03-13-2004, 02:29 PM
ஆதிக்க மனப்பான்மை
வாழ்க்கையில் நமக்கு பல சறுக்கல்கள் ஏற்பட காரணம் அதிகப்படையான எதிர்பார்ப்பா?. அல்லது மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் போவதாலா?. அதையும் தாண்டி தான் சொல்வது தான் சரி மற்றவர்கள் என்னதான் சொன்னாலும் தவறு என்று கொள்ளும் மனப்பான்மை கூட இருக்கலாம். (சில நேரம் நேர்மையாக யோசித்து பார்த்தால் தவறு நம்மிடம் தான் என்று புரியும்.)
அமெரிக்கா ஈராக்கின் மேல் படையெடுத்ததன் முக்கிய காரணம் எதிர்பார்ப்பு. வீண் பிடிவாதம். ஐ.நா சபையாவது ஒண்ணாவது. என் கருத்தை தான் எல்லோரும் ஏற்கவேண்டும் என்னும் ஆதிக்க மனப்பான்மை. சர்வாதிகாரதன்மை. பள்ளி மாணவன் முதல் பெரும்பாலான அனைவரும் அதிகமாய் சறுக்குவது தனக்கு தெரிந்தது தான் சரி என்று நினைத்து மற்றதை ஒதுக்கி தள்ளும்போதில் தான். ஒரு தந்தை மகனுக்கும் வாக்குவாதம் வந்தால் தந்தை மகன் பக்கம் இருக்கும் நியாயத்தையும் அவன் தரப்பு வாதங்களையும் கேட்பாரா. அட நான் பார்த்து பிறந்த பையன் அவன் சொல்லறதை நான் கேட்கனுமான்னு இருப்பார். இப்போது நிலைமை பரவாயில்லை போல தோன்றினாலும் பல இடங்களில் இன்னும் இந்த ஆதிக்க மனப்பான்மை இருக்கிறது. இது பல உறவுகளில் தொடரும் ஒரு வேதனையான கதை. பெரும்பாலான மணவிலக்குக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். மற்றவர்கள் சொல்லவரும் முன்னமே அட இதுவா இது தான் எனக்கு தெரியுமே அதுக்கென்ன இப்ப அப்படின்னும் போது சொல்லவருபவர் சுருங்கி போவார். இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும். குழந்தை எதையாவது சொல்ல வரும்போது அதை ஒதுக்கினால் அது அந்த பிஞ்சு வயசிலேயே அடிப்பட்டு போகும். அட அதுங்கள்க்கு என்ன தெரியும் நாம தான் சொல்லி கொடுக்கனும் அப்படிங்கர பெருசுக முதல்ல குழந்தைக கிட்ட இருந்து எப்படி கத்துக்கறது அப்படிங்கறதை கத்துக்கனும். அட என்ன வள வளன்னு பேசிக்கிட்டு நம்ம ?fன் கதைக்கு வருவோம்.
===
ஒரு ஜென் ஆசிரியர் வெகு அமைதியாய் மக்களுக்கு ஜென் பற்றி போதித்து கொண்டு இருந்தார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் தனிப்பெருமையும் செல்வாக்கும் இருந்தது. அந்த நாட்டு பேரறிஞர் என அரசனிடம் பட்டம் வாங்கிய ஒருவருக்கு இது பொறுக்கவில்லை. உடனே அவர் ஜென் என்பது வெறும் பம்மாத்து வேலை. அதை பொய் என்று நிருபித்து காண்பிக்கிறேன் என்று கூறி ஆசிரியரை வாதுக்கு அழைத்து ஜென் என்றால் என்ன என்று சொல்லுங்கள் என்றார். ஆசிரியரும் அந்த அறிஞரை தன் குடிலுக்கு அழைத்து சென்று அமரவைத்து ஜப்பானிய முறையில் டீ உபச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தேவையான எல்லா பொருள்களையும் அவர் முன்னே வைத்து கோப்பையில் முறைப்படி தேநீர் வார்க்க ஆரம்பித்தார். கோப்பை நிரம்பிய பின்னும் ஊற்றிகொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க இயலாத அந்த அறிஞர் "நிரம்பிய பின்னும் ஊற்றுகிறீர்களே இது எப்படி சரி பட்டு வரும் முதலில் கோப்பையில் இருப்பதை நான் காலி செய்த பிறகு ஏன் மறுபடி நிரப்ப கூடாது என கேட்க.. ஜென் ஆசான் பதிலிறுத்தார்.
"அய்யா நீங்களும் இந்த கோப்பையும் ஒன்று, முதலில் உள்ளே உள்ளதை வெறுமையாக்குங்கள் அப்புறம் நிரப்ப துவங்கலாம்" என்றார்
நன்றி - ஐயப்பன்
வாழ்க்கையில் நமக்கு பல சறுக்கல்கள் ஏற்பட காரணம் அதிகப்படையான எதிர்பார்ப்பா?. அல்லது மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் போவதாலா?. அதையும் தாண்டி தான் சொல்வது தான் சரி மற்றவர்கள் என்னதான் சொன்னாலும் தவறு என்று கொள்ளும் மனப்பான்மை கூட இருக்கலாம். (சில நேரம் நேர்மையாக யோசித்து பார்த்தால் தவறு நம்மிடம் தான் என்று புரியும்.)
அமெரிக்கா ஈராக்கின் மேல் படையெடுத்ததன் முக்கிய காரணம் எதிர்பார்ப்பு. வீண் பிடிவாதம். ஐ.நா சபையாவது ஒண்ணாவது. என் கருத்தை தான் எல்லோரும் ஏற்கவேண்டும் என்னும் ஆதிக்க மனப்பான்மை. சர்வாதிகாரதன்மை. பள்ளி மாணவன் முதல் பெரும்பாலான அனைவரும் அதிகமாய் சறுக்குவது தனக்கு தெரிந்தது தான் சரி என்று நினைத்து மற்றதை ஒதுக்கி தள்ளும்போதில் தான். ஒரு தந்தை மகனுக்கும் வாக்குவாதம் வந்தால் தந்தை மகன் பக்கம் இருக்கும் நியாயத்தையும் அவன் தரப்பு வாதங்களையும் கேட்பாரா. அட நான் பார்த்து பிறந்த பையன் அவன் சொல்லறதை நான் கேட்கனுமான்னு இருப்பார். இப்போது நிலைமை பரவாயில்லை போல தோன்றினாலும் பல இடங்களில் இன்னும் இந்த ஆதிக்க மனப்பான்மை இருக்கிறது. இது பல உறவுகளில் தொடரும் ஒரு வேதனையான கதை. பெரும்பாலான மணவிலக்குக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். மற்றவர்கள் சொல்லவரும் முன்னமே அட இதுவா இது தான் எனக்கு தெரியுமே அதுக்கென்ன இப்ப அப்படின்னும் போது சொல்லவருபவர் சுருங்கி போவார். இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும். குழந்தை எதையாவது சொல்ல வரும்போது அதை ஒதுக்கினால் அது அந்த பிஞ்சு வயசிலேயே அடிப்பட்டு போகும். அட அதுங்கள்க்கு என்ன தெரியும் நாம தான் சொல்லி கொடுக்கனும் அப்படிங்கர பெருசுக முதல்ல குழந்தைக கிட்ட இருந்து எப்படி கத்துக்கறது அப்படிங்கறதை கத்துக்கனும். அட என்ன வள வளன்னு பேசிக்கிட்டு நம்ம ?fன் கதைக்கு வருவோம்.
===
ஒரு ஜென் ஆசிரியர் வெகு அமைதியாய் மக்களுக்கு ஜென் பற்றி போதித்து கொண்டு இருந்தார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் தனிப்பெருமையும் செல்வாக்கும் இருந்தது. அந்த நாட்டு பேரறிஞர் என அரசனிடம் பட்டம் வாங்கிய ஒருவருக்கு இது பொறுக்கவில்லை. உடனே அவர் ஜென் என்பது வெறும் பம்மாத்து வேலை. அதை பொய் என்று நிருபித்து காண்பிக்கிறேன் என்று கூறி ஆசிரியரை வாதுக்கு அழைத்து ஜென் என்றால் என்ன என்று சொல்லுங்கள் என்றார். ஆசிரியரும் அந்த அறிஞரை தன் குடிலுக்கு அழைத்து சென்று அமரவைத்து ஜப்பானிய முறையில் டீ உபச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தேவையான எல்லா பொருள்களையும் அவர் முன்னே வைத்து கோப்பையில் முறைப்படி தேநீர் வார்க்க ஆரம்பித்தார். கோப்பை நிரம்பிய பின்னும் ஊற்றிகொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க இயலாத அந்த அறிஞர் "நிரம்பிய பின்னும் ஊற்றுகிறீர்களே இது எப்படி சரி பட்டு வரும் முதலில் கோப்பையில் இருப்பதை நான் காலி செய்த பிறகு ஏன் மறுபடி நிரப்ப கூடாது என கேட்க.. ஜென் ஆசான் பதிலிறுத்தார்.
"அய்யா நீங்களும் இந்த கோப்பையும் ஒன்று, முதலில் உள்ளே உள்ளதை வெறுமையாக்குங்கள் அப்புறம் நிரப்ப துவங்கலாம்" என்றார்
நன்றி - ஐயப்பன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

