03-11-2004, 03:21 PM
Egoism
நேற்று நடந்த நிகழ்ச்சி, வாழ்க்கையில் சில கொள்கைகள் சிறந்தது என்று நாம் கடைப்பிடிப்பது எத்தனை தவறா, சரியா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று நண்பர் ஒருவர், அவர் மனைவி மேல் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார். அவளும் எனக்கு நன்கு அறிமுகமானவள். சில வருடங்களாய் அவர்களுக்குள் நிலைமை சரியில்லை என்று தெரிந்தாலும் அவனை சந்திக்கும் தருணங்களில் அவன் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பிறர் விஷயங்களில் நாம் மூக்கை நுழைக்கக்கூடாது என்ற கொள்கையால் நாங்களும் கேட்கவில்லை.நன்குதெரிந்தவர்களே தவிர நண்பர்கள் இல்லை.
பத்து நாட்களுக்கு முன்பு அவன் கோர்ட்டு தீர்ப்புப்படி மூன்று வருஷத்திற்கு பிறகு குழந்தையை சந்திக்கப் போக போவதாகவும், எங்கள் இருவரை வர முடியுமா என்றும் கேட்டான். நாங்கள் இருவருக்கும் தெரிந்தவர்கள் என்பதால் ஏதாவது பேசிப்பார்ப்போம் என்று சரி என்றோம். காரில் புறப்படும் போதுதான், அவன் தன் பக்கத்து ஞாயத்தை சொல்லிக்கொண்டு வந்தான். நான் அவன் மனைவியிடம் பேசி பார்க்கட்டா, சமாதானத்தில் உங்களுக்கு விருப்பமா என்றுக் கேட்டேன். அவனும் சரி என்றான். அங்குப் போனவுடன், அவளே குழந்தை( ஐந்து வயது)யுடன் வந்திருந்தாள். என்னைப் பார்த்தவுடன் குசலம் விசாரித்தவள், அவன் குழந்தையை தூக்கியவுடன், அவள் அழுகையுடன் மடமடவென்று அங்கிருந்துப் போய் விட்டாள். இரண்டரை வயதில் பார்த்த குழந்தை, ஐந்தரை வயதில் தந்தையை மறக்கவில்லை. ஆனால் அதன் முகத்தில் ஆழ்ந்தகவலை, யோசனை. கொஞ்சம் அன்ஈஸியாய் இருந்தது. ஐந்து மணி நேரம் அங்கு இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் அவர்களை விட்டுவிட்டு அந்த பெண் அங்கு எங்காவது இருக்கிறாளா என்று சுற்றி வந்தோம். ஆனால் இல்லை. போட்டோ மற்றும் வீடியோவில் அவர்கள் இருவரையும் படம் எடுத்துக் கொண்டு அந்த பார்க்கில் இருந்தோம். நேற்று வெள்ளிக்கிழமை, அதனால் காலை பதினொன்றரை மணிக்கு எல்லா கடைகளும் சாத்திவிடுவார்கள். குழந்தை கேட்டதற்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தது. ஆனால் தந்தைக் கொண்டு வந்த ஏராளமான பரிசுகள், தின்பண்டங்கள் எதையும் தொட மறுத்துவிட்டது.
இரண்டு மணி நேரம் கழித்து, அதன் முகத்தைப் பார்த்து அம்மாகூட பேச வேண்டுமா என்று கேட்டேன். அதுவும் ஆமாம் என்றது.
எங்கள் மொபலில் இருந்து பேச சொன்னேன். பிறகு நான் வாங்கி எப்படி இருக்கிறாய் என்றதும், அந்தப் பெண் விட்டேற்தியாய் பேசினாள். நான் ஏன் மடமடவென்று போய்விட்டாய், நான் உன்னுடந்தான் பேச வந்தேன் என்றேன். அதற்கு அவள் சொன்னது- இவ்வளவுநாள் எங்கே இருந்தாய்? எல்லாம் முடிந்த பிறகு இப்போது பேசி என்ன பயன் என்றாள். எவ்வளவு சரி, அவள் சொன்னது. பிறர் விஷயம் என்று ஒதுங்கியிருந்தது எவ்வளவு தப்பு என்று மன வேதனை அடைந்தேன். நீங்கள் இருவரும் ஒன்றும் சொல்லாததால், நாங்கள் கேட்கவில்லை. ஏதாவது கேட்கப்போய், இது எங்கள் சொந்த விஷயம், நீங்கள் யார் தலையிட என்று சொல்லலாம் இல்லையா என்றேன். பிறகு அவள் பக்கத்து ஞாயத்தை ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அவள் சொன்னதை இவனிடம் சொல்லும்போது ஒன்று தெளிவாய் புரிந்துப்போனது. யாரும் எதுவும் செய்ய முடியாது. இருவரும் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு, குழந்தைக்காக ஏதாவது செய்தால்தான் உண்டு. இதில் இரண்டு பக்க பெற்றோர்களின் கைங்கரியம்தான் அதிகம். இருவருக்கும் மூட்டிவிட்டதே இந்த இரண்டு வயதான அப்பாக்கள்தான். அதை எடுத்து சொன்னால் இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களே தான் முடிவு எடுக்கவேண்டும்.நடுவில் ஒருவரால் எதுவும் செய்யவும் முடியாது என்பது மட்டும் எங்களுக்கு தெளிவாய் புரிந்தது. தன் குழந்தைதனத்தை இழந்து கவலையுடன் அந்த ஐந்து மணி நேரத்தை
கழித்த அந்த குழந்தையின் முகம் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது
நன்றி - இராமச்சந்திரன் உஷா
குறிப்பு - எனக்கு ஈகோவுக்கு (Ego) தமிழ் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி
நேற்று நடந்த நிகழ்ச்சி, வாழ்க்கையில் சில கொள்கைகள் சிறந்தது என்று நாம் கடைப்பிடிப்பது எத்தனை தவறா, சரியா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று நண்பர் ஒருவர், அவர் மனைவி மேல் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார். அவளும் எனக்கு நன்கு அறிமுகமானவள். சில வருடங்களாய் அவர்களுக்குள் நிலைமை சரியில்லை என்று தெரிந்தாலும் அவனை சந்திக்கும் தருணங்களில் அவன் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பிறர் விஷயங்களில் நாம் மூக்கை நுழைக்கக்கூடாது என்ற கொள்கையால் நாங்களும் கேட்கவில்லை.நன்குதெரிந்தவர்களே தவிர நண்பர்கள் இல்லை.
பத்து நாட்களுக்கு முன்பு அவன் கோர்ட்டு தீர்ப்புப்படி மூன்று வருஷத்திற்கு பிறகு குழந்தையை சந்திக்கப் போக போவதாகவும், எங்கள் இருவரை வர முடியுமா என்றும் கேட்டான். நாங்கள் இருவருக்கும் தெரிந்தவர்கள் என்பதால் ஏதாவது பேசிப்பார்ப்போம் என்று சரி என்றோம். காரில் புறப்படும் போதுதான், அவன் தன் பக்கத்து ஞாயத்தை சொல்லிக்கொண்டு வந்தான். நான் அவன் மனைவியிடம் பேசி பார்க்கட்டா, சமாதானத்தில் உங்களுக்கு விருப்பமா என்றுக் கேட்டேன். அவனும் சரி என்றான். அங்குப் போனவுடன், அவளே குழந்தை( ஐந்து வயது)யுடன் வந்திருந்தாள். என்னைப் பார்த்தவுடன் குசலம் விசாரித்தவள், அவன் குழந்தையை தூக்கியவுடன், அவள் அழுகையுடன் மடமடவென்று அங்கிருந்துப் போய் விட்டாள். இரண்டரை வயதில் பார்த்த குழந்தை, ஐந்தரை வயதில் தந்தையை மறக்கவில்லை. ஆனால் அதன் முகத்தில் ஆழ்ந்தகவலை, யோசனை. கொஞ்சம் அன்ஈஸியாய் இருந்தது. ஐந்து மணி நேரம் அங்கு இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் அவர்களை விட்டுவிட்டு அந்த பெண் அங்கு எங்காவது இருக்கிறாளா என்று சுற்றி வந்தோம். ஆனால் இல்லை. போட்டோ மற்றும் வீடியோவில் அவர்கள் இருவரையும் படம் எடுத்துக் கொண்டு அந்த பார்க்கில் இருந்தோம். நேற்று வெள்ளிக்கிழமை, அதனால் காலை பதினொன்றரை மணிக்கு எல்லா கடைகளும் சாத்திவிடுவார்கள். குழந்தை கேட்டதற்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தது. ஆனால் தந்தைக் கொண்டு வந்த ஏராளமான பரிசுகள், தின்பண்டங்கள் எதையும் தொட மறுத்துவிட்டது.
இரண்டு மணி நேரம் கழித்து, அதன் முகத்தைப் பார்த்து அம்மாகூட பேச வேண்டுமா என்று கேட்டேன். அதுவும் ஆமாம் என்றது.
எங்கள் மொபலில் இருந்து பேச சொன்னேன். பிறகு நான் வாங்கி எப்படி இருக்கிறாய் என்றதும், அந்தப் பெண் விட்டேற்தியாய் பேசினாள். நான் ஏன் மடமடவென்று போய்விட்டாய், நான் உன்னுடந்தான் பேச வந்தேன் என்றேன். அதற்கு அவள் சொன்னது- இவ்வளவுநாள் எங்கே இருந்தாய்? எல்லாம் முடிந்த பிறகு இப்போது பேசி என்ன பயன் என்றாள். எவ்வளவு சரி, அவள் சொன்னது. பிறர் விஷயம் என்று ஒதுங்கியிருந்தது எவ்வளவு தப்பு என்று மன வேதனை அடைந்தேன். நீங்கள் இருவரும் ஒன்றும் சொல்லாததால், நாங்கள் கேட்கவில்லை. ஏதாவது கேட்கப்போய், இது எங்கள் சொந்த விஷயம், நீங்கள் யார் தலையிட என்று சொல்லலாம் இல்லையா என்றேன். பிறகு அவள் பக்கத்து ஞாயத்தை ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அவள் சொன்னதை இவனிடம் சொல்லும்போது ஒன்று தெளிவாய் புரிந்துப்போனது. யாரும் எதுவும் செய்ய முடியாது. இருவரும் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு, குழந்தைக்காக ஏதாவது செய்தால்தான் உண்டு. இதில் இரண்டு பக்க பெற்றோர்களின் கைங்கரியம்தான் அதிகம். இருவருக்கும் மூட்டிவிட்டதே இந்த இரண்டு வயதான அப்பாக்கள்தான். அதை எடுத்து சொன்னால் இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களே தான் முடிவு எடுக்கவேண்டும்.நடுவில் ஒருவரால் எதுவும் செய்யவும் முடியாது என்பது மட்டும் எங்களுக்கு தெளிவாய் புரிந்தது. தன் குழந்தைதனத்தை இழந்து கவலையுடன் அந்த ஐந்து மணி நேரத்தை
கழித்த அந்த குழந்தையின் முகம் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது
நன்றி - இராமச்சந்திரன் உஷா
குறிப்பு - எனக்கு ஈகோவுக்கு (Ego) தமிழ் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

