03-11-2004, 07:59 PM
தலைவர் பிரபாவின் கொடும்பாவி எரிப்புக்கும் தனக்கும் தொடர்பில்லை என்கிறார் சந்திரநேரு
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கொடும்பாவி எரிப்புச்சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அம்பாறை மாவட்ட முன்னாள் எம்.பி.யும் தமிழ் கூட்டமைப்பு தலைமை வேட்பாளருமான அரியநாயகம் சந்திர நேரு கூறியுள்ளார். அண்மையில் ஊடகங்களில் வெளியான பேரணிக்காட்சிகளில் முதலில் கிரானில் இடம்பெற்ற பேரணியும் பின்னர் எனது திருக்கோவிலில் இடம்பெற்ற பேரணியும் காண்பிக்கப்பட்டது. அதில் பிரபாவின் கொடும்பாவி எரிக்கப்பட்ட படக்காட்சிக்கு முன்பாக எமது படக்காட்சி காண்பிக்கப்பட்டதால் அக்கொடும்பாவி எரிப்புக்கு நான் காரணமெனவும் என்முன்னிலையில் எரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
உண்மையில் திருக்கோவிலில் இடம்பெற்ற பேரணியில் நானும்,இன்னும் இரு வேட்பாளர்களும் கலந்து கொண்டோம் அங்கு கொடும்பாவி எரிக்கப்படவில்லை. பேரணி முடிய இடம்பெற்ற கூட்டத்தில் கூட நான் உரையாற்றவில்லை. சக வேட்பாளர் விவேகானந்தன் உரையாற்றினார் ""தலைவரும் தளபதியும் ஒன்றுபடவேண்டும்'' என்ற சுலோக அட்டையையேநான்தாங்கிச்சென்றேன். இது ஊடகங்களிலும் வெளிவந்தமை தெரிந்ததே. இப்படி நிலைமையிருக்க, என்மீது அபாண்டமாக குற்றம்சாட்டுவதை வன்மையாக மறுக்கிறேன் என்றார் அவர்.
நன்றி - வீரகேசரி
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கொடும்பாவி எரிப்புச்சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அம்பாறை மாவட்ட முன்னாள் எம்.பி.யும் தமிழ் கூட்டமைப்பு தலைமை வேட்பாளருமான அரியநாயகம் சந்திர நேரு கூறியுள்ளார். அண்மையில் ஊடகங்களில் வெளியான பேரணிக்காட்சிகளில் முதலில் கிரானில் இடம்பெற்ற பேரணியும் பின்னர் எனது திருக்கோவிலில் இடம்பெற்ற பேரணியும் காண்பிக்கப்பட்டது. அதில் பிரபாவின் கொடும்பாவி எரிக்கப்பட்ட படக்காட்சிக்கு முன்பாக எமது படக்காட்சி காண்பிக்கப்பட்டதால் அக்கொடும்பாவி எரிப்புக்கு நான் காரணமெனவும் என்முன்னிலையில் எரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
உண்மையில் திருக்கோவிலில் இடம்பெற்ற பேரணியில் நானும்,இன்னும் இரு வேட்பாளர்களும் கலந்து கொண்டோம் அங்கு கொடும்பாவி எரிக்கப்படவில்லை. பேரணி முடிய இடம்பெற்ற கூட்டத்தில் கூட நான் உரையாற்றவில்லை. சக வேட்பாளர் விவேகானந்தன் உரையாற்றினார் ""தலைவரும் தளபதியும் ஒன்றுபடவேண்டும்'' என்ற சுலோக அட்டையையேநான்தாங்கிச்சென்றேன். இது ஊடகங்களிலும் வெளிவந்தமை தெரிந்ததே. இப்படி நிலைமையிருக்க, என்மீது அபாண்டமாக குற்றம்சாட்டுவதை வன்மையாக மறுக்கிறேன் என்றார் அவர்.
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

