03-12-2004, 07:40 PM
கருணாவின் பின்னணியில் இந்தியாவும், அமெரிக்காவும் இருப்பதாக சந்தேகம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணாவினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரச்சனையுடன் இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்புபட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உறுதியான நிதியுதவிகளோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லாமல் கருணாவினால் இவ்வாறு திட்டமிட்டுச் செயற்பட்டிருக்க முடியாது என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கருதுவதாகத் தெரிவித்திருக்கும் அச்சஞ்சிகை, வெளிச்சக்தி ஒன்றின் உதவியில்லாமல் கருணா இவ்வாறு செயற்பட்டிருக்க முடியாது என அவர்கள் உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.
மட்டக்களப்பில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை வெளியிட்ட அதேசமயம், கருணா தனது நடவடிக்கையையும் ஆரம்பித்ததைச் சுட்டிக்காட்டும் இவர்கள், திட்டமிட்டே இந்தச் சதி முயற்சிகள் இடம்பெற்றிருப்பதாக இவர்கள் கருதுவதாகவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு கிழக்கு மாகாணம் மீதான அக்கறை நீண்டகாலமாகவே இருந்து வந்தமையும், திருகோணமலை துறைமுகம் மீது அது கொண்டிருக்கும் அக்கறை மற்றும் சிறிலங்காவின் வான்தளங்களை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகள் என்பவற்றையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இத்தருணத்தில் இணைத்து நோக்குவதாகவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தும் இந்தச் சதிமுயற்சியில் அயல்நாடான இந்தியாவின் பங்கு தொடர்பாகவும் இவர்கள் கூடுதல் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி - புதினம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணாவினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரச்சனையுடன் இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்புபட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உறுதியான நிதியுதவிகளோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லாமல் கருணாவினால் இவ்வாறு திட்டமிட்டுச் செயற்பட்டிருக்க முடியாது என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கருதுவதாகத் தெரிவித்திருக்கும் அச்சஞ்சிகை, வெளிச்சக்தி ஒன்றின் உதவியில்லாமல் கருணா இவ்வாறு செயற்பட்டிருக்க முடியாது என அவர்கள் உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.
மட்டக்களப்பில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை வெளியிட்ட அதேசமயம், கருணா தனது நடவடிக்கையையும் ஆரம்பித்ததைச் சுட்டிக்காட்டும் இவர்கள், திட்டமிட்டே இந்தச் சதி முயற்சிகள் இடம்பெற்றிருப்பதாக இவர்கள் கருதுவதாகவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு கிழக்கு மாகாணம் மீதான அக்கறை நீண்டகாலமாகவே இருந்து வந்தமையும், திருகோணமலை துறைமுகம் மீது அது கொண்டிருக்கும் அக்கறை மற்றும் சிறிலங்காவின் வான்தளங்களை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகள் என்பவற்றையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இத்தருணத்தில் இணைத்து நோக்குவதாகவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தும் இந்தச் சதிமுயற்சியில் அயல்நாடான இந்தியாவின் பங்கு தொடர்பாகவும் இவர்கள் கூடுதல் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

