான் நிகழ்விலே மட்டமாய்
செத்திருக்கு; என்பிழையே தீர்வாகப் பிடுங்கிய
அத்தனை ஆணிகளும் பாருங்கள் என்றிடவும்
ஒத்துவரா சாமியோ ஓட்டைகளும் காயங்களின்
பொத்துகளும் இல்லாத பொருளாய் தாவென்றார்
தத்துவம் உரைக்கும் சாது
-- அவதானி கஜன்.
ஒரு ஆள் ஜென் துறவியிடம் வந்தார்.
"சுவாமி, எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. அந்த நேரத்தில் என்ன செய்கிறேன் என்பதே தெரிவதில்லை. சில நேரம் வீட்டுக் கண்ணாடிப் பொருட்களையும் கூட உடைத்துப் போட்டு இருக்கிறேன். வீட்டிலிருப்பவர்களிடமும் வெகு கடுமையாக நடந்துகொள்கிறேன். சில நேரம் தவறு என்னுடையதாகவும், சில நேரம் மற்றவர்களுடையதாகவும் இருக்கிறது. இந்த மாதிரியான என் நிலையினால் பல நன்பர்களையும் இழந்தும், கெட்டபேரையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன். இதற்கு தாங்கள் தான் ஏதாவது வழி சொல்லவேண்டும்".
துறவி ஒரு மரப்பலகையும் கூடவே ஒரு பை நிறைய ஆணிகளையும் கொடுத்து சொன்னார், "எப்போதெல்லாம் உங்களுக்கு கோபம் வருகிறதோ.. அப்போதெல்லாம் இந்தப் பலகையில் ஒரு ஆணி அடித்து வையுங்கள். பிறகு செய்தது தவறென்றோ அல்லது இன்னும் தன்மையாகப் பேசி இருக்கலாம் என்றோ நி னைப்பீராயின் அந்த நேரத்தில் அடிக்கப்பட்ட ஆணியைப் பிடுங்கி எடுங்கள். ஒரு மாதம் கழித்து என்னிடம் வாருங்கள்".
ஒரு மாதம் கழித்து அந்த மனிதர் வந்தார். பலகையில் நிறைய ஆணி அறையப் பட்ட தடங்களும், சில ஆணிகளும் மிச்சமிருந்தது.
"சுவாமி, இப்போது கோபம் மட்டுப்பட்டு இருக்கிறது, பாருங்கள் எத்தனை தடவை தவறுணர்ந்து ஆணிகளைப் பிடுங்கி இருக்கிறேன்."
ஜென் ஆசிரியர் சொன்னார்... "அதெல்லாம் சரி நான் உன்னிடம் பலகையைத் தரும்போது எப்படி இருந்ததோ அப்படியே தா, இதில் பார் எத்தனை காயங்களும் ஓட்டைகளும் ஏற்பட்டிருக்கிறது".
**
ஆத்திரம்
--------
அடடா மூடன் தானோ ஆனேன்?
படரும் வன்மம் தன்னைப் போற்றி
சொற்கள் பலதைச் சுழற்றி வீசி
நண்பர் பலரை பகைவர் ஆக்கும்
கொடும் பட்டம் வழங்கி மகிழும்
ஆத்திரம் அதனை அடக்கி ஆள
துறவி யவரின் உதவி நாடி
நிலைமை விளக்கி
நிஜமாய் அழுதேன்
பலகை ஒன்றில் பழகக் கொடுத்து
ஆத்திரம் என்னும் ஆணியை அறைய
வெட்பம் தணிந்த பின்னே உடனே
தவறு எனதாய் இருப்பின் தெளிந்து
ஆணி யதனை அவிழ்த்திடச் செய்தார்
மாதக் கடையில் மெதுவாய் நோக்கின்
அறையப்பட்ட ஆணிகள் நிறைய
கையில் அவிழ்ந்து இருந்திடக் கண்டேன்
சொற்பம் சிலதே பலகையைத் தாக்க
நானாய் உருவக மான பலகையில்
மிச்சம் இருந்ததோ பிளவும், வலியும்.
-- ஷக்தி ப்ரபா.
**
மொத்தத்தில் யென்நிலை மூடனாய் என்நாளும்
சித்தம் குழைந்து செயலிலும் சொல்லிலும்
எத்தனை பேரை எதிரியாய் ஆக்கினேன்
உத்தமம் இற்று ஊரைப் பழித்து நான்
கத்தித் திரிய கதிகலங்கி நாடினேன்
முத்தியுடை நல்ல முனிவர்; ஆணிகள்
கொத்தும் பலகையும் கூடக் கொடுத்து
புத்தி கெடுக புதையொரு ஆணியென;
வித்திட்ட நேரமதில் வேகாத பிழைக்கு
உத்தர வாதமில்லா உன்செயல் என்றாலே
குத்திட்ட ஆணி குழையச் செய்துவிடு.
பத்துத் தினங்கள் பார்த்திடு மூன்றுமுறை
அத்தினம் நோக்கையில் அண்மியென்றார் சாமியவர்
அத்தினமே வந்திடவே அங்கே துறவியிடம்
நித்தம் சினந்தான் நிகழ்விலே மட்டமாய்
செத்திருக்கு; என்பிழையே தீர்வாகப் பிடுங்கிய
அத்தனை ஆணிகளும் பாருங்கள் என்றிடவும்
ஒத்துவரா சாமியோ ஓட்டைகளும் காயங்களின்
பொத்துகளும் இல்லாத பொருளாய் தாவென்றார்
தத்துவம் உரைக்கும் சாது
-- அவதானி கஜன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

