03-11-2004, 11:35 PM
ஊடகங்களின் பொய்ப்பரப்புரை நிறுத்தப்பட வேண்டும் -தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
அரச ஊடகங்கள் திட்டமிட்ட ரீதியில் தமிழ்மக்கள் குறித்தும், புலிகள் குறித்தும் மேற்கொள்ளும் பொய்ப்பிரச்சாரங்கள் குறித்த கண்டனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த திரு.சம்பந்தன் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
திருமலைத் தளபதி பதுமன் கொல்லப்பட்டதாகவும், கிழக்கில் ஏற்பட்ட பிரச்சினைகளினால் வெடித்த மோதலின் போது பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இது உண்மைக்குப் புறம்பானதொரு செய்தியாகும். இவ்வாறானதொரு செய்தியை வேறு எந்தவொரு ஊடகமும் வெளியிடமுன்வரவில்லை. இவ்வாறான செய்தியைப் பரப்புவதன் நோக்கம் தமிழ் மக்களைக் குழப்பி, ஏப்ரல் 2ம் திகதிய தேர்தல் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்துவதே.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சகல அதிகாரிகளும், ஊடகங்களிற்குப் பொறுப்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரான திரு.கதிர்காமரும் இந்நடவடிக்கைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
அரச ஊடகங்கள் திட்டமிட்ட ரீதியில் தமிழ்மக்கள் குறித்தும், புலிகள் குறித்தும் மேற்கொள்ளும் பொய்ப்பிரச்சாரங்கள் குறித்த கண்டனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த திரு.சம்பந்தன் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
திருமலைத் தளபதி பதுமன் கொல்லப்பட்டதாகவும், கிழக்கில் ஏற்பட்ட பிரச்சினைகளினால் வெடித்த மோதலின் போது பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இது உண்மைக்குப் புறம்பானதொரு செய்தியாகும். இவ்வாறானதொரு செய்தியை வேறு எந்தவொரு ஊடகமும் வெளியிடமுன்வரவில்லை. இவ்வாறான செய்தியைப் பரப்புவதன் நோக்கம் தமிழ் மக்களைக் குழப்பி, ஏப்ரல் 2ம் திகதிய தேர்தல் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்துவதே.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சகல அதிகாரிகளும், ஊடகங்களிற்குப் பொறுப்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரான திரு.கதிர்காமரும் இந்நடவடிக்கைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

