03-18-2004, 11:38 AM
Quote:<b>ஒளிவு மறைவின்றி</b></span>
கொழும்பிலுள்ள லொட்ஜ்காரர் ஒருவர் தெரிவித்த தகவல் இது.
ஒரு முதியவர் தனது மகனுடன் வெளியூரிலிருந்து எனது லொட்ஜுக்கு வந்திருந்தார். அவர்கள் வறியவர்களைப் போல் காணப்பட்டனர். எனவே, குறைந்த வாடகையுள்ள அறையை ஒதுக்கிக் கொடுத்தேன்.
இவர்கள் கொழும்புக்கு வந்த நோக்கத்தைக் கேட்டறிந்த போது பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதாவது பல இலட்ச ரூபா பெறுமதியான இயந்திரமொன்றை வாங்கவே வந்திருக்கிறார்கள்.
இவ்வளவு பணத்தைத் தக்க பாதுகாப்பின்றி கொண்டு வந்திருக்கிறீர்களே என்று நான் சொன்னபோது, பணமா? கையில் அவ்வளவு பணம் எடுத்து வரவில்லை. வெளிநாட்டிலிருந்து தம்பி (அதாவது இவரின் மூத்த மகன்) வங்கிக் கணக்கிற்கு அனுப்புவான். உண்டியலிலும் பணம் வரும், என்றார் அந்த முதியவர் அனாயாசமாக!
ஆளைப் பார்த்து, தோற்றத்தைப் பார்த்து எடை போட்டுவிடக் கூடாதப்பா!<span style='color:blue'> -தினக்குரல்
[size=15]முதியவருக்குள்ள மனசும் தன்னடக்கமும் விடுதிக்காரருக்கு வராதது மட்டுமல்ல எழுதிய பத்திரிகைகாரருக்கும் வரவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
1.முதியவர் கைக்கு மகன் பணம் அனுப்பும் வரை பணம் இருக்கப் போவதில்லை.
2. மகன் உழைத்து அனுப்பும் பணத்தை சொகுசு விடுதிக்கு கட்டிவிட்டு போவதை விட பிரயோசனமான ஒன்றுக்காக செலவழிப்பதே மேல்.
3.மகன் அனுப்பும் பணம் வங்கிக்கு வரப் போகிறது அல்லது உண்டியலில் பணம் வந்தாலும் அதை உடனடியாக வங்கியிலோ அல்லது நேரடியாக அவர் பொருளை வாங்கும் நிறுவனத்திடமோ செலுத்தி விட்டால் முதியவர் ஏன் கலங்க வேண்டும்.
அதை புரிந்து கொள்ள முடியாதவர்களா? அல்லது பணம் இருப்பதாக தெரிந்து கடத்தி சுருட்ட முடியாத வேதனையா?
ஒளிவு மறைவின்றி சொல்லி விட்டோம்..................

