03-12-2004, 07:39 PM
கருணா - படைத்தரப்பு சந்திப்பு இடம்பெறவில்லை
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட படைத் தளபதிகளுக்கும், கருணாவுக்கும் இடையில் கடந்த 9ஆம் திகதி ஏற்பாடாகியிருந்த பேச்சுவார்த்தை பின்னர் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துடன் கருணா பிரிந்து நிற்பதன் காரணமாக இப்பேச்சுவார்த்தைகளிற்கான ஒழங்குகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாதென போர் நிறுத்தக் கண்காணி;ப்புக் குழுவினர் மறுப்புத் தெரிவித்ததாலேயே இப்பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சிறீலங்கா படைத்துறை பேச்சாளர் சுமேத பெரேரா கருத்து வெளியிடுகையில், கருணா படையினருடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வருவதாகவும், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கிடையே மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட படைத் தளபதிகளுக்கும், கருணாவுக்கும் இடையில் கடந்த 9ஆம் திகதி ஏற்பாடாகியிருந்த பேச்சுவார்த்தை பின்னர் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துடன் கருணா பிரிந்து நிற்பதன் காரணமாக இப்பேச்சுவார்த்தைகளிற்கான ஒழங்குகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாதென போர் நிறுத்தக் கண்காணி;ப்புக் குழுவினர் மறுப்புத் தெரிவித்ததாலேயே இப்பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சிறீலங்கா படைத்துறை பேச்சாளர் சுமேத பெரேரா கருத்து வெளியிடுகையில், கருணா படையினருடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி வருவதாகவும், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கிடையே மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

